Featured Articles
All Stories

ஞாயிறு, 15 மார்ச், 2015

என்னைத் தாக்கிய சேரனின் ”ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை”

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு தலை எழுத்தாகவே மாற்றப்பட்ட விடயங்களில் ஒன்று தான் இந்த நடிகர்களுக்காகப் படம் பார்ப்பது என்ற கலாச்சாரமாகும். அதுமுட்டுமல்லாமல் சந்தோசப்படுத்தும் அல்லது மசாலக்கலவைகள் கலந்து படம் எடுக்க வேண்டும் என்ற திணிப்புக்கள் அதிகமாக உள்ள இடம் தான் இந்த தமிழ் சினிமா உலகமாக முத்திரையிடப்பட்டு வருகிறது.

இயக்குனருக்காக அல்லது இந்த இயக்குனரின் படைப்பு என் பார்க்கும் ரசிகர்கள் மிக மிகக் குறைவானவர்களே. இது தவிர்ந்த வகையறாக்களுக்குள் மாட்டுப்பட்டுத் தவிக்கு தனித்தவமான பல இயக்குனர்கள் இருக்கிறார்கள்.

இந்தப் பட்டியலில் இருப்பவர்களில் சேரனும் மிக முக்கியமானவராகும். கடந்த வாரம் அவரது ”ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை” என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. எம் வாழ்க்கையோடு மட்டுமல்ல எம்மோடு பின்னிப்பிணைந்த ஒரு கதை. யதார்த்தத்தோடு சற்றும் விலகாமல் பயணித்திருந்தது.
பலர் அப்படம் தொடர்பாக சிலாகித்திருந்தார்கள். ஆனால் அது சேரனின் படம் என்று பார்க்கப் போனவர்கள் அனைவரும் திருப்தியோடு மட்டுமல்ல சேரனின் வழமைக்கு மாறான அனுபவம் ஒன்றுடன் தான் திரும்பினார்கள். காரணம் வழமையாக சேரன் கதை சொல்லும் விதத்திலிருந்து இம்முறை திரைக்கதை சற்று மாறுதல் அடைந்திருந்தது. காட்சிகள் அளவாகக் கத்தரிக்கப்பட்டிருந்தது மட்டுமல்லாமல் சென்டிமென்டை அள்ளிக் கொட்ட பல இடங்கள் இருந்தும் அளவாக சோகக் காட்சிகளைக் காட்டியிருக்கிறார்.
சில காட்சிகளுக்கான பதிலை முதலே பூடகம் போட்டிருந்தார்.
குறிப்பாக அந்த பறவைகளின் முடிவுக் கதையை முன்னமே வைத்திருந்தார். உன்னிப்பாக இருந்தவருக்கு படத்தின் முக்கால்வாசியிலேயே இறுதிக் காட்சி வழங்கப்பட்டு விட்டது.
மிக முக்கியமாக அந்த நாயகனைப் பாருங்கள். படத்தின் ஆரம்பம் எல்லாம் ஒரு நாயகனின் வளர்ச்சி சம்மந்தமானதாகும். ஆனால் நாயகனோ நித்திரையால் எழும்பியவன் போல் தான் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு பயங்கர எரிச்சலாக இருந்தது . (சில வேளை இந்த இடத்தில் தான் சாமானிய மசால ரசிகன் குழம்பியிருக்கலாம். காரணம் அவன் பார்ப்பது முழுக்க நாயக எழுச்சி என்றால் ஒரு பாடலும் 10 பாஞ்ச் வசனமும் தான்).
அந்த பிளாஷ்பாக் காட்சியின் பின் அந்த நாயகன் ஏன் அப்படி நடக்கிறான் என்பது எந்த வித எரிச்சலும் இல்லாமல் கதையோடே ஒட்ட வைத்துப் பயணிக்க வைப்பார்.
மகன் இறப்புக்கு பெற்றோர் அழும் இடத்தில் பாருங்கள் காட்சியின் நேர நீட்சியை தவிர்ப்பதற்காகவும் அள்ளித் தெளிக்கும் சோகக் காட்சியையும் கிளிசேவ் ஆகாமலும் இருப்பதாற்காக அவர்கள் அழும் காட்சி வேறாகவும் அவர்கள் குரல் வேறாகவும் அமைத்திருப்பார்.
ஆணும் பெண்ணும் பழகினாலே பார்ப்பவர் முதல் பார்வை ஒரு சந்தேகப் பார்வையாகவே இருக்கும் ஆனால் இப்படத்தில் அவள் கட்டிப்பிடித்தும் கூட பார்ப்பவருக்கும் சந்தேகமில்லாமல் இருவரையும் ஒரு நல்ல நண்பர்களாகவே பார்க்க வைத்து வெற்றி கண்டிருப்பார்.
என்னைப் பொறுத்தவரை ”ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை”  சேரனின் படமாகும். படத்தைச் சிதைக்கக் கூடாது என்பதற்காக கதைக்குள் ஆழமாக போகவில்லை. ஆனால் மனிதர்களோடு வாழ நினைக்கும் ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாகும்.

பிற்குறிப்பு - இவ்வளவு நுணுக்கமாக படத்தைச் செதுக்கியவர் சந்தானம் வரும் முதல் காட்சியில் டப்பிங்கும் வைக்க மறந்து போய். அப்படி துள்ளும் ஒரு காட்சியை ஏன் வைத்தார் என்பது எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
PM 12:05 - By ம.தி.சுதா 4

4 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top