Featured Articles
All Stories

செவ்வாய், 25 அக்டோபர், 2011

இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

வணக்கம் உறவுகளே

சேமம் எப்படி?

      இன்றைய காலகட்டத்தில் பெரிய பெரிய இணையத் தளங்களுடன் போட்டி போடும் அளவுக்கு வலைத் தளங்கள் வளர்ந்துள்ளது போல பெரிய பெரிய முதலீட்டுப் படங்களுடன் போட்டி போடும் அளவுக்கு குறும்படங்கள் தமக்கென தனியிடத்தைப் பிடித்துள்ளது.

அதிகளவான படங்கள் இந்தியாவிலிருந்து வெளியானாலும் இலங்கையிலிருந்தும் பல படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஆண்டு மட்டும் 50 ற்கு மேற்பட்ட குறும்படங்கள் வெளியாகியிருந்தது.
அந்த வகையில் இலங்கைப் பதிவுலகத்திலிருந்தும் ஒரு குறும்படத்தை வெளியிடும் முயற்சியில் பதிவர் கூல்போய் கிருத்திகன் மிக நீண்ட காலமாக முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு சரியான துணையின்மையால் நீண்ட காலம் அது கிடப்பிலேயே இருந்தது.
இறுதியாக பதிவர் ஜனா அண்ணாவின் மகளுடைய பிறந்த நாள் விழாவில் அந்த திரைக்கதையை கூறி எடுக்கப் போகிறேன் என ஆணித்தரமாகக் கூறியவர். ஒரு நாள் இரவு போன் போட்டு “மதிசுதா நாளைக்கு துவங்கப் போகிறேன் நேரம் கிடைத்தால் ஒரு தடவை வந்திட்டுப் போங்கோ“ என்றார்.
நானும் பெரிதாக நினைக்காததால் என்பாட்டுக்கு வேலைக்கு போய் விட்டேன். திடிரேன போன் வரத்தான் கேட்டது நினைவுக்கு வர அந்த நேரம் கொட்டும் மழையாகையால் போட்டிருந்த சேட் நனைந்தாலும் என இன்னுமொரு சேட்டை பையினுள் வைத்துக் கொண்டு ஓடினேன்.
அங்கே பார்த்தால் எனக்கும் ஒரு முக்கிய வேடமாம். பிறந்து இதுவரை காலத்தில் பல மேடை நாடகம் இயக்கி நடித்திருந்தாலும் கமரா முன் போய் நின்றது என்றால் கல்யாண வீடு மற்றும் பூப்புனித நீராட்டு விழா போன்றவற்றில் மட்டுமே.

சரி நடிப்போம் என ஆரம்பித்த பிற்பாடு தான் விடயம் புரிந்தது.


முன்னோட்டத்தை கிழே இணைத்துள்ளேன்.
படத்தில் மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவை
1. யாழ்ப்பாணம் அரசகட்டுப்பாட்டுக்கு கிழே வந்த பின்னர் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்காத அதன் மையப்பகுதியில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக பஸ் நிலையத்தின் மையப்பகுதியில் தீபாவளி சனக் கூட்டத்தினுள்ளே கொட்டும் மழையில் ஐந்து ஆறு retake எடுத்து பல காட்சிகளை படமாக்கப்பட்டிருக்கிறது.

2. படம் பிடிக்கவே அனுமதி கிடைக்காத புதிய சங்கிலியன் சிலையடியினில் காட்சிகள் படமாக்கியமை. என பல விடயங்களை குறிப்பிடலாம்.

சங்கிலியனின் அரண்மனை வாசல், மந்திரிமனை, யாழ் நூலகம், கசூர்ணா கடற்கரை, நல்லூர் கந்தசுவாமி கோயில், நல்லூர் பாரதியார் சிலை, யாழ் வைத்தியசாலை முகப்பு, வேம்படி மகளீர் கல்லூரி, யாழ்ப்பாணம இந்துக் கல்லூரி என பல முக்கியமாக இடங்களில் படப்பிடிப்பை மேற்கொண்டிருந்தோம்.
மிகுதியை படத்திலேயே காணுங்கள்.
குறுப்படம் சம்பந்தமான மேலதீக தகவல்களை கீழே உள்ள தொடுக்கில் உள்ள முகநூல் பக்கத்தை லைக் பண்ணுவதன் முலாம் நீங்கள் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்ளலாம்.
CLICK HERE 

மேலதிக கொசுறு ஒன்று - இப்படத்தில் வரும் விபத்துக் காட்சி ஒன்றுக்கு மங்காத்தாவில் அஜித் பயன்படுத்தியது போன்ற மோட்டார் சைக்கிள் ஒன்று யாழ்ப்பாணத்தின் மோட்டார் சைக்கிள் ஓட்ட சாகசக்காரர் ஒருவர் மூலம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

47 கருத்துகள்:

புதன், 19 அக்டோபர், 2011

பாவி உயிர்களுக்காய் ஏங்கும் பச்சோந்தி ப.சிதம்பரத்தின் கோரப் பற்கள்

           அரசியல் என்றாலே பொய் புரட்டில் தேர்ந்தவராகவும் பித்தலாட்டக்காரராக கை தேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகும். ஆனால் கொலை வெறி பிடித்த காட்டு மிராண்டிகளாக இருக்க வேண்டும் என்பதற்கு எந்தத் தேவையுமில்லை.
AM 10:41 - By ம.தி.சுதா 27

27 கருத்துகள்:

வியாழன், 13 அக்டோபர், 2011

இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்


   இணையமென்பது ஒவ்வொருத்தரும் தனது ஏதோ ஒரு தேவைக்ககப் பயன்படுத்தும் இடமாகும் அதே போலத் தான் அங்கே எழுதுபவர்களும் சிலர் பணத்துக்காக எழுதுகிறார்கள் பலர் தம் பேரை வெளிப்படுத்த எழுதுகிறார்கள்.
   

44 கருத்துகள்:

வெள்ளி, 7 அக்டோபர், 2011

திரையுலக வரலாற்றில் எந்திரன் மூலம் யாழ்ப்பாணப் பதிவர்களின் சாதனை


        எந்தக் காலத்திலும் திரைப்படங்களுக்கான மவுசு குறைந்ததே இல்லை. அதிலும் முன்னணி நாயகர்கள் என்றால் சொல்லவும் வேண்டுமா?
        சென்ற வருடம் பெரும் எதிர்பார்ப்புகளோடு வெளியாகி பெரு வெற்றி பெற்ற திரைப்படம் ரஜனி, சங்கர், ரகுமான் கூட்டணயில் உருவான எந்திரனாகும். அதன் வெற்றியின் பிரதான காரணம் பல்துறைப்பட்ட ரசிகர்களையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்தியமையேயாகும்.
         உதாரணத்திற்கு ரஜனி தனது ரசிகரை திருப்திப்படுத்த ரகுமான் இசையாலும், ஐஸ்வர்யராய் ஜொள்ளாலும், சங்கர் அறிவியலாளர்,பிரமிப்பாளர் என எல்லோரையும் திருப்திப்படுத்தினார்கள்.
       அப்படத்தில் என்னை மிகவும் திருப்திப்படுத்திய இடம் அறிவியல் தான் உதாரணத்திற்கு சொல்லப் போனால் பிரசவம் பார்ப்பதும், அதிர்வைக் கொண்டே அந்தப் பாடல் பெட்டியை தகர்ப்பதுமாகும்.
     அதெல்லாவற்றையும் விட எந்திரனின் வசூல் வியக்க வைத்தது வாருங்கள் அதை தருகிறேன் (தகவலை பில்மிக்ஸ் ல் பெற்றுக் கொண்டேன்)
முதல் 10 வாரத்தில் அதிகார பூர்வமான வசூல் – 375 கோடி
வெளிநாட்டில் 75 கோடிக்கு மேல் வசூலித்த ஒரே இந்தியப்படம்
திரையிட்ட நாடுகள் – 33
மொத்த திரையரங்கம் – 3000
இந்தியாவில் திரையிடப்பட்டது – 2000
ஆந்திரத்தில் 700 திரையரங்கு
      சரி தலைப்பிற்கு வருவோமா? எந்திரன் திரைப்படமானது 01.10.2010 அன்றே வெளியிடப்பட்டது. எல்லோருக்கும் ஒரு பிரமாண்டப்படத்திற்கு முதல் விமர்சனம் எழுத வேண்டுமென்ற தீராத ஆசையிருக்கும். அதிலும் அந்தச் சந்தர்ப்பத்தை முதலில் பெறுபவர்கள் பதிவர்களே.
      உலகளாவிய ரீதியில் எந்திரனுக்கு முதல் முதல் விமர்சனம் எழுதியது யார்? இந்தக் கேள்விக்கு பதில் என்ன தெரியுமா. யாழ்ப்பாணப்பதிவர்களே என்று சொன்னால் நம்பக் கஸ்டமாகவே இருக்கும்.
     ஆனால் இதை நம்புங்களேன். இங்கு 30.09.2010 அன்றே யாழ்ப்பாணத்தின் ராஜா திரையரங்கில் திரையிடப்பட்டுவிட்டது. இதற்கான முதல் விமர்சனத்தை எழுதியவர்
    குறைந்த வயதில் பதிவுலகத்திற்குள் நுழைந்து மிக ஜனரஞ்சகமான பதிவுகளைத் தந்த கூல் போய் என செல்லமாக அழைக்கப்படும் கிருத்திகன். பதிவுக்கான தொடுப்பிற்கு தலைப்பைச் சொடுக்குங்கள்.

எந்திரன் ஏமாற்றவில்லை... விமர்சனம்


      
       இரண்டாவதாக எழுதியவர் ரஜனியின் மிகத் தீவிர ரசிகரும் மிகவும் வியக்கத்தக்க தேடல்கள் கொண்ட பதிவுகளை தந்தவருமான எப்பூடி ஜீவதர்சன் என்பவராகும். இவர் ஒரு இலங்கைப் பதிவரென்பது இதுவரை பலருக்குத் தெரியாது. பதிவர்களில் அவர் நேரில் சந்தித்ததும் அவரை நேரில் சந்தித்ததும் நான் மட்டும் தான் எனக் கூறியிருந்தார்.  (அவர் உறவுக்காரரான பதிவரைத் தவிர) அவர் எழுதிக் கொண்டிருந்த இந்தவார இருவர் பதிவுக்கு எப்போதும் பெரு எதிர் பார்ப்பிருந்து கொண்டே இருந்தது.
      
       அதெல்லாம் சரி இன்னும் ஒருவர் எழுதினேன் என அவரே சொல்லிக் கொள்கிறார். ஆனால் பதிவுலகத்தில் நீ எங்கே விமர்சனம் எழுதினாய் என நீங்கள் அவரைப் பர்த்துக் கேட்கலாம். ஆனால் அவர் தலைப்பிலேயே இது விமர்சனமல்ல என்று பச்சையாச் சென்னதால் தப்பி விட்டார். யாரப்பா அந்த மனுசன் என்று கேட்கத் தோணுதா அது அடியேன் தானுங்கோ. அதற்கான தொடுப்பு இதோ.

குறிப்பு – இங்கே பிரதேசவாதம் சம்பந்தமாக இப்பதிவை முன்னிலைப்படுத்தவில்லை. முதன் முதல் எழுதியதில் வேறு மாவட்டத்தில் ஒருவர் இருந்திருப்பாராயின் இதன் தலைப்பு இலங்கை என்று மாறியிருக்கும். குறிப்பிட்ட பிரதேசமாகையால் குறிப்பிட்டே சொல்லியிருக்கிறேன்.



நன்றிச் செதுக்கலுடன்...
அன்புச் சகோதரன்
x_3b8a66db


33 கருத்துகள்:

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

கணக்குத் திருடும் Hackers இடம் இருந்து தப்புவதற்கு எனக்குத் தெரிந்த இலகு வழி


        அண்மைய நாட்களில் பதிவுலகக் கணக்குத் திருட்டு என்பது சாதாரணமாகி விட்டது.
       பலர் பாதிக்கப்பட்டு வரிசையில் நிற்கிறோம் அதிஸ்டம் உள்ளவருக்குக் கிடைக்கிறது அதிஸ்டம் இல்லாதவருக்கு காற்றோடு போய்விடுகிறது.
முன்னரும் ஒரு பதிவில் இதைப்பற்றி இட்டிருந்தேன். அவர்களுக்கு சாதகமாக அமைவது எமது மின்னஞ்சல் கணக்காகும். அதை மறைப்பதற்காக பலர் கருத்திடுவதற்காக புதிய மெயில் ஐடி திறந்து வைத்திருப்போம். அதன் பின் பதிவிடுவதானால் புளக்கர் மெயிலுக்குள் ஓடுவோம்.

50 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top