ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

ஆகாசின் ”என் கனா உன் காதல்” குறும்படத்தில் நான் ரசித்தவை

PM 9:42 - By ம.தி.சுதா 0

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

மிகக் குறைந்த வளங்கள், அடிப்படை சினிமா கற்கை எதுவும் இல்ல பூமியான எம் தேசத்தில் இருந்து வரும் குறும்படங்களில் சின்ன சின்ன வளர்ச்சி கூட தட்டிக் கொடுக்கப்பட வேண்டியவையே...
அந்த வகையில் இன்று செல்லா திரையரங்கில் நான் ரசித்த ஆகாசின் ”என் கனா உன் காதல்” பற்றி பேசியே ஆக வேண்டும்.
முதலில் முன்னரே ரசிக்க வைத்த இடம் குறும்படத்துக்கான தலைப்பாகும். கதையின் மொத்தக் கருவையும் தலைப்புக்குள் உள்ளடக்கியிருக்கிறார்கள்.
படப்பிடிப்பில் தென்னிந்திய அரங்கில் இருந்து 5D mark போன்ற கமராக்களில் இருந்து படங்கள் வந்திருந்தாலும் அவர்களிடம் இருக்கும் Lens வசதி போல இங்கில்லை அதனால் DSLR camera வில் படம் பிடிப்பது என்பதே சவாலான ஒரு விடயமான நிலையில் இருக்கும் வளத்தை வைத்து திரையரங்குக்கான தரம் ஒன்றை வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். சரியான லென்ஸ் இல்லை என்று பட்ப்பிடிப்பு செய்த சசிகரன் தனிப்பட்ட ரீதியில் கூறியிருந்தாலும் சில இடங்களைத் தவிர அவர் தன்னால் இயன்றவரை வெற்றி கண்டிருக்கிறார்.

அடுத்ததாக கவர்ந்த விடயம் நடிப்பு ஆகும். தனது சொந்தக் கதை என்பதாலோ தெரியவில்லை நடிகர் விஷ்ணு கதாபாத்திரமாகவே அப்படியே படத்திலும் சரி மனதிலும் சரி ஒட்டிக் கொண்டிருக்க...

என்னை வியப்பாக பார்க்க வைத்தவர் நடிகை நிரோசா வாகும். நான் பார்த்த எம்மவர் குறும்படங்களில் முதன் முதலாக ஒரு நடிகையின் romantic நடிப்பை முழுமையான பார்த்த ஒரு திருப்தியைக் கொடுத்தார். படத்தின் மிகப் பெரிய பலமே அவரது பேச்சும் பேச்சுக்கு முதலே பேச வந்ததை பேசிய கண்களும் தான்...

அடுத்ததாக பேச வேண்டிய விடயம் பின்னணி இசையாகும். அடையாளமாக பேச எமக்குள் பல பாடல்கள் இருந்தாலும் பின்னணி இசைக்காக பேசப்பட்ட படங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் அவதானித்தவரையில் பின்னணி இசையில் ரொமான்டிக் படம் ஒன்றில் என்னை இரண்டாவது தடவையாக இசையமைப்பாளர் சுதர்சன் அண்ணா கட்டிப் போட்டிருந்தார். இதற்கு முன்னர் மயன், வினோ அண்ணா, ஜெயதீபன் ஆகியோரின் படைப்பாக வந்த "Unwanted love" ல் புகுந்து விளையாடியிருந்தார். இயற்கை இசைக்கனா இடைவெளியின் போதாமை உணர்வு ஒன்று எனக்குள் இருந்தாலும் குறையாக பார்க்க அவர் இடம் வைக்கவில்லை. படத்தின் இறுதிக் காட்சியில் சந்தோசம், புத்துணர்ச்சி என அவர் கலந்திட்ட இசையின் மெட்டை ஒரே ஒரு தடவை தான் கேட்டிருந்தாலும் இப்போதும் என்னால் பாடிக் காட்ட முடிகிறது.

படத்தில் புதிய கதை என சொல்வதற்கு எதுவும் இல்லை ஆனால் அக்கதையை எமக்கு சொன்ன விதம் தான் படத்தை பலமாக்கியது எனலாம். ஆனால் என் அவதானிப்பின்படி ஒன்றை மட்டும் தெளிவாகச் சொல்வேன் எடிட்டிங் மேசையில் வைத்துத்தான் திரைக்கதை முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. எதை வைத்துச் சொல்கிறேன் என்றால் முதலே திரைக்கதை திட்டமிடப்பட்டமைக்கான காட்சியமைப்புத் திருப்திகள் காணப்படவில்லை.

மொத்தத்தில் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த காதல் படங்களுக்குள் மேம்பட்ட ஒரு படமாக ”என் கனா உன் காதல்” முன்னுக்கு வந்திருப்பதை சந்தோசமாக பார்க்கிறேன்.
இப்படத்திற்கு மிகவும் பலம் சேர்த்தவை 3 விடயங்கள் தான்.
1. திரைக்கதை
2. நிரோசா
3. பின்னணி இசை
இப்படைப்புக்காக உழைத்த ஆகாஷ், விஸ்ணு, நிரோசா, சசிகரன், ஆதன், சுதர்சண்ணா, கிருத்திகன் இவர்களோடு பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

0 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top