Featured Articles
All Stories

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

தமிழர் பண்பாட்டைக் கொச்சைப்படுத்தும் இஸ்லாமிய பதிவர்கள்


வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
இப்போதெல்லாம் இணையப்பக்கம் எட்டிப் பார்க்கவே சரியாக நேரம் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும் மெயில்களை பார்ப்பதோடு காலம்கழிகிறது. சரி விடயத்திற்கு வருவோம்.
இந்தப் பதிவானது இஸ்லாமிய சகோதரர் பலருக்கு கடுப்பை ஏற்றும் ஆனால் ஒரு முறை ஆறுதலாக படித்த பின்னர் கருத்துக்களையும் உங்கள் தொடுப்புக்களையும் இடுங்கள்.
தமிழ் நாட்டு பதிவுலகத்தில் ஒரு சில அரைவேக்காட்டு இஸ்லாமிய மேதைகள் மற்றைய மதங்களை கொச்சைப்படுத்திக் கொண்டு அலைந்து திரிவது பலரும் அறிந்ததே.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்தது போல இந்தளவு நாளும் மதங்களைத் தாக்கி வந்தவர்கள் இன்று ஒரு இனத்தின் பண்பாட்டை கொச்சபை்படுத்தும் அளவுக்கு முன்னேறி விட்டார்கள்.
இஸ்லாமிய அமைப்புகள் பல இருந்தும் இதைக் கண்டும் காணாமல் விட்டு இருப்பது எதிர்காலத்தில் அம் மதத்தின் மீதான ஒரு பெரும் காழப்புக்கு வழிவகுக்கும் என்பது அசைக்கமுடியாத கருத்தாகும்.
பல பண்பாடுகளுக்கு பெயர் போனது எம் தமிழ் இனம். செம்மொழிகளுக்குள் அங்கீகரிக்கப்பட்டதுடன் தொல்காப்பியம் என்னும் பெரும் இலக்கணவிளக்கம் கொண்ட நூலையும் கொண்டிருக்கிறது. இவையனைத்தையும் கொண்டிருக்கும் எமக்குள் உள்ள பண்பாடுகளில் ஒன்று விருந்தோம்பல் என்ற பண்பாடாகும்.
அதில் உணவு பரிமாறல் என்பது மேற்கத்தையவரே வியக்கும் ஒரு ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகும். இப்படியான இடங்களில் வாழை இலை போட்டு பரிமாறுகையில் உணவு அருந்தி முடிந்ததும் ஒரு பழக்கத்தை கையாள்வார்கள். அதாவது திருமணம், பூப்புனித நீராட்டு விழா போன்ற சந்தோசமான இடங்களில் உணவருந்தி முடிந்ததும் தம் பக்கம் இலையை மடித்து விட்டு எழுந்து செல்வார்கள். அதே போல துக்க சம்பவம் நடந்த இடங்களானால் பரிமாறியவர் பக்கம் இலையை மடித்து விட்டு எழுந்து செல்வார்கள்.
இதன் விளக்கம் என்றால் சந்தோசத்தை நாங்களும் பெற்றுக் கொள்கின்றோம் அதே போல துக்க நிகழ்வென்றால் இப்படி ஒரு சம்பவம் இனியும் உங்களுக்கு வேண்டாம் என்பதற்காக இப்படிச் செய்வோம்.
இந்தச்சம்பவத்துக்கான ஆரம்பம் சென்னைப் பதிவர் சம்பவத்துடன் ஒரு சிறிய புகைப்படத்துடன் பிலேசபி பிரபாகரன் எதற்கோ போட்டதிலிருந்து ஆரம்பித்திருக்கிறது. இதற்கான விளக்கத்தை மகேந்திரன் அண்ணா கொடுத்திருந்த போது தரவிறக்கப்பட்ட அந்த குழு என்னவொரு வில்லங்கம் பண்ணுகிறது தெரியுமா?
துக்க வீடுகளில் இப்படி செய்வதால் செத்தவர் உயிர் கிடைத்து விடுமா? இதெல்லாம் ஒரு மூட நம்பிக்கை என ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். அதற்கு அஞ்சா சிங்கம் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். ”அப்படியானால் நீங்கள் போகும் இடம் எல்லாம் சாந்தியும் சமாதானமும் நிலவுக” என்கிறீர்களே நீங்கள் சொன்னதும் அப்படியே நடக்குமா?” என்றதற்கு யாருமே பதிலளிக்கவில்லை.
முதலில் ஒன்றை விளங்கிக் கொள்ளுங்கள் மூடநம்பிக்கை என்பது வேறு, பண்பாடு என்பது வேறு. இதையே ஒரு வேற்று மொழிக்காரன் சொல்லிருந்தால் பேசாமல் விட்டு விட்டு போகலாம். இல்லாவிடில் நீங்கள் அரபையோ அல்லது உருதையோ பேசிக் கொண்டு சொல்லியிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நீங்களே பேசும் ஒரு மொழியின் பண்பாட்டை கொச்சைப்படுத்தும் தகுதி உங்களுக்கு துளி கூட வழங்கப்படவில்லை. எத்தனை இஸ்லாமிய சகோதரர்கள் தமிழுக்காகவும் இலக்கியத்துக்காகவும் உழைக்கிறார்கள் என்பது தெரியுமா?
இன்று கூட இலங்கையில் தமிழ் மாணவர்களுக்கான அதிகளவு நூலை எழுதியவர் கூட ஒரு இஸ்லாமிய ஆசான் தான்.
அரைவேக்காட்டு இஸ்லாமிய மேதைகளே உங்கள் மதப்பரப்பல் மொக்கதை் தனத்துக்காக உங்கள் இனத்தவரின் உழைப்பையே கேள்விக்கிடமாக்காதீர்கள்.
இப்படி நீங்கள் செய்வதால் எங்கள் பண்பாடு என்றைக்குமே சீர்குலையாது. 1050 வருசமாக ஆடும் உங்களுக்கு இந்தளவு தார்ப்பரியம் என்றால் இதை விட பல மடங்கு தார்ப்பரியம் கொண்ட எங்களுக்கு எவ்வளவு இருக்கும்.
நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா
படங்கள் - நன்றி கூகுல்

56 கருத்துகள்:

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

விட்ட குறையும் தொட்ட குறையும் (சிறுகதை)


முற்குறிப்பு - இச்சிறுகதையானது (அளவு குறுங்கதை தான்) நேற்றைய தினம் வெளியான தினக்குரல் பத்திரிகையில் வெளியாளது. எனக்கு ஊக்கமளிக்கும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி)

நேரமோ 4.30 ஐ கடந்து கொண்டிருந்தது. தொடர் நாடக கடமைக்காக காலையே கடமைக்கு திரும்பிய தொலைக்காட்சி திரைப்பட நேரத்தையும் பூர்த்தி செய்து கொண்டு இரவுக்கடமைக்கு ஆயத்தமாவதற்காக ஓய்வெடுத்தக் கொண்டிருந்தது.

ஆறுமணிக்கு முதல் போசனக் கடமையை முடிக்க வேண்டுமென்ற அவசரம் சமையலறையில் நடந்து கொண்டிருந்த வாத்தியக் கச்சேரியில் தெளிவாகத் தெரிந்தாது. இருந்தாலும் நான் கொடுத்த தேநீருக்கான ஓடர் ஏற்கப்பட்டிருந்தாலும் அது வந்து சேர்வதாய் இல்லை. மீள வலியுறுத்துமளவுக்கு என்னிடம் திரணியில்லை.

பத்திரிகையின் செய்திகள் கடந்து சிறு விளம்பரங்களையும் விழுங்கி எஞ்சியிருக்கும் மரண அறிவித்தல்களையும் என் விழி தின்று கொண்டிருந்தது எப்போது பணத்துக்காக இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டேனோ அந்த அன்றே என் மானம், சூடு, சுறணை எல்லாம் காவு கொடுக்கப்பட்டு விட்டது. அந்தளவு லட்சங்களுக்கு அம்மாவால் விற்கப்பட்டதற்காக என் ஆண்மையை நிருபிக்க 4 பிள்ளைகளை மட்டுமே என்னால் பெற முடிந்தது.

காலாற ஒரு எட்டு வெளியே போய் வருவோமென்றால் நிச்சயம் அவள் இந்நேரம் வாசல்படியில் இருந்து தன் மகளுக்கு பேன் பார்த்துக் கொண்டிருப்பாள். என் வீட்டில் எதுவுமே என் மூப்பில் நடப்பதில்லை என்பதற்கு முன் வீட்டில் குடியமர்த்தப்பட்டிருக்கும் அந்த வாடகை வாசிகளின் பிரவேசமும் நல்ல உதாரணமே. இவளும் என்ன நினைத்தாளோ தெரியவில்லை அவளையே தேடிப்பிடித்து முன் வீட்டில் அமர்த்தியிருக்கிறாள்.

என் இளமை நாட்கள் எவ்வளவு இனிமையானவை. நான் காதல் சிறகுவிரித்த நாட்களை என்றுமே மறக்க முடியாது. அவள் வறிய குடும்ப பெண்ணாக இருந்தாலும் என் வீட்டில் எதிர்ப்பில்லாது போனது எல்லைகளையே கடந்த காதலாக மாற வைத்தது. கால ஓட்டம் செய்த சதியால் எல்லாம் மாற்றப்பட்டு விட்டது. சிலவேளை பிள்ளையின் எதிர்காலத்துக்காக அம்மா அப்படி செய்திருக்கலாம். பணமிருக்குமிடத்தில் குணமிருக்குமா என்பதை சிந்திக்காமல் விட்டதை எண்ணி அவர் இறுதி நேரத்திலும் வருத்தப்பட்டுக் கொண்டார்.
'டங்' என்ற ஒலியைக் கேட்டு திரும்பிப் பார்த்தேன் காலடியில் முக்கால் குவளை அளவுடன் பால் தேநீர் இருந்தது.
'ஏன் தேத்தணியை தந்திருக்கலாமே, அதுவும் முட்ட தந்திருந்திருக்கலாமே' இறுதிச் சொற்களை சற்று விழுங்கியபடியே கூறி முடித்தேன்.
'பரதேசிக் குடும்பம்.... சின்னனிலேயே இதுகளை குடிச்சிருந்தால் தானே நல்லதுகளைத் தெரியும். நாளையில இருந்து கோடிக்கை இருக்கிற வாளியை கழுவி வையுங்கோ உண்டண ஆத்தித் தாறன்' படார் என கன்னத்தில் அடித்தது போல பதில் வந்தது. மறுபேச்சின்றி மௌனமாகிக் கொண்டேன்.

இன்றாவது அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மனது சொல்லிக் கொண்டே இருந்தது. இந்நேரம் அவள் தலைவாரி முடித்திருப்பாள் மகளும் கிளம்பியிருப்பாள். மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற உந்துதலில் பாதி தேநீருடனேயே குவளையை பகிஸ்கரிப்பு செய்து கொண்டு கிளம்பினேன். அந்த உந்துதலில் எறும்பால் வரப் போகும் சிக்கலை நான் உணர மறந்தது என் தப்புத் தான்.

18 வருடமாக மனதில் புழுங்கிய விடயத்தை இன்று கொட்டி விட வேண்டும் என்ற முனைப்பு மட்டுமே மனதில் இருந்தது. அவளை காத்திருக்கச் சொல்லி விட்டு அரபு தேசம் போனதன் பிற்பாடு அம்மாவின் கடிதத்தில் அவள் யாரோடையோ போயிட்டாள் என்ற தகவல் மட்டுமே கிடைத்தது. நானும் திரும்பி வந்து தேடாத இடமே இல்லை ஆனால் அவள் பற்றி எதுவுமே அறிய முடியவில்லை.
படலையை திறந்து கொண்டு உள்ளே நுழைகிறேன். அவள் மகள் என்னை விலத்திக் கொண்டு போகிறாள். அவளது அதே முகவெட்டு ஆனால் அவள் நடை மட்டுமே என்னை மிகவும் உறுத்தியது காரணம் என் நடை போலவே இருந்தது.
அவள் வாசல் படியில் அமர்ந்து நகம் வெட்டிக் கொண்டிருந்தாள்.
'வந்து இவ்வளவு நாளாகியும் வரவில்லையே என குறை நினைக்க வேண்டாம்'
'இல்லை பரவாயில்லை' அவள் எழுந்தவாறே கூறினாள். சற்று உடம்பு பருத்து தலையில் அங்காங்கே நரையோடியிருந்தது.
'உன்னட்டை ஒன்று சொல்லவேணும்'
'இல்லை எனக்கு வேலை இருக்கிறது' அவளை வாய்திறக்க விடாமல் சொல்லி முடிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கூற ஆரம்பித்தேன்.

'ஒன்றும் சொல்ல வேண்டாம் நடந்த தப்புக்கெல்லாம் நான் தான் காரணம். நான் செய்த பிழைக்கு மனதார மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுறன். அம்மா தான் நீ யாரோடையோ... என தப்பா சொன்னதால நானும் மாற வேண்டியதப் போச்சு'

'அடடா அந்தப் புண்ணியவான் நீங்கள் தானா?' எனக்கு நெஞ்சு ஒரு முறை பக்கென்றது. இவளுக்கு என்ன நடந்திருக்கும்.

'மன்னிக்க வேணும் அது வேற யாருமில்லை என்ர அக்கா தான். நீங்கள் வெளிநாட்டில வேற கலியாணம் செய்திட்டதாக உங்கட அம்மா ஒரு படம் காட்டினவா. அக்கா அப்ப 8 மாசமாயிருந்தவா. ஊரில உங்களுக்கும் அவளுக்கும் எழுத்து முடிஞ்சிட்டுது என்று தான் சொல்லியிருந்தனாங்கள். ஆனால் உங்கட அம்மாவோ ஊர் ஊராக படத்தைக் காட்டி அது பொய்யென நம்ப வச்சிட்டா. அக்காவும் குழந்தை பிறந்து இரண்டாவது மாசமே என்ர கையில கொடுத்திட்டு ஊர் பேச்சு தாங்கேலாமால் தூக்கில தொங்கீட்டா. அன்றில இருந்து தனிமரமாக நின்று நான் தான் பிள்ளையை வளர்த்து வாறன்'

இரண்டு பெண்களின் வாழ்வை சிரழித்த பழி தான் என்னை வதைக்கிறது என எண்ணிக்கொண்டேன். என் கால்களுக்கு கீழே ஏதோ நழுவுவது போல இருந்தது.

உடுப்பிட்டியூர்
ம.தி.சுதா
click on the image


22 கருத்துகள்:

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

சில்லறை வரிகள் பாகம் - 1


இந்த வாடிய மலரிலிருந்து
மொத்த இதழ்களும் விழுந்தாலும்
காம்பாய் நீயிருக்கும் வரை
இந்த விதை உதிராது#அக்கா


உன் முந்தானை நுனியில் கட்டி வைத்துக் கொள்
பறந்து போய்விடும்.
என் மனதல்ல உன் மானம்.


என்றோ ஒரு நாள்
குட்டி போடும் என
புத்தகத்துள்வைத்த மயிலிறகை
இவ்வளவு நாளும் தேடி அலைந்தேன்
நேற்றுக் காயப்பட்டே
அறிந்ததோ தெரியவில்லை
ஓடி வந்து மருந்திட்டுப் போகிறது


சிப்பிக்குள் இருந்து
முத்துக்கள் பிடுங்கப்படுகிறது
சிப்பியில் சிலை செய்த சிறுவனுக்கு
உலகச் சிறப்பு விருது
முத்தோ
பணக்காரன் பெட்டியில்முடங்கிக் கிடக்கிறது




வெற்றிலை சாத்திரி சொன்னான்
நீ உயிரோடிருக்கிறாயாம்
எங்கே என்றேன்தெரியலியாம்
உன் வெற்றிலையில்என் மனது தெரியாதா ?

18 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top