Featured Articles
All Stories

வியாழன், 27 மார்ச், 2014

இணைய வாக்கெடுப்புகளில் கள்ள வாக்கிடுவது எப்படி?

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
அண்மைய ஒரு சில நாட்களாக கிடைத்த நேரப் பொழுதை வாசிப்பிற்கும் எழத்துக்கும் செலவழித்ததால் என் வலைப்பக்கத்தை தூசு தட்டியிருக்கிறேன்.
 
வலையுலகின் ஆரம்ப காலங்களில் பதிவர்கள் பிரபலமாக்க வாக்கிடல் முறையை திரட்டிகள் அறிமுகமாக்கியிருந்தது. அக்காலத்தில் நடந்த குளறுபடிகளால் உசாரான திரட்டிகள் நுட்பமான முறையை அறிமுகப்படுத்தியது. அக்காலத்தில் தான் எமது வலையுலக அறிமுகம் ஆரம்பமானது.
ஆரம்ப காலத்தில் இதற்கான தேடலிலேயே களைத்து விழுந்து ஏமாந்திருக்கிறோம். அப்போது கண்டறிந்த விடயங்களில் ஒன்று தான் இந்த கள்ள விளையாட்டுமொன்றாகும்.
இணையத்தில் pollsnack போன்ற தளங்கள் இப்படியான வாக்கெடுப்புக்கான நிரலிகளை வைத்திருக்கின்றன. அதில் குறிப்பிட்ட சில வேட்பாள மகுடங்கள் இடப்படும். அதற்கு வாக்கிட்ட பின்னர் நீங்கள் எத்தனை தடவை அந்த தொடுப்பிற்கு சென்றாலும் வாக்கு விபரங்கள் காட்டுமே தவிர உங்களுக்கு வாக்கிட அனுமதியில்லை.
அப்படியானால் எப்படி திருட்டு வாக்கிடுவது?
வாருங்கள் சொல்கிறேன். உதாரணத்திற்கு google chrome இணைய உலாவியை எடுத்து விளக்குகிறேன்.
வாக்கிட்ட பின்னர் அதன் setting பகுதிக்கு செல்லுங்கள்.

அங்கே advance setting என்பதை சொடுக்கினால் இப்படி வரும்
அதன் பின்னர் clear browsing data என்பதை சொடுக்கினால் இப்படி வந்திருக்கும்
அதில் the past hours என்பதை சொடுக்கி வைத்திருந்தால் எமது பழைய வரலாறுகள் கடவுச் சொற்கள் அழிக்கப்படாமல் இருக்க கடந்த மணித்தியாலத்துக்குள் நாம் அடித்த கூத்துக்கள் மட்டும் அழிக்கப்படும்.

அதன் பின்னர் மற்றைய tab ல் இருக்கும் poll (voting button) ஐ reload செய்யுங்கள் அல்லது ctrl+r கொடுங்கள் மீண்டும் வாக்களிக்கலாம்.
இதை படிக்கும் போது பெரிய விசயமாக இருக்கும். அனால் செய்ய வெளிக்கிட்டால் நிமிடத்துக்கு 10 வாக்கிற்கு குறையாமல் இடலாம்.

முக்கிய குறிப்பு - தன்னிச்சையாகவே திருட்டு வாக்கிடச் செய்யக் கூடிய தானியங்கி நிரலிகளும் இருக்கிறது.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
AM 12:29 - By ம.தி.சுதா 4

4 கருத்துகள்:

செவ்வாய், 25 மார்ச், 2014

Missed Call போடும் நண்பனை பழி வாங்குவது எப்படி?

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
இந்த பதிவானது 2011 ம் ஆண்டு நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்படுகிறது.

அக்காலம் வன்னிப்பிடியின் மீட்சிக்கு பின்னர் வெளியே தலைகாட்ட ஆரம்பித்த நேரம். அந்நேரம் wall painter ஆகாவும் வலைத்தள எழுத்தாளராகவும் காலத்தை ஓட்டிய நேரகாலமாகும்.
சில உறவுக்கார பையன்களுடன் தான் வேலைக்கு போவேன். பின்னர் இரவு வந்து இணையப்பயணம் அதன் பிறகு தூக்கம். அதுவும் oil paint (enamal) அடித்தால் மறு நாள் கண் ரெண்டும் வெளியே வந்து நிற்கும்.
(இதெல்லாம் சுய புராணம் போல இருக்கும் ஆனால் இதை சொல்வதற்கான காரணம் அந் நண்பனுக்கு இப்படி ஒரு துரோகம் செய்ததற்கு காரணம் பயில வேண்டும் அல்லவா)
அப்படி படுக்கும் நேரம், சாமம் கடந்த பின்னர் ஒரு தொலைபேசி அழைப்பு வரும் எழும்பி பார்தால் அழைப்பு துண்டிக்கப்பட்டு விடும். அதையும் விட கேவலமாக நித்திரை வெறியில் கைப்பேசியை எடுத்து காதில் வைத்தால் இலங்கை தனியார் வானொலி பாணியில் அன்றைய செய்திகள் அனைத்தையும் சொல்லி முடிப்பான்.
எத்தனையோ நாள் சொல்லி, திட்டி, அடித்து எது செய்தும் வேலைக்கு ஆகவில்லை. ஒரு நாள் நானும், கஜனும், சிந்துவும், சீலனும் என்ன செய்தோம் என்றால் ஒரு விடயமாக யாழ்ப்பாணம் போய்விட்டு மோட்டர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தோம் அப்போது தான் அந்த ஐடியா உதித்தது.
படத்தை பாருங்கள் தெரியும்.
வல்லை சந்தியில் இருக்கும் பேருந்து தரிப்பு நிலையத்தில் இப்படி எழுதித் தொலைத்தோம். மாஞ்சான் என்றால் உள் ஊர் பாசையில் விபச்சாரி என அர்த்தம். அதன் பிறகு தானாகவே வந்து சொல்வான் “கண்டபடி போன் வருகுதடா ஆரோ ஒரு பெட்டையின் பேரை சொல்லி தப்பாக கேட்கிறாங்கள்” 4 பேரும் மனதுக்குள் சிரித்துக் கொள்வோம். அதன் பிறகு சொல்லவா வேண்டும் கொஞ்ச நாள் தொலைபேசியை அணைத்து வைத்துக் கொண்டான்.


சரி இப்போது எங்கள் விடுப்புக்காரர் மனதுகளில் அந்த விடுகாலி யார் என்ற கேள்வி வருமே. என் திரைக்குழுவில் இருக்கும் ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகன் ஒருவன் தான் அது. கரன் என்பது அவன் பெயர். எனக்கு பிரான்சில் விருது பெற்றுக் கொடுத்த “சுவர் தேடும் சித்திரம்“ பாடலிலும், படத்தொகுப்பில் இருக்கும் “தாத்தா“ குறும்படத்திலும் முக்கிய பாத்திரமாக நடித்திருக்கிறான்.



நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
PM 9:30 - By ம.தி.சுதா 5

5 கருத்துகள்:

வெள்ளி, 14 மார்ச், 2014

மலேசிய MH370 சொன்ன நிமிடக் கதை

முல்லைத்தீவின் கடற்கரையில் முதுகை மணலில் உலர்த்திக் கொண்டிருந்த சாந்தனுக்கு ஒரு வாரமாகியும், கடலில் தான் கண்ட வெளிச்ச வீழ்ச்சியை மறக்க முடியவில்லை . எல்லோரும் சொல்லிக் கொள்கிறார்கள். முல்லைத்தீவுக் கடலில் ஏதோ ஒன்று வெளிச்சத்தோடு வந்து விழுந்தது என்கிறார்கள். ஆனால் யாரும் நம்ப தயாரின்மையால் அலை போல கதையும் கரையோடு ஓய்ந்து போனது.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் தான் மலேசியாவின் MH370 காணாமல் போனது என செய்திகள் வேறு பரபரப்பாக போய்க் கொண்டிருக்கையில் இந்த கதை அமைதியாய் அமுங்கி போக ஆரம்பித்திருக்கிறது.
தலைமாட்டில் யாரோ நடக்கும் அசுமாத்தம் கேட்டதால் சற்று எம்பி பார்த்தவன் முகத்தில் சந்தேக ரேகைகள், ஆங்கிலப்படங்களில் பார்த்த பிச்சைக்காரர் போல அரை குறை தாடியுடன்  ஒரு வெள்ளையன் சோர்ந்து போய் அமர்கிறான்.
அவனுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் வினாவினால் அவன் சொன்ன பதில் “MH370“ ல் தவறியவனாம் ஒரு வாரமாக கடலில் கிடைத்த மரக்கட்டையை பிடித்து கரையேறியதாக” சொன்னான்.
அருகில் இருந்த வீட்டில் போய் அவனுக்கு தாகசாந்தி செய்து ஆசுவாசப்படுத்திய போது பேச ஆரம்பித்தான்.
“தான் ஒரு விஞ்ஞான பேராசிரியராம். தமது விமானம் கருந்துளைக்குள் தான் போனது ” என அரை குறை தொனியில் உளறிக் கொண்டிருந்தான்.
அதை விட குளம்பிப் போயிருந்த சாந்தன் இப்போது 119 ற்கு அழைப்பெடுத்து தானும் ஏதோ உளறிக் கொண்டிருக்கிறான்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்

ம.தி.சுதா

குறிப்பு - time related theory தெரிந்தவர்கள் இதில் எத்தனை வகை உள்ளடக்கப்பட்டிருக்கிறது என சின்ன விளக்கம் தந்தால் நானும் ஒரு முடிவுக்கு வரலாம்.
PM 11:43 - By ம.தி.சுதா 0

0 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top