Featured Articles
All Stories

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

திருட்டுத்தனமாக பேஸ்புக் தனிமடல் படிப்பது எப்படி?

இணையவெளித் தாக்கத்தில் பேஸ்புக் என்பது மிகவும் தாக்கம் செலுத்தும் தொடர் பாடல் மூலமாக மாறிவிட்டது. உத்தியோகபூர்வமான மடல்கள் தவிர்ந்த ஏனைய தனிமனித டதாடர்பாடலில் பெரும்பான்மையானவை பேஸ்புக் ஊடகவே நிகழ்கிறது.
ஆனால் கடந்த சில நாட்களாக பேஸ்புக் கொண்டுவந்திருக்கும் ஒரு மாற்றமானது தனிமடலைப் படித்து விட்டு படிக்காததுபோல நடிப்பவருக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது. காரணம் நீங்கள் படித்த நேரத்தைக் கூட அனுப்பியவருக்கு தெரிவித்து விடுகிறது.
இதிலிருந்து தப்ப என்ன வழி என பலர் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கையில் அறிந்த சிலர் தாம் பிரயோகிப்பதுடன் மட்டும் ரகசியமாகவே நின்று விடுகின்றனர்.
எப்படி நாம் தனிமடல் படித்ததை அனுப்பியவர் அறியாமல் வைத்திருப்பது.

உங்கள் chrome உலாவியை திறந்து கொள்ளுங்கள் அதில் தான் இந்த நீட்சிகளை நிறுவ வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பெயர்களைச் சொடுக்குவதன் மூலம் உங்களுக்குத் தேவையான நீட்சியை அடையலாம். அங்கே add to chrome என்பதைச் சொடுக்கினாலே போதும்.

ஒன்றை நிறுவினாலே போதும் இனி நீங்கள் படித்ததைக் கூட அனுப்பியவர் அறியமாட்டார். நீங்கள் கண்ணை மூடாமலே பால் குடிக்கலாம் யாருக்குமே தெரியாது.

1.Messenger UNSEEN on FACEBOOK



இந்தப் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நணபர்களுடனும் பகிருங்கள்.
PM 1:27 - By ம.தி.சுதா 5

5 கருத்துகள்:

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

சட்டத்தின் பிடியில் தவிக்கும் நடிகர் ஷாருக்கான் பிடித்ததும் பிடிக்காததும்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
ஹிந்தித் திரையுலகம் என்றவுடன் சட்டென நினைவுக்கு வருபவர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ஷாருக்கான் பிரதான இடத்தில் இருக்கிறார். இன்றும் கூட பல இளம் பெண்களின கனவு நாயகனாக வலம் வரும் ஸாருக்கானுக்கு 47 வயது கடந்து விட்டது என்று சொன்னால் யாருமே நம்பத் தயாராக இருக்கமாட்டார்கள்.
ஆப்கானிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்த ஸாருக்கான் 1965 ல் பிறந்தவராகும். 1988 ம் ஆண்டில் திரையுலகத்துக்குள் காலடி வைத்த இவர் King of Bollywood மற்றும் The Badshah of Bollywood என்ற பிரபல பட்டப் பெயர்களோடு அழைக்கப்படுகிறார்.
ஹிந்தித் திரையுலகத்தில் இவருக்கென்றும் பல தனி மதிப்பிருக்கிறது. உதாரணத்துக்கு இவர் தனது மனைவியான Gauri Khan தவிர்ந்த யாருக்குமே உதட்டு முத்தம் கொடுப்பதில்லை. எந்தப் பெரிய இயக்குனர் எப்படிக் கேட்டாலும் சம்மதிப்பதே இல்லை.

சரி இவரைச் சட்டம் என்ன செய்தது என்று பார்ப்போமா?

1) கடந்த வருடம் ஏப்ரல் 9 ல் ராஜஸ்தானில் இடம்பெற்ற கொல்கத்தா நைட் ரைடர் மற்றும் ராஜஸ்தான் றோயல் அணிக்கிடையிலான போட்டியில் கமரா முன்னாக பொது இடத்தில் புகைத்த குற்றத்திற்காக ராஜஸ்தான் பொலிசாரால் குற்றப்பத்தரிகையை ஏற்றிருந்தார். ஆனால் அந்த வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டப்பணம் எவ்வளவு தெரியுமா? 140 ரூபாய் மட்டுமே.
ஒரு பொது இடத்தில் புகைத்ததற்கான குற்றப்பணம் இவ்வளவும் தான் என சட்டம் நிர்ணயித்திருந்தாலும் அக் குற்றத்தைச் செய்தவர் சமூகத்தில் எந்த அந்தஸ்தில் உள்ளவர் என்பதை சட்டம் கணக்கிலெடுக்கத் தானே வேண்டும் என எனது நண்பரிடம் நான் வாதிட்டது இப்போதும் நினைவில் இருக்கிறது.


2) அதன் பின்னர் மே மாதம் 16 ல் தான் அடுத்த தலையிடி வந்தது. மும்பை வன்கடே மைதானத்தில் மும்பை இந்தியன் அணியை கொல்கத்த நைட் ரைடர் அணி வீழ்த்தியதன் பின்னர் நடந்த சம்பவமானது அவரை 5 ஆண்டுகள் அந்த மைதானப்பக்கமே தலை வைத்து படுக்க கூடாதென நீதிமன்றம் உத்தரவு போடுமறவுக்கு நிகழ்ந்தது.
நடந்தது என்ன?
ஷாருக்கான் தனக்கான தகுந்த ஆள் அடையாள அட்டை இல்லாமல் மைதானத்துக்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டி காவலர்கள் முரண்டு பிடித்திருக்கிறார்கள். இவரும் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் அதற்கிவர் கொடுத்த விளக்கம் தனது குழந்தைகளுடன் அத்து மீறி நடந்ததால் தான் தான் தகராறில் ஈடுபட்டதாக கூறியிருந்தார். ஆனால் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. பாவம் நம்ம சாருவுக்கு 5 ஆண்டு தடை பிறந்து விட்டது.
இவ்வளவு ஓட்டையுள்ள சட்டத்தில் இந்த ஓட்டையை தேடி அலையும் சாருக்கானுக்கு பெரிய ஓட்டையாக கிடைக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமும் ஆகும்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
AM 11:52 - By ம.தி.சுதா 2

2 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top