Featured Articles
All Stories

வியாழன், 31 மார்ச், 2011

ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்.

            உலக அரங்கில் நகரும் அரசியல் நகர்வுகளில் அடுத்ததாக சூடு பிடிக்க இருப்பது தமிழக தேர்தல் களமாகும்.
                 அண்மையில் ஒரு இந்திய நண்பர் என்னிடம் அளவளாவும் போது ஒரு கேள்வியைத் தொடுத்திருந்தார் அதாவது தமிழகத்தில் எனக்கு வாக்குரிமையிருந்தால் கலைஞருக்கா அல்லது செல்விக்கா வாக்களிப்பீர்கள் என்று கேட்டார். நான் பதில் சொல்லவில்லை அதையே என் நண்பர் சிலரிடம் கேட்டேன். அத்தனை பேரிடமிருந்தும் நாகரிகமான பதில் கிடைக்கவில்லை. நான் கூட அதற்கு விதிவிலக்கல்ல.

47 கருத்துகள்:

சனி, 26 மார்ச், 2011

அந்த மூன்று நாட்களும் இதயம் வென்ற மூவருக்கான வாழ்த்துக்களும்


             நாம் வாழும் இந்த உலகத்தின் அச்சின் ஆரம்ப விசை எங்கிருந்து வந்தது என பலர் பலதை சொல்லிக் கொள்கிறார்கள்... அனால் எனக்கு எல்லாம் மனிதர்கள் தான் நேர் விசைகளும், மறை விசைகளும் தாராளமாகவே.. அந்த நேர் விசைகளில் நான் உறவுகளுக்கே முக்கிய இடம் அழிக்கிறேன்..
         ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதனில் ஏதோ ஒரு ஈர்ப்பிருக்கும் அதை ஆராயத் தெரியாதவர் கண்களும் மனங்களும் தான் மறை விசைகளாக பரிணமிக்கும்...
      
PM 10:16 - By ம.தி.சுதா 44

44 கருத்துகள்:

திங்கள், 21 மார்ச், 2011

பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை

           எந்தவொரு மனிதனும் தனது ஒவ்வொரு முன்னெடுப்புக்களையும் ஒரு பெரிய எதிர் பார்ப்புடன் தான் ஆரம்பிக்கிறான். நான் நல்லது செய்ய வேண்டும் என நினைத்து அரம்பித்த பல விடயங்களில் செருப்படி தான் வாங்கியிருக்கிறேன்.
கரை தேடும் அலை போல்
அடிக்கடி வருகிறேன்
மணல் வீட்டை அழிக்க வருவதாய்
பேதைச் சிறுமி திட்டிக் கலைக்கிறாள்.
நான் திரும்பியும் வருவேன்
என் இலட்சியம்
கரைக்கு மண் கொணர்வது மட்டுமே

63 கருத்துகள்:

திங்கள், 14 மார்ச், 2011

வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்


                கவி உலகமே இன்று ஒருவரின் வார்த்தைகளுக்குள் கட்டுப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அந்த வார்த்தைகளுக்கு ஏற்புடையவர் வைரமுத்துத் தான்.காரணம் அந்தளவு வார்த்தை ஜாலங்களுக்குச் சொந்தக்காரர் தான் இந்த வைரமுத்து. 
      அவர் பிரபலம் என்ற காரணமோ தெரியல அல்லது அவர் குண இயல்பு அப்படியோ தெரியல அவர் மீது அடிக்கடி குற்றச் சாட்டுகள் எழுந்த வண்ணமே இருக்கிறது.
PM 12:04 - By ம.தி.சுதா 84

84 கருத்துகள்:

செவ்வாய், 8 மார்ச், 2011

உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

            நம்மவர் எந்த இடம் போனாலும் தம் பெயரை ஏதோ ஒரு வகையில் பொறித்திருப்போம் அதில் ஒன்று தான் நாம் பார்க்கப் போகும் இக் கோயிலாகும் இதன் பெயர் அங்கோர்வாட் (Angkor Wat ) என்பதாகும்.
                இது கம்போடியாவில் அமைந்துள்ளது. அங்கோர் என்பது தலை நகரம் அல்லது புனித நகரம் என பொருள்படும். கி.பி 12 ம் நூற்றாண்டில் 2 ம் சூரியவர்மனால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் கோபுரங்கள் நிலத்திலிருந்து ஏறத்தாள 64 மீட்டர் உயரமானவை.  2 ம் சூரியவர்மன் இந்து அரசானாக இருந்தவன் இருந்தாலும் இந்த விஷ்ணு ஆலயம் அவனாலேயே அமைக்கப்பட்டது. அங்கே பல சிவன் ஆலயங்களும் சேர்த்தே அமைக்கப்பட்டிருக்கிறது.
            இந்திய, ரோமானியா, கிரேக்க, எகிப்திய, மாய நாட்டுக் கட்டடக்கலையை ஒன்று சேர்த்து சலவைக் கல்லால் இது கட்டப்பட்டிருக்கிறது. இது 10 சதுர மைல் அளவிற்கு பெரியது. கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்த இதை யுனெஸ்கோ பொறுப்பெடுத்து ஒரு பகுதியை மட்டும் சுற்றலாத்தளமாக மாற்றி பார்வைக்கு வைத்துள்ளது. இந்த ஆலயங்களைக் காண அன்றாடம் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 20 யு.எஸ். டாலர் கட்டணமும் கார் வாடகை, வழிகாட்டிக்கான செலவு ஆகியவையும் சுற்றுப்பயணி வழங்குகிறார்.
     கி.பி. 17 ஆம் நூற்றாண்டு வரை ஆளுமையில் இருந்த பாரம்பரிய மன்னர்களின் வாரிசுகளின் விபரங்கள் அனைத்தும் ஆண்டு வாரியாக குறிப்பிட்டு சியாம் ரீப் அரும் பொருளகத்தில் வைத்திருக்கிறார்கள். அங்கே இதன் தகவல்களை இன்னும் பெற்றுக் கொள்ளலாம். இது விஸ்ணு ஆலயம் என பலராலும் போற்றிப் பகழப்பட்டாலும் உள்ளே சிவனக்கும் பல ஆலயங்கள் இருக்கிறது என்பதை மறக்கக் கூடாது அது மட்டுமல்ல வாசுகி பாம்பால் அமுத எடுப்பதிலிருந்த மகாபாரத முக்கிய காட்சிகள் வரை அனைத்தும் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கிறது.
       இதன் அழிவு எப்படி ஆரம்பமானது என நோக்கினால் இவர்களது நீர் வடிகால் அமைப்பில் விடப்பட்ட வழுக்கள் தான் காரணமாகும் ஆலயங்களில் செலுத்திய கவனத்தை எதிர்கால நோக்கில் செலுத்தவில்லை அதன் விளைவு தான் இதன் அழிவு என கூறப்படுகிறது. ஆற்றை மறித்து நீர்த்தேக்கமாக்கி விவசாயத்தை மேற்கொண்ட இவர்களால் அதன் அணையை கவனத்திலெடுக்கத் தவறி விட்டார்கள்.

இரண்டாம் சூரியவர்மன்(Surya varman II )

ஆட்சிக்காலம்: கி.பி 1113 - 1150

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

யசோதபுர (Yashodapura)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

ANGKOR WAT

இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Angkor Wat, Thom Manon

கைமர் பேரரசில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேரரசர்களில் ஒருவனாகக் கொள்ளப்படுகின்றான். மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் இவன் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா (Champa), கிழக்குக் கடற்பிரதேசம் மேற்கு பகோன் (Pagon)/பர்மா (Burma) தெற்கு மலாய் தீபகற்பம் ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான். இறந்த பின் பரமவிஷ்ணுலோக (Paramavishnuloka) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான். சூரிய வர்மனின் வம்சம் பற்றி மேலும் அறிய இங்கே செல்லுங்கள்.

இது சம்பந்தமாக மேலும் தெரிந்தவர்கள் பகிருங்கள்.. என்ன சுதா சுருக்கமாக சொல்லி விட்டு ஓடுறானே என தப்புக் கணக்கு போட்டால் நான் பொறுப்பில்லை. காரணம் இதெல்லாம் எம் சாதனையில்லை பொறுப்பற்ற மூடத்தனமான செயற்பாட்டுக்கு உதாரணங்கள். யாரோ ஒரு வெளி நாட்டுக்காரன் காதலியொட கூத்தடிக்க கட்டி விட்டுட்டு நாங்கள் இங்க சிறு நீர் கழிக்கக் கூட சொந்த இடமில்லாமல் முக்கி முனகுகிறோம்... மன்னியுங்க நல்ல நாள் அதுவுமா சூடாகக் கூடாது. பிறிதொரு பதிவில் இதை தொடுகிறேன். அப்படியே படத்துக்கு கிழே வாங்க..

நான் அவரை திட்டிக் கொள்ளும் பயிற்சி நாட்களில் எடுத்த படம்.
         இன்று உலகத்திலேயே நான் அதிகம் மதிப்பும், பாசமும், நம்பிக்கையும் கொண்டுள்ள என் உறவினரல்லாத (அப்படிச் சொல்வது தப்புத் தான் அனால் அந்த ஒரு வட்டத்திற்குள் அவரை உள்ளடக்க விரும்பல) ஒருவரின் பிறந்த தினமாகும். இந்த பதிவுலகத்தில் மட்டுமல்ல என் கல்வி, விளையாட்டு, பழக்கவழக்கம் என பலதை மாற்றித் தந்தவர் அவர். அவருடைய ஆரம்ப எடு கோள்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பல பதிவுகள் இருக்கிறது. வழமையாக நான் ஒரு தனிப் போக்குடையவன் யாரென்ன சொன்னாலும் நான் தான் முடிவெடுப்பேன் அனால் இவரும், அக்காவும் சொன்னால் மீள் பரிசோதனை என்ற கருத்துக்கே இடமிருக்காது.
      அவரை பற்றி அதிகம் சொல்லாம் ஆனால் உங்களுக்கு வாசிக்க பொறுமையிருக்காது.எங்கள் நட்பு எப்போதும் அப்பழுக்கற்றது. எதிர் பார்ப்பற்றது 2000 ம் ஆண்டு முதல் முதல் சந்தித்தோம். இப்போதும் என்ன பேசினோம் என என்னால் சொல்ல முடியும் அவராலும் முடியும். இத்தனைக்கும் நான் சொல்லாமல் விட்டுச் செல்லும் அவருக்கும் எனக்குமுள்ள பெரிய ஒற்றுமை தான் காரணமாக இருக்கலாமோ தெரியல...

       என்னை எப்படி வழி நடத்தினார் என்பதற்கு சின்ன உதாரணம் ஒரு முறை கிரிக்கேட் விளையாடுகையில் (இவர் தான் எனது பயிற்சியாளரும் கூட) எனது காலில் angle joint ல் உடைவு ஏற்பட்டு விட்டது. இதே ஒரு சர்வதேச வீரருக்கு எற்பட்டிருந்தால் குறைந்தது 3 மாத ஓய்வு ஆனால் 3 வாரத்தில் ஒரு இறுதிப் போட்டிக்கு என்னை தயார்ப்படுத்தி அந்த இறுதிப் போட்டியில் அசைக்க முடியாத சாதனைக்கு சொந்தக்காரர் ஆக்கியவர். இறுதி துடுப்பாட்ட வீரரை வைத்து இறுதி பந்துப்பரிமாற்றம் வரை சென்று போட்டியில் இறுதியில் 6 ஓட்டம் பெற்று (SIXER) வெற்றி அதுமட்டுமல்ல 2 கடினப் பிடிகள் உட்பட 4 பிடிகள் இப்போதும் முகபுத்தக (FACE BOOK) நண்பர்கள் அடிக்கடி நினைவுபடுத்துவார்கள். அவர் இன்னும் சிறப்புற வாழ எனதும் என் குடும்பத்தாரதும் வாழ்த்துக்கள்...

குறிப்பு - அவர் பெயர் ஜீவன் இம்மானுவேல் (மதாத்தால் கூட இருவரும் வேறுபட்டவர்கள்) வயது பெரிதாய் இல்லிங்க 39 தான் அவர் வயது. எனக்கு அடிக்கடி மைதானத்தில் சொல்லும் அறிவுரை “சுதா உமக்கு முடிவெடுக்க முடியாத சூழ் நிலைகளில் குழம்பக் கூடாது உமது மனதுக்கு முதல் எது படுகிறதோ அது சரியாகவே இருக்கும் ஏனேன்றால் நீர் தலைமைத்துவத்தில் ஒரு திறமையானவன் இரண்டாம தடவை சிந்தித்தால் தவறான முடிவு தான் வரும்” நான் பல தடவை பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் பரிசோதித்திருக்கிறேன் அவர் சொல்வது உண்மை தான்..
AM 12:17 - By ம.தி.சுதா 47

47 கருத்துகள்:

வெள்ளி, 4 மார்ச், 2011

பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

வணக்கம் சகோதரங்களே சேமம் எப்படி ?

         அவசர பதிவொன்றுடன் அவசரமாக சந்திக்க வேண்டி வந்துவிட்டது. செவ்வாய் கிழமையே பதிவிட வேண்டியது நேரம் இன்மையால் தவற விட்டுவிட்டேன்.
        இப்போது வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் எனச் சொல்லி பலர் பல வழியில் பணம் பறிக்கத் தொடங்கி விட்டார்கள். இவ்வளவு காலமும் தரகர்கள் மூலம் ஒரு பெரும் தொகைப் பணத்தை சுருட்டிக் கொண்டார்கள். இதில் பெரிதும் பாதிக்கப்படுவது கொஞ்சம் பணம் படைத்தவர்கள் தான். அனால் இப்போ அப்படியில்லை நடுத்தர வர்க்கத்துக்கு கீழ்ப்பட்டவர்களையும் இலக்கு வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
          சென்ற சனிக்கிழமை காலை யாழ்ப்பத்திரிகையான உதயனில் ஒரு விளம்பரம் வந்தது இதில் கனடாவிற்கு உடனடி வேலை வாய்ப்புடனான வீசா எனவும் 0777140416 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் இருந்தது. ஒரு நண்பர் ஒருவர் தொடர்பு கொள்ளுமாறு வற்பறுத்தினார். அதற்கு கொழும்பிலிருந்து ஒருவர் கதைத்தார். அந்த உரையாடலை சுருக்கமாகத் தருகிறேன்.

அவர் - திங்கட் கிழமை கனடா தூதரகத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்கணுமாம்.             அதனால் மறு நாள் கையளிக்க வேண்டுமாம்.
நான் - சரி எங்கு கொண்டுவருவது உங்கள் அலுவலகம் எங்கே இருக்கிறது.
அவர் - இல்லை தம்பி நாளை ஞாயிறு அலுவலகம் திறக்காது உடனடியாக கொடுக்கணும் அதனால் நீங்கள் கொழும்பு வந்து எனக்கு போன் பண்ணுங்க நான் லொட்ஜ்ஜிற்கு வந்து வாங்கறன்.
நான் - முதல் எவ்வளவு பணம் கட்டணும்
அவர் - அதெல்லாம் தேவையில்லை நான் விசா கையில் தருகையில் நீங்கள் 32 லட்சம் தந்தால் சரி.
நான் - அப்படியென்றால் ஆவணம் மட்டும் போதுமா ?
அவர்- இல்லை ஒரு றிசிட் (பற்றுச் சீட்டு) போடணும் அதற்கு 12,200 ரூபா தரணும்.
நான் - வேலை எங்கே ?
அவர் - கனடா எயாப்பொட் ஒன்றில் துப்பரவுப் பணி மாதம் 3 லட்சம் சம்பளம்.

(இவ்வளவும் உங்களுக்கு விளங்கிக் கொள்ளப் போதும் என நினைக்கிறேன். 10 லட்ச ரூபாய் படி 10 பேரை கூட இப்ப ஏமாற்ற முடிவதில்லை அதனால் 10 அயிரம் ரூபா படி 1000 பேரை எமாற்ற ஒரு திட்டம் தான் இது)

சரி இன்னொரு விடயம் கனடாவில் அப்பிள் தோட்டத்தில் வேலை எனக் கூறியும் எடுக்கிறார்கள் முதலில் வீமான பயணச் சீட்டுக்கு 2 1/2 லட்சம் செலுத்தினால் சரி மிகுதி 15 லட்சத்தை வேலை செய்யும் போது கழிக்கப்படுமாம். இதற்கு கனடா நண்பர் யாராவது விளக்கம் தாருங்கள். காரணம் இப்போது அங்கே குளிர் காலம் சரியாக முடியவில்லை அதனால் மரத்தில் இலைகள் கூட இருக்காது. வைகாசி, ஆனி காலப்பகுதி வரை இங்கிருந்து போபவர்கள் என்ன செய்வார்கள்.

முடிந்தவரை மற்றைய நண்பர்களுக்கும் சொல்லுங்கள். யாருக்காவது தகவல் பகிரணுமுன்னா கீழே உள்ள FACE BOOK பொத்தானை சொடுக்கி உங்கள் சுவரில் பகிருங்கள். அல்லது மெயில் பொத்தனை சொடுக்கி மின்னஞ்சலாக அனுப்பலாம். 

நன்றி மீண்டும் சந்திப்போம்.
AM 11:36 - By ம.தி.சுதா 53

53 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top