புதன், 22 ஏப்ரல், 2015

மற்றவர் மரணத்தில் இலாபம் தேடுவது வைரமுத்துவுக்கு இது முதல் முறையல்ல

PM 2:53 - By ம.தி.சுதா 2

வணக்கம் உறவுகளே
நலம் எபபடி?


ஆரம்ப காலத்தில் சண் தொலைக்காட்சி ஒரு திரைப்பட நிகழச்சித் தொகுப்பை வழங்கும் அதன் பெயர் வாரம் ஒரு நட்சத்திரம் என்பதாகும். இதே போல இப்போது சமூக வலைத் தளங்களிலும் வாரம் ஒரு நட்சத்திரமாக பலியாடுகளாக அவர்களாகவே தலையை கொடுத்துக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் குமுதம் மூலம் இந்த வாரம் தலையைக் கொடுத்திருப்பவர் கவிஞர் வைரமுத்துவாகும். மறைந்த மதிப்பிற்குரிய எழுத்தாளரான ஜெயகாந்தனின் பெயரில் தன்னை பாராட்டி எழுதியதான கடிதம் ஒன்றை அதுவும் அவரது இறுதிக் கடிதம் என்ற பெயரில் விளம்பரப்படுத்தப் போக அதற்குப் பின்னிருந்த மறைக்கபட்ட நிகழ்வுகளை ஜெயகாந்தனின் மகளான தீபலக்சுமி தனது பேஸ்புக்கில் அப்பட்டமாக போட்டுடைத்துள்ளார்.

இதற்கப்பால் இதற்கு முன்னரும் மற்றவர் மரணத்தில் தனது விளம்பர வண்டி ஓட்டிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது பலருக்கு நினைவிருக்குமோ தெரியவில்லை.
ஈழத்தில் இடம்பெற்ற போராட்டத்துக்காக ஆரம்ப காலத்தில் பல தென்னிந்தியப் பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். ஆனால் மிக நீண்ட காலமாக வைரமுத்து அவர்களை பாடல் புனையும்படி புலம் பெயர் சமூகத்தில் இருந்து பலர் கேட்டக் கொண்டிருந்தாலும் தனது பேருக்கு கெடுதல் ஏற்பட்டு விடும் என மறுத்து வந்தார்.
குறிப்பாக கருணாநிதி அவர்கள் தனது அரசியல் நிலையை தக்க வைத்துக் கொள்ள மத்திய அரசுடன் ஒத்திசைந்து நடக்க வேண்டிய நேரத்தில் தான் தனது அரசியல் பக்க பலத்தை கட்டி எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் வைரமுத்துவுக்கு ஏற்பட்டிருந்தது. அதனால் கருணாநிதியுடன் மிகவும் நெருங்க வேண்டிய சூழ்நிலை ஒன்றுக்கு தள்ளப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவ் ஆட்சியில் அவர் பெற்ற சலுகைகள் பட்டங்கள் பற்றி எல்லாம் இந்த உலகமே அறியும்.
இப்படி நடந்தவர் போர் ஓய்ந்து சமாதான காலப்பகுதியில் கிடைத்த சுனாமி என்ற சந்தர்ப்பத்தை ஈழம் நோக்கி சரியான விளம்பர ஆயுதமாக பயன்படுத்தி புலம்பெயர்ந்தவர் பணத்தைக் கறந்து தானே ஒரு அல்பத்தை வெளியிட்டு புரட்சிவாதி போல அடையாளப்படுத்திக் கொண்டார்..
இது தொடர்பாக 2011 ம் ஆண்டு நான் எழுதிய பதிவு ஒன்றில் இடப்பட்ட கருத்துப் பெட்டியில் அறிவிப்பாளரும் பதிவருமான நிருபன் அவர்கள் புட்டுப் புட்டு வைத்திருந்தார். அவை தொடர்பான ஸ்கிரீன் சொட்கள் இங்கே பகிர்கிறேன்.

பதிவுக்கான தொடுப்பு - இங்கே சொடுக்கவும்

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

2 கருத்துகள்:

Yarlpavanan சொன்னது…

சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்

தனிமரம் சொன்னது…

வைரமுத்து எப்போதும் சுயநலவாதி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை சகோ!

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top