Featured Articles
All Stories

திங்கள், 6 நவம்பர், 2017

என் முழுநீளத் திரைப்படத்தின் சுவரோட்டிகள்...

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

கடந்த 28.10.2017 மற்றும் 29.10.2017 அன்று யாழில் உள்ள ராஜா திரையரங்கில் எனது இயக்கத்தில் உருவான ”உம்மாண்டி” திரைப்படம் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டது.
இந்த வெற்றிக்களிப்பில் இருக்கும் வேளையில் இந்திய நண்பர்களின் வேண்டுகைக்கு அமைய அடுத்த காட்சி இந்தியாவிலும் அதனைத் தொடர்ந்து இலங்கையின் மற்றைய பிரதேசங்களிலும் அதன் பின்னர் வெளிநாடுகளிலும் திரையிடப்பட இருக்கின்றது.
இத்திரைப்படத்திற்கான வெளிநாட்டு உரிமத்தை திரு முகுந்த முரளி அவர்களால் நிறுவப்பட்ட இளந்தமிழ் வெளியீட்டகம் வாங்கியுள்ளது.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா

படத்திற்காக எம்மால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ சுவரொட்டிகள்....





உம்மாண்டி மேலான அபிமானத்தில் நண்பர்களால் செய்யப்பட்டவை




என் பதிவுகளுடன் இணைந்திருக்க கீழுள்ள facebook like பொத்தனை அழுத்திச் செல்லுங்கள்
AM 8:53 - By ம.தி.சுதா 0

0 கருத்துகள்:

வியாழன், 6 ஜூலை, 2017

கொழும்புக்குள் எவ்விடத்திற்கேனும் செல்ல பஸ் இலக்கங்களை தரும் APPLICATION

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

என்னைப் போல சிங்களம் தெரியாமல் கொழும்பு என்ற பெரு நகரத்து பஸ்களில் விசாரித்து ஏறிப் போய் சேருவது என்பது என்றுமே இயலாத காரியம் தான்.

தேவை தானே எப்போதும் தேடலின் அடிப்படை ஆரம்பம். அன்ரோயிட்டில் தேடிக் கொண்டு போகும் போது பிரிந்தாபன் என்பவர் செய்து வைத்திருக்கும் இந்த செயலியை கண்டேன்.
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் பாவிக்கிறேன் கொழும்புக்குள் நுழைந்து விட்டால் போக்கு வரத்துப் பிரச்சனை என்பதே எனக்கு ஏற்படாததால் பெருமளவான ஆட்டோவுக்கான செலவுப்பணம் மிச்சமாகிறது.

பயன்படுத்துவது பற்றி படங்களில் இட்டுள்ளேன்.


இந்த செயலியில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை பிரிந்தாபனது சேவரில் ஏதாவது பிரச்சனை வந்தால் நின்று விடுகிறது உடனே ஒரு மெயில் போட்டால் போதும் 4-5 மணித்தியாலத்திற்குள் சீர் செய்து விடுவார்.

பயன்படுத்தி பயன்பெறுங்கள். (செயலிக்கான தொடுப்புக்கு இங்கே சொடுக்கவும்)

இந்தப் பதிவு உபயோகமானது எனக் கருதின் உங்கள் நண்பர்களுக்கும் இந்தத் தொடுப்பைக் கொடுங்கள்.

தொடர்ந்தும் என் பதிவுகளுடன் இணைந்திருக்க கீழுள்ள பேஸ்புக் லைக் பொத்தானை சொடுக்கி விட்டுச் செல்லவும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா

PM 9:24 - By ம.தி.சுதா 3

3 கருத்துகள்:

வெள்ளி, 19 மே, 2017

இறுதிப் போர் வலியைச் சொல்லி சர்வதேச விருதுகள் வென்ற என் குறும்படம்

வணக்கம் உறவுகளே


எம் வலிகளின் ஒரு பகுதியையேனும் வெளி உலகுக்கு காட்ட வேண்டும், எமக்கு இன்னும் ஒரு போர் வேண்டாம் என்ற எண்ணத்துடனும் என்னிடம் இருந்த வளம், அறிவு என்பவற்றை வைத்துக் கொண்டு 2013 இல் இக் குறும்படத்தை உருவாக்கியிருந்தேன்.
இக்குறும்படத்துக்கு என்னோடு துணிந்து நின்று உழைத்தவருக்கும் தடைபட்டுக்கிடந்த படைப்பை பூரணப்படுத்த உதவி செய்து..... இத்தனை சர்வதேச விழாவில் விருதுகளை பெற்றுத் தந்ததுமல்லாமல் எம் பிரச்சனை ஒன்றை அவர்கள் காணச் சந்தர்ப்பம் கொடுத்த என் அன்பு உறவு எல்லோருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
miraa creation present
cast - erampu, mathisutha, janakan
music - sutharsan
editing - steepan sansigan
vfx - mathuran raveendran
camera - lokakanthan
assist - sujitha
production manager - sayan
poster - omar
photoghraphy - kugaruban
story, screen play, directed by MaThiSUTHA
contact - 0094750409201





என் பதிவுகளுடன் இணைந்திருக்க கீழே உள்ள பேஸ்புக் லைக் பொத்தானைச் சொடுக்கிச் செல்லவும்.
PM 7:30 - By ம.தி.சுதா 3

3 கருத்துகள்:

திங்கள், 10 ஏப்ரல், 2017

மணிரத்தினமும் இராவணனும்...

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

மணிரத்தினம் என்றால் படுபயங்கரமான நுண்ணரசியல் படம் எடுப்பார் எம்மை அறியாமலே எமக்குள் ஏதாவது விதைத்திருப்பார் என்ற விமர்சனங்களோடு அவரைக் கடக்க நேரிட்டாலும் ஒரு இயக்குனராக, ஒரு ஆசானாக அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.


இத்தனை விமர்சனங்களும் எனக்குள்ளும் உண்டு ஆனால் என் ஒற்றை நாயகனை வைத்து என் வாயை ஒரு தடவை முழுவதுமாய்க் கட்டிப் போட்டார்.


விக்ரம் ரசிகன் என்பதற்கப்பால் விக்ரமுக்கூடாக நான் கற்பனையில் வைத்திருந்த இராவணன் என்ற என் நாயகனைக் காட்டியிருப்பார்.


இல்லாத பொல்லாதது எல்லாம் வைத்து கம்பன் வம்பளக்க உருவகம் கொடுக்கப்பட்ட பாத்திரமாகவே இன்றும் இராவணன் எமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால் அந்தளவுக்கு இராவண எதிர்ப்புக் கொண்ட ஒரு வட தேசத்துக்கு அவனைக் காட்டியதில் கூட ஒருவகை நுணுக்கமான நேர்மைத் தன்மையைக் கடைப்பிடித்திருப்பார்.


தங்கையை ஒருவன் வஞ்சம் தீர்த்தான் என்றதற்காக இன்னொருத்தன் மனைவியைக் கடத்தலாமா எனத் தான் ஒவ்வொரு இராமாயண வாசகர்களும் கேட்பார்கள். அது பற்றி தாராளமாக பல பட்டிமன்றங்கள் வாதிட்டு விட்டது அது ஒரு பக்கம் இருக்கட்டும் சரி கடத்தி வந்தவன் நடத்திய விதத்தைக் காட்டிய இடத்தில் மணிரத்தினத்தின் கண்ணியத்தை நான் மதிக்கிறேன்.


- அவள் விபத்தில் சிக்கி விட்டாள் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் தொடலாமா வேண்டாமா என்ற மனக் குழப்பத்துடன் இராவணன் இருக்கிறான் முனையவும் நினைக்கிறான் ஆனால் தொடுவதற்கான சந்தர்ப்பத்தை இயக்குனர் கொடுக்கவில்லை அவள் விழித்துக் கொள்கிறாள் தடியால் காப்பாற்றுகிறான்.



- அவளுக்கு இவனில் வந்த கோபத்தில் தாக்க முனைகிறாள். அந்த இடத்தில் சராசரி ஆணாக இராவணன் நிற்கிறான். அவள் ஆக்ரோசம் கொண்டு பாய இவன் விலத்த அவள் கூந்தல் மட்டும் இவனை பட்டும் படாமல் தட்டிச் செல்கிறது. அந்த இடத்தில் அவனுக்குள் ஆணாக ஒரு உணர்வு எட்டிப் பார்க்கிறது என்பதை இசை உணர்த்தும் அந்த இடத்தில் இராம ரசிகருக்கு சபலம் என்ற வாரத்தையாலும் இராவணன் ரசிகருக்கு காதல் என்ற வார்த்தையாலும் அந்த உணர்வை அடையாளப்படுத்தலாம் ஆனால் அந்த இடத்திலும் இயக்குனர் இராவணனைக் காப்பாற்றி விடுகிறார். அவளைத் தடுக்கி தன் மேல் விழ வைத்திருக்கலாம் தானே போரிடுகையில் அணைத்திருக்கலாம் ஆனால் இராவணன் தன் உணர்வெழுச்சியை அடக்கியவனாகவே அடுத்தடுத்த காட்சிகளில் தோன்றுவான்.


- இத்தனை இடங்களிலும் அவளைத் தொடாமல் காத்து வந்த மணிரத்தினம் ஒரே ஒரு இடத்தில் அவளை தொட வைத்து விடுவார். அந்த அழுத்தமான தொடுகை அல்லது உரிமையான தொடுகையில் இராவணன் நாயகனாகவும் இராமன் தன் மனைவியில் கூட இரக்கமற்ற, பணயம் வைக்கும் கொடூரனாகவும் ஒரு காட்சியிலேயே விழித்து முடித்திருப்பார். இராவணனைச் சுட பொலிசார் சுற்றி வளைத்து விட்டார்கள். தன் மரண நாழிகையை கண் முன் அவன் கண்டு விட்டான் ஆனால் தன் முன்னே அவள் நிற்கிறாள். அவளைக் காப்பாற்ற வேண்டிய ஏதோ ஒன்று அவனுக்குள் இருக்கிறது. தன்னை அறியாமலே அவள் தலையை கீழ் நோக்கி அழுத்தி அவளை முதன் முதல் தொடுகிறான்.


இராவணனின் இறுதிக் கணத்தில் அவள் ஒரு பார்வை பார்ப்பாள் அவனும் பார்ப்பான் ஆனால் அவளது பார்வை சொல்லும், அதற்குள் பாசம் வழியும் அதை காதலாக என்னால் விழிக்க முடியாது ஆனால் அவள் கண் சொல்லும் நீ நல்லவன், வல்லவன் என இந்த உணர்வை அப்படியே எனக்குள் கொடுத்த மணிரத்தினத்திடம் இதை விட பெரிதாக என்னத்தை நாம் கற்று விட முடியும்.
அந்த இடத்தில் அவள் பக்கம் பக்கமாக வசனம் பேசவில்லை ஆனால் ஒரு வில்லனை எல்லோருக்கும் நாயகனாக்கியிருப்பாள்.



குறிப்பு - (கார்த்திக் வருவது குரங்குச் சேட்டை விடுவது எல்லாம் படு கேவலமான இடம் ஆனால் இங்கு இராவணன் பற்றி மட்டுமே பேசப்படுகிறது.)

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா

தொடர்ந்து என் பதிவுகளுடன் இணைந்திருக்க கீழ் இருக்கும் பேஸ்புக் like பொத்தானை சொடுக்கிச் செல்லவும்.
PM 8:43 - By ம.தி.சுதா 1

1 கருத்துகள்:

திங்கள், 16 ஜனவரி, 2017

டயலொக் வலையமைப்பின் பகல் கொள்ளையும் இலங்கை நுகர்வோர் சட்டங்களும்

வணக்கம் உறவுகளே...

இலங்கை என்பது நல்லாட்சியும் நீதி நிர்வாகங்கள் காக்கப்படும் ஒரு நாடாகவும் நல்லதொரு விம்பம் உருவாக்கப்பட்டக் கொண்டிருந்தாலும் மேல் தட்டு வர்க்கத்துக்கு கிடைக்கும் தனிமனித அடிப்படைச் சுதந்திரங்கள் அடித்தட்டு மக்களுக்கு மட்டுமல்ல நடுத்தர மக்களுக்கும் கிடைப்பதில்லை.


குறிப்பிட்டுச் சொல்லப் போனால் நுகர்வோர் தொடர்பான பாதுகாப்புச் சட்டங்களை எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பான சட்டங்கள் இருந்தாலும் அது எந்தளவுக்கு ஒரு நுகர்வோனுக்கு உதவுகிறது என்ற கேள்விக்கு என்ன பதில் கிடைக்கப்போகிறது.

இன்று எந்தக் கடையில் போய் பொருள் வாங்கினாலும் 10 ரூபாவிற்கு மேற்பட்ட மிகுதியானால் மட்டுமோ காசாகக் கிடைக்கும் அதற்கு கீழ் என்றால் உதிரியாகத் திணிக்கப்பட்ட பொருட்களாக இருக்கும். பத்து ரூபாய் என்றால் தீப்பெட்டியும் ஐந்து ரூபாய் என்றால் ஏதாவது ஒரு உயர் சீனிப்பண்டமாக இருக்கும். இந்தச் சில்லறை விடயத்தில் சட்டத்தை இறுக்கத் தவறுவதால் பழக்கமற்றவனைக் கூட சொக்லேட் சாப்பிடப்பழக்குவதுமில்லாமல் இலங்கை அரசாங்கமே தனது சலரோக நோயாளருக்கான மருத்துவச் செலவை அதிகரித்துக் கொள்கின்றது.

வாகனம் வைத்திருக்கும் ஒவ்வொருத்தரும் 3rd party இன்சூரன்ஸ் கட்டாயம் கட்ட வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அது கட்டத் தவறி சில நாட்கள் கடந்தால் கூட நீதிமன்றம் வரை செல்ல வேண்டியதுடன் தண்டப்பணமாக 25 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டி வரும். இந்தக் காப்புறுதியின்படி யாராவது ஒருவரை அவ்வாகனம் தாக்கினால் கூட அவருக்கான காப்பீடாக அது கருதப்பட்டாலும் இதுவரை யாருக்காவது அப்படிக் கிடைத்திருப்பதாக தகவல் இல்லை. ஆனால் பல வழக்கறிஞர்கள் கூட பாதிக்கப்பட்டிருப்பினும் இதைக் கண்டும் காணாமல் விடுவதை அறிவுசார் விடயமாக கருத முடியவில்லை.

நேற்று டயலொக் மற்றும் மொபிடல் உடைய கட்டணப்பட்டியலைப் பார்க்க நேர்ந்தது. அதில் பார்த்தால் மொபிடலை விட டயலொக்கின் அரச வரிகள் மிக அதிகமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் அறிவிக்கும் போது பொதுவான அரச வரிகள் தான் அறிவிக்கப்படும். அப்படி இருக்கையில் எப்படி வலையமைப்புக்கு வலையமைப்பு அரச வரிகள் மாற முடியும். மொபிடல் என்பது அரசுசார் வலையமைப்பு என்றாலும் தனியார் வலையமைப்புக்கு வரி வீதம் அதிகம் என்று அறிவிக்கப்படவில்லையே.



ஆக மொத்தத்தில் நாம் (நானும்) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பற்றி முழுமையாக தெரியாமல் இருப்பதால் தான் யாரோ ஒரு முதலாளித்துவ வர்க்கத்துக்கு அநியாயமாகப் பணத்தை தாரை வார்த்துக் கொண்டிருக்கிறோம். ஊடகங்கள் இச்சட்டங்களை அடிமட்ட மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது மிக முக்கிய கடமைகளில் ஒன்றாகும். எல்லா ஊடகத்தினதும் 90 % க்கு மேற்பட்ட பக்கங்களை அரசியலும் கேளிக்கையும் தான் நிரப்புகிறதே தவிர அத்தியாவசியம் நிரப்பவில்லை.

மேலே நான் குறிப்பிட்டவற்றில் கூட நான் அறியாத நுகர்வோர் சட்டத்திற்குள் அடங்கிய ஏதாவது இருக்கலாம். தெரிந்தால் எனக்கும் சுட்டிக் காட்டுங்கள்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா

மிச்சக்காசு பிரச்சனை ாடர்பாக நான் இயக்கிய குறும்படத்தை இங்கே காணுங்கள்.


PM 8:39 - By ம.தி.சுதா 1

1 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top