Featured Articles
All Stories

வியாழன், 31 மே, 2012

எழுத்து விதைப்பாளரின் மறு பக்கங்களும் என் பிரிவு மடலும்

மனிதனென்பவன் எப்போதுமே மனிதக் கணிப்பிற்குள் அடக்கமுடியாத ஒரு வித்தியாசமான ஜந்துவாகும்.எந்தவொரு மனிதனாலும் தன்னையே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கையில் மற்ற மனிதனைப் புரிவதென்பது மிகவும் சிரமமான காரியமாகும்.
AM 11:25 - By ம.தி.சுதா 16

16 கருத்துகள்:

ஞாயிறு, 27 மே, 2012

வன்னி மாணவரின் உளவியல் நிலை பாகம் -1 (ஒலிவடிவம்)

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?

இன்றைய பதிவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நான் சந்தித்த வன்னி மாணவன் ஒருவனைப்பற்றி எழுதுகிறேன். அவனது தனிப்பட்ட விடயமாகையால் அவனது பெயரையோ, படத்தையோ, பாடசாலையையோ குறிப்பிடவில்லை. ஆனால் இறுதியில் அவனுடனான ஒலிவடிவத்தை இணைத்துள்ளேன்.
AM 11:47 - By ம.தி.சுதா 11

11 கருத்துகள்:

வியாழன், 24 மே, 2012

படித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?

சில நாட்களுக்கு முன்னர் ஈழத்தமிழனை பணத்தால் ஏமாற்றிய புத்திசாலிகளின் பட்டியல் என்ற பதிவை இட்டிருந்தேன். அப்பதிவானது இன்று இடப்படும் மிக முக்கியமான இப்பதிவுக்கு முன்னோடியாகும். அதே போல தடுப்பிலிருந்து வந்த 2 வன்னி குடியவர்களும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பற்றி விளக்கத்தின் பின்னர் குறிப்பிடுகிறேன்.
வாருங்கள் உறவகளே...

போட்டித் தன்மை மிகுந்த இந்த உலகில் பணத்தேவையானது ஒவ்வொரு மனிதனுக்கும் அளவு கணகக்கற்று எல்லையின்றி நீண்டு செல்கிறது. அந்த நிலையில் தான் இன்று நான் குறிப்பிடும் இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் பணக்கார சமூகத்தை பெரிய தூண்டில் ஒன்று இட்டு வளைத்துப் போடுகிறார்கள்.

பிரமிட் சிஸ்டம் என்ற ஒரு முதலீட்டு முறையை அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இம்முறையானது ஒரு சட்ட விரோதமான செயற்பாடாகும். இதை நான் சொல்லவில்லை மத்திய வங்கியானது மாதத்திற்கு 2 தடவை இதை தெரிவித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதன் மூலம் சில வாய்ப் பேச்சு விற்பனர்கள் தமது சாமர்த்தியத்தால் பலரை வளைத்துப் போட்டிருக்கிறார்கள்.
இலங்கையில் global life style என்ற நிறுவனம் தான் பலரை ஏமாற்றி தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆனால் இதன் தலைவர் இருப்பது இலங்கையிலல்ல. மலேசியாவில் இருந்து கொண்டு பலரை தனது வலைக்குள் விழ வைத்திருக்கிறார். ஆனால் அந்தத் திட்டத்தில் இணைந்து தொழிற்படும் பலருக்கு அவர் யாரென்றோ இருக்கும் இடம் எதுவென்றோ தெரியாது.
சரி அவர்கள் திட்டம் என்ன என பார்ப்போம் வாருங்கள்.
நீங்கள் அறுபதாயிரம் ரூபாய் செலுத்தி ஒருவருடன் இணைய வேண்டும் (நீங்கள் இணையத் தேவையில்லை உங்களை அவர்களே வலை போட்டுப்பிடித்து அடிக்குடலில் கைவைத்து இழுத்துப் போய் புடுங்கி விடுவார்கள்.) அதற்கு அவர்கள் solar ஒன்று தருவார்கள் அதன் அதிக பட்ச சந்தைப் பெறுமதி 40 ஆயிரம் ரூபாயாக இருக்கும். (ஆனால் உண்மைப் பெறுமதி 30 ஆயிரம் தான்) இது கூட அவர்கள் செய்யும் சட்ட விரோத நடவடிக்கைக்கு ஏதுவாக தாம் வியாபாரம் செய்வதாகக் காட்டவே தருகிறார்கள்.
அதன் பின்னர் நீங்கள் இருவரை இணைத்தல் வேண்டும். அவர்களில் ஒருவர் கட்டும் 60 ஆயிரம் ரூபாயில் இவர்களுக்கு கிடைக்கும்இலாபத்தில் (30 ஆயிரத்தில்) ஒரு பகுதி உங்கள் கணக்கிற்கு வரும். அதன் பின் நீங்கள் இணைத்த இருவரும் இணைந்து 4 பேரை இணைக்க வேண்டும். இப்படியே சங்கிலியாக நீண்டு செல்கையில் உச்சத்தில் இருக்கும் முதலாளி பெரும் பண முதளையாகி விடுவார்.
நீங்களும் ஏமாந்த 30 அயிரத்தைப் பெறுவதற்காக மாடாய் உழைத்து ஆட்களை சேர்க்க வேண்டியிருக்கும்.
யாழில் இதில் ஏமாந்திருப்பவர்களின் பட்டியலில் பல வைத்தியர்கள், எஞ்சினியர்கள், ஆசிரியர்களும் இருக்கிறார்கள். (அவர்களது மரியாதை கருதி அவர்கள் வெயரை நான் குறிப்பிடவில்லை) அதிலும் யாழ் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் 12 ஆசிரியர்கள் இதில் ஏமாந்திருக்கிறார்கள். அப்பாடசாலையில் இந் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 2 ஆசிரியர்கள் வலயப்பணிப்பாளரால் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர்களோ சமூகத்தினுள் இந் நடவடிக்கையை ஈடுபடுத்தி வருகிறார்கள். இவர்களிடம் ஏமாந்த ஆசிரியர் ஒருவர் என்னிடம் நேரடியாகவே இதுபற்றி கவலைப்பட்டுக் கொண்டார்.
இவர்கள் தமது ஏமாற்று நடவடிக்கைக்கு பாவிக்கும் பசப்பு வார்த்தைகள் பல இருக்கிறது.
இவர்களுக்கான பணத்தை நீங்கள் commercial bank வங்கியில் தான் இட வேண்டும். அவர்கள் தான் உங்களுக்கான காசோலையை அனுப்புவார்கள். உங்களுக்கு இந்த ஏமாற்றாளர்கள் கூறுவது என்னவென்றால் “எங்களை இன்னும் நம்பவில்லையா? பாருங்கள் நம்பிக்கையான வங்கி தானே உங்கள் கணக்கை கையாள்கிறது“ என்பார்கள்.
அந்த வங்கியும் தமது சில லாபங்களுக்காக இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு உடன் போகிறது.
அதே போல வைத்தியர்கள் போன்ற பெரியவர்களிடம் அவர்களது வாகனத்திற்கான மாதக் கட்டணம் போன்றன வங்கி மூலம் நீங்களே செலுத்தலாம் என கூறிக் கொள்வார்கள். இப்படி பல பசப்பு வார்த்தைகளைக் கூறி பெரிய பண வருவாய்க்காரர்களை வீழ்த்தி விடுவார்கள்.
இதில் நகைப்புக்குரிய விடயம் என்னவென்றால் ஒப்பட்டுரீதியில் கூலித் தொழில் செய்யும் எவருமே இவர்கள் வலையில் விழுவது குறைவு. காரணம் என்ன என சிந்திக்கிறீர்களா? ஒரு உண்மையான கூலித் தொழிலாளி பணத்துக்காக தன் வியர்வையை மட்டுமே நம்பியிருப்பான். மற்றவரின் பணத்திற்கு ஆசைப்படமாட்டான். இது ஒருவகை சோம்பேறிகளாலும் ஏமாற்றுக்காரர்களாலும் நடாத்தப்படும் ஒரு வியர்வை சிந்தாத பண உழைப்பாகும்.
இந்த ஏமாற்று நடவடிக்கையானது தற்போது வன்னிக்குள்ளும் சிலரால் திணிக்கப்பட்டதன் விளைவாக பலர் விபரம் தெரியாமல் ஏமார ஆரம்பித்துள்ளார்கள். ஏமாந்தவர்களில் இரு நண்பர்கள் மிகவும் இதனால் அமனம் உடைந்து விட்டதாகக் கூறினார்கள். அவர்களின் இந்த மன உளைச்சலே எனது இந்தளவு தேடலுக்குக் காரணமாக அமைந்து விட்டது.
மத்திய வங்கி அறிக்கையின் படி பாதிக்கப்பட்ட ஒருவர் வழக்குத் தொடுத்தால் இவர்களை கைது செய்ய முடியும் ஆனால் அதற்கான வக்கிலுக்கு எங்கே போவது. யாராவது இதன் மேல் நட்டம் கொண்டிருந்தால் கை கோருங்கள். சட்ட ரீதியாக ஒன்று சேர்ந்து எதிர்ப்போம்.
அதே போல ஆசிரியர்களும் இது பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும். ஒவ்வொரு வலயப் பணிப்பாளர்களும் இது பற்றி சுற்று நிருபம் ஒன்றை அதிபர்களுக்கு வழங்க வேண்டும்.
“விழிப்போடிருந்து ஒரு வளமான எதிர்காலத்தை பிரகாசமாக்குவோம்”

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

இந்த ஆக்கதை பகிர்வதன் மூலம் தங்களுக்குத் தெரிந்த பெரியவர்களிடம் சேர்ப்பிக்க உதவுங்கள்.


குறிப்பு - இந்த மாதத்துடன் நான் இணைய உலகுக்கு வேளியெ செல்ல இருக்கிறேன். மீண்டும் ஒரு சில மாதத்தில் இணைந்து கொள்கிறேன். காரணம் இறுதிப் பதிவில்.
மேலே சொன்ன எதுவும் விளங்காதவர்கள் இந்தக் குறும்படம் பார்த்தால் அதன் அவஸ்தை புரியும்

13 கருத்துகள்:

சனி, 19 மே, 2012

வன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்

இந்தப் பதிவானது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்து தற்போது அந்த இயக்கத்தின் போராளிகளின் அர்ப்பணிப்பை பொய்யென உரைக்க முயலும் தளமொன்றிற்காக அதன் உண்மை ஆதாரத்தை வழங்குவதற்காக எழுதப்படுகிறது.

இந்த படங்களை பெறுவதற்காக எனது நண்பர் ஜீவன் அவர்கள் தனது உந்துருளியையே தந்திருந்தார். நேற்று முழுதும் சாவகச்சேரிப் பகுதியில் அலைந்து பெற முடியாமல் போனதை இன்று பருத்தித்துறை பகுதியில் பாடசாலையில் சமையல் வேலை செய்பவர் ஒருவரின் வீட்டில் இருந்து பெறமுடிந்தது.

அவர்கள் வழங்கிய செய்தியென்னவென்றால் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட விட்டமின்களை புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற தொனிப்பொருளில் அவர்கள் இணையத்தளத்துக்கு கிடைத்த செய்தியாகப் பகிர்ந்திருந்தார்கள். அப்படியானால் நான் கேட்கிறேன் என்னிடமும் அந்த கலன்கள் இருக்கிறது. அப்படியானால் எனக்கும் அமெரிக்காவிற்கும் தொடர்பிருக்கிறதா?

புலிகள் பயன்படுத்தினார்கள் என்றால் அது பற்றி சிந்திப்பதே இல்லையா? இது பற்றி வைத்தியசாலை ஒன்றினுள் வேலை செய்தவரிடம் கேட்டிருந்தாலே முழுத்தகவலும் கிடைத்திருக்குமே.

5 நாளுக்கு மேல் சாப்பிடாமல் களத்திலிருந்து காயப்பட்டவளும் இருக்கிறார்கள். ஒரு நாள் வயிற்றோட்டத்திற்கே 3 சேலைன் ஏற்றியவர்கள் இருக்கையில் எத்தனையோ நாள் ஒழுங்கான நீர் இன்றி இறந்தவர்கள் இருக்கிறார்கள். காயத்தால் குருதி வெளியேறியிருக்கும் அதை ஈடு செய்வதற்கு முன்னர் அவர்களது உடல் நிலையை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே உயிர் பிரிந்து விடும். இவை ஒரு சிலது மட்டுமே இப்படி பல நூறு கதைகள் இருக்கையில். ஒரு அர்ப்பணிப்பாளர்களைப் பற்றி எதுவும் சிந்திக்காமல் எழுதுவது என்பது மிகவும் அபத்தமானது.


இந்த படங்களை பாருங்கள் புரியும். அப்படத்தில் உள்ளது USA aid என்ற திட்டத்தின் மூலம் ஐநாவானால் பாடசாலை மாணவருக்கான உணவுத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட தேங்காய் எண்ணெய்க் கலன்களாகும். இது வன்னியில் மட்டுமல்ல யாழின் பட்டி தொட்டியெங்கும் இருந்த ஒன்று. ஆனால் இரும்பு வியாபாரிகளின் வருகையால் அருகி விட்ட நிலையில் தான் அதன் படம் எடுப்பதற்காக நேற்றும் இன்றும் நான் அலைய வேண்டிய தேவை வந்து விட்டது.

செய்திக் கணக்குக்காக இணையத் தளங்களால் வெளியிடப்படும் செய்திகளால் காலப் போக்கில் வரலாறுகள் மாற்றப்படலாம். இதே செய்தி இன்னும் சில நாளில் அமெரிக்க வழங்கிய செறிவூட்டிய விட்டமின்களில் நஞ்சு கலந்திருந்தார்கள் எனவும் செய்தி வரலாம்.

இதை அத்தளத்துக்கு எடுத்துரைக்க பல முறை மினு்னஞ்சலில் தொடர்பு கொண்டும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை அதனால் தயவு செய்து இந்தச் செய்தி எத்தனை பேரிடம் போய்ச் சேர்ந்து தவறான எடுகோள் எடுக்கப்பட்டதோ தெரியவில்லை அதனால் இந்தச் செய்தி தவறானது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். யார் வேண்டுமானாலும் இந்தத் பதிவையோ அல்லது இதில் கூறப்பட்டுள்ள செய்தியையோ எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

15 கருத்துகள்:

வியாழன், 17 மே, 2012

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்

வணக்கம் ஐயா சேமம் எப்படி?
ஈழத்திலிருந்து ஒரு அடிமுட்டாளிடமிருந்து இப்படி ஒரு மடலை நீங்கள் காண வேண்டிய பாக்கியம் பெற்றது தங்களது தூரதிஸ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் பலருக்கு எமது உணர்வுகள் வியாபாரப் பொருளாகிப் போனதால் புல் பூண்டு கூட அறச்சீற்றத்துடன் தான் இங்கிருக்கிறது.
இந்திய ராணுவத்தின் இலங்கை வருகையின் போது எனக்கு 2 வயது தான் ஆனால் அவர்கள் தந்த தாக்கமோ எத்தனை வருடங்களானாலும் எம் மனதை விட்டு அகலாது.
இந்திய ராணுவ வெளியேற்றத்திற்காக போராடியவர்களில் எனது தந்தையும் ஒருவராவார். தியாகி திலீபன் அண்ணா உண்ணாவிரதம் இருந்த காலப்பகுதியில்வல்வெட்டித்துறை சந்தியில் 5 நாட்கள் இருந்த நால்வரில் அவரும் ஒருவர். இது பற்றி பழநெடுமாறன் ஐயா இங்கு வந்தது பற்றி எழுதிய புத்தகத்தில் பெயருடன் குறிப்பிட்டுள்ளார். அப்போது இந்தியருடே வெளியிட்ட சஞ்சிகையில் அவர் மடியில் இருக்கும் சிறுவன் தான் நான்.
என் தந்தை அடிக்கடி சொல்வார். எம் மீது இந்தளவு கோரம் செய்த சிங்கள ராணுவத்தை விட இந்திய ராணுவத்தின் மேல் தான் எனக்கு கோபம் அதிகம். ஏனென்றால் சிங்கள ராணுவத்திற்கும் எமக்கும் பகைமைக்கான காரணம் இருக்கிறது. ஆனால் இந்திய ராணுவம் அப்படியில்லையே. அதே வல்வெட்டித் துறை சந்தியில் 48 அப்பாவி பொது மக்களை கட்டடம் ஒன்றினுள் வைத்து குண்டு வைத்து கொன்றார்கள். உங்களுக்கு மடல் போட்ட அந்த ராணுவவீரரிடம் இதற்கு காரணம் கேட்டு சொல்ல முடியுமா?

கற்பழிப்பு என்றால் என்னவென்று தெரியாதது போல கேட்கும் அவர்களால் வரலாற்றை ஒரு போதும் மறைக்க முடியாது. ஏனென்றால் மட்டக்களப்பில் நடந்த சம்பவம் ஒன்றை கேளுங்கள். இது ஒரு படத்திலும் காட்டப்பட்டிருந்தது.
“ஒரு ஏழைப் பெண் வீட்டு முற்றத்தில் இருந்து தோசை சுட்டுக் கொண்டிருந்தார். அழும் குழந்தையை ஆற்றுவதற்காக அருகே கிடத்தியிருந்தார். அப்போது இந்திய ராணுவக் காடையர் வந்திருக்கிறார்கள். அவர்களது தப்பான கதையைக் கேட்டு அப் பெண் வீட்டினுள் ஓடிப் போய் கதவை சாத்திவிட்டாள். அப்போது அந்த பிள்ளையை தூக்கி தோசைக்கல்லில் போட்டு விட்டு அந்தப் பெண்ணையும் வன்முறை செய்து விட்டு போய்விட்டார்கள். அப்பெண் அதே வீட்டினுள் தூக்கிட்டு மரணத்தை தேடிக் கொண்டாள். அந்தக் காலத்தில் பல பெண்கள் அகப்பையை எறிந்து விட்டு சுடு குழல் தூக்க காரணமாக அமைந்த சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்.”

இதை இந்த ராணுவ வீரர்களால் மறைக்க முடியுமா?

இது மட்டுமல்ல அவர்களின் சபலப் புத்திக்கு இன்னும் சொல்கிறேன் கேளுங்கள். திருவெம்பாவை மற்றும் விரத காலங்களில் பெண்கள் அதிகாலையே குளிப்பதற்கு கிணற்றடி போவர்கள். அப்படியான காலத்தில் றோந்து என்னும் சாக்கில் வந்து இரவே இவர்கள் கிடந்து விடுவார்கள். ஆனால் இவர்களிடம் பாதகமான ஒரு விடயம் என்னவென்றால் இவர்களில் ஒருவித நெய் மொச்சை அடிக்குமாம் அதை வைத்து பெண்கள் அறிந்து விடுவார்கள். அதன் பின்னர் என்ன அன்று விரதம் அதோ கதி தான்.

அதே போல இன்னுமொரு கருத்திருக்கிறது. ராணுவத்தில் ஒதுக்குப்புறமான சென்ரிகளில் (அரங்குகளில்) நிற்பவர்கள் உள்ளாடை அணிவதில்லையாம். பெண்களைக் கண்டால் ஜீன்சை கழட்டி விட்டு ஏதோ செய்வார்களாம். இதையெல்லாம் உங்களுக்குக் கடிதம் எழுதிய ராணுவ வீரர்களால் மறுக்க முடியுமா?

இது மட்டுமல்ல இதே காட்டுமிராண்டிகள் தான் யாழ் வைத்தியசாலையில் 50 ற்கு மேற்பட்ட வைத்தியர், தாதியர், ஊழியர் என பலரை சுட்டுக் கொன்று குவித்தார்கள். அதெல்லாம் வரலாறில்லையா? அதை இவர்களால் மறுக்க முடியுமா? இவர்களை வரவேற்க தமிழ் நாட்டுக்காரன் போகவில்லை என்று கேட்கும் போது நான் உச்சி குளிர்ந்து சந்தோசப்பட்டேன்.

உதாரணத்திற்கு இந்திராகாந்தி செத்த போது யாழ்ப்பாணமெங்கும் 3 நாள் கடையடைப்புச் செய்து வாழை மரம் நாட்டி ஒட்டு மொத்த தமிழனும் துக்கதினம் அனுஸ்டித்தான். ஆனால் அதே தாயின் மகன் இறந்த போது கற்கண்டு, ரொபி கொடுத்து கொண்டாடினார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இங்கு புலிகளின் பிரச்சாரமோ அல்லது ஊடகங்களின் பிரச்சாரமோ அவர்களை மாற்றவில்லை. ராஜீவின் மேல் இருந்த அந்தளவு வெறுப்பும் தான் காரணம்.
நான் அவசரமாக எழுதுவதால் பல ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாமல் போய்விட்டது. கற்பழிப்பு சம்பந்தமாக வழங்கப்பட்ட பேட்டிகள் அடங்கிய பத்திரிகைக் கோவைகள் சேகரித்துத் தருவதா இருந்தால் சொல்லுங்கள் தேடி எடுத்துத் தருகிறேன். நீங்கள் ஒரு பக்கச்சார்பற்ற நடுநிலையான எழுத்தாளர் என நிருபிக்க நினைத்தால் கடிதம் வரைந்த அதே நபர்களிடம் இதற்கு விளக்கம் பெற முயற்சியுங்கள். ஏனென்றால் இவை வடுக்கள் என்றும் அழியாதவை.

நன்றியுடன்
அன்புச் சகோதரன்

48 கருத்துகள்:

திங்கள், 14 மே, 2012

ஈழத்தமிழனை பணத்தால் ஏமாற்றிய புத்திசாலிகளின் பட்டியல்

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
இன்றைய பதிவில் தங்களுடன் ஒரு நகைச்சுவை கலந்த ஏமாற்று வேலைகள் சம்பந்தமாக கதைக்கப் போகிறேன்.

18 கருத்துகள்:

வெள்ளி, 11 மே, 2012

AIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?

தொழில்நுட்பத்தில் உயரிய வளர்ச்சி பெற்றிருக்கும் இக்காலத்தில் அதிகளவான ஆதிக்கத்தை செலுத்தி நிற்பது தொலைத்தொடர்பு தான். அந்தவகையில் தொலைபேசி வலையமைப்பு என்பது ஒரு மனிதனின் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது.

10 கருத்துகள்:

திங்கள், 7 மே, 2012

அவமானங்களைக் கடந்த தமிழ்மணத்திற்கொரு சேவை நலன் பாராட்டுவிழா

உறவுகளே சேமம் எப்படி?

போர் மேகங்கள் கலைந்த ஒரு பதிவுலகத்திலிருந்து ம.தி.சுதா எழுதும் ஒரு பாராட்டுப் பதிவாகும்.
இப்பிரச்சனைகளை தமிழ்மணம் தலையிட்டு நாம் எதிர்பார்த்த நோக்கத்தை தந்திருந்தாலும். தமிழ்மணத்தின் பெரும்தன்மையை இவ்விடத்தில் பாராட்டியே தீரணும் என்ற காரணத்துக்காகத் தான் இப்பதிவு இடப்படுகிறது.

இந்தப் போர் ஏன் உருவானது என்ற கேள்வி பலரிடம் இருக்கலாம். முதலில் அதற்கான என் சார்ந்த விளக்கத்தை அளித்து விட்டு நகர்கிறேன். கடந்த சில மாதங்களாக தமிழுக்காக சேவை செய்வதற்காக இலாபநோக்கமின்றி உருவாக்கப்பட்டிருந்த தமிழ்மணம் என்ற திரட்டியை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் தமது மதப்பிரச்சாரத்திற்காக முற்று முழுதாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதுமட்டுமல்லாமல் தமது பதிவுகளை முன்னிலைப்படுத்துவதற்காக போலி கணக்குகளை வைத்து மறை வாக்கிட்டு மற்றைய பதிவுகளை பின்னுக்குத் தள்ளுவதுடன். தமது பதிவுகளுக்கு நேர் வாக்கிட்டு முன்னிலைப்படுத்தியதுடன். மற்றைய மதங்களையும் அவர் சடங்குகளையும் மிகவும் தரம் தாழ்த்தி எழுதி வந்தார்கள்.

இவை மற்றப்பதிவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தாலும் யாரும் பிரச்சனைகள் வேண்டாமென ஒதுங்கியிருந்தார்கள். (ஆதாரம் அவர்கள் இட்ட கருத்துக்களும் எமக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிய மடல்களும் ஆதாரங்களுமே ஆகும்).
இதை தமிழ்மணம் அனுமதித்தது என நான் கூறமாட்டேன். காரணம் சேவை நோக்காகச் செயற்படும் ஓரிருவரை மட்டுமே வைத்துத் தான் அந்த பெரும் தளம் செயற்பட்டு வருகிறது. இருந்தாலும் இந்தப் பிரச்சனையில் அவர்கள் நடந்து கொண்ட விதம் அவர்களது பெரும்தன்மையைக் காட்டினாலும் இந்த சேவைத் தளத்திற்கு சில மாதங்களுக்கு முன் கிடைத்த அவமானமானது யாராலும் மறக்க முடியாதது.
தமிழுக்காக உழைத்த இத்தளத்தை அதே கும்பலைச் சேர்ந்த அத்தனை பேரும் தமிழ்நாற்றம் என்று அழைத்ததுடன். அந்த நிறுவனத்துக்கு படி பெறாது உழைத்த திரு.ரமணீதரன் என்பவரை மிகவும் தரக் குறைவாக திட்டித் தீர்த்தது.
அதுமட்டுமல்ல மத்தியகிழக்கு நாட்டில் இத்தளம் அக் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக செயற்படுகிறது என பரப்புரை செய்யப்பட்டு தடை செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் அவர்கள் அனைவரும் அத்திரட்டியை புறக்கணிப்பதாக பகிரங்க அறிக்கை விட்டதுடன் அதன் வாக்குப்பட்டையையும் நீக்கிக் கொண்டார்கள்.
ஆனால் இன்று????????
நான் சொல்லியா தெரிய வேண்டும்...

ஆனால் கடந்த தினத்தில் தமிழ்மணம் அனைத்து மதவாதப் பதிவுகளையும் இனி தமிழ்மணம் ஏற்காது என்ற உத்தியோகபூர்வ முடிவால் எல்லாம் முடிவுக்கு வந்திருக்கிறது. அதன் மூலம் அவர்களும் தமிழ்மணத்திற்கு நன்றியைச் சொல்லி தாம் தப்பித்துக் கொண்டதை கொண்டாடிக் கொண்டார்கள்.

இனிவரும் காலங்களிலும் தமிழ்மணம் எத்தனை தடைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு தனது சேவையை தற்பொழுது போல நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதோடுமட்டுமல்லாமல். தங்கள் சேவைக்கு தடை ஏற்படுத்துகிறார்கள் என தாங்கள் கருதுபவர்களை நீக்குவதற்கும் தயங்கக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.(இதில் என்னையும் உள்ளடங்கலாகவே கூற விளைகிறேன்)

தங்கள் சேவை என்றென்றும் தொடர வாழ்த்தி விடைபெறும்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
தமிழ்மணத்தின் உத்தியோக பூர்வ அறிவிப்பபைக் காண்பதற்கும், நகைச்சுவைக் கருத்துக்களை கண்டு வாய்விட்டுச் சிரிக்கவும் இந்தத் தொடுப்பில் செல்லவும்..
இங்கே சொடுக்கவும்


பிற்சேர்க்கை (2.24 PM/ 08/05/2012) - இத்தால் அனைவருக்கும் அறியத்தருவது யாதெனில் தமிழ்மணத்தின் தண்டனைவிதிகளின்படி முதல் தண்டனை எனக்கே வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாக்கம் தமிழமணத்திலிருந்து விலக்கப்பட்டடிருக்கிறது. இருந்தாலும் அவர்களது காரணத்தில் தெளிவு பெற்றிருப்பதால் அத்தண்டனையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.
PM 9:18 - By ம.தி.சுதா 6

6 கருத்துகள்:

செவ்வாய், 1 மே, 2012

பதிவர்களின் இஸ்லாமிய வெறுப்புக்கு காரணம் என்ன?-ஒரு சமகால அலசல்

முற்குறிப்பு - இப்பதிவானது மதவெறி பிடித்தலையும் சில இஸ்லாமிய வெறியர்களுக்காகவே எழுதப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு நான் ஒரு மதவாதி என யாரும் நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல நானும் ஒரு மதவாதி தான். எனது மதமானது மதங்களை அழிக்கும் மதமாகும்.

உலகப்படைப்பானது யாரால் இடம்பெற்றது என பல்வேறு கருத்துக்களால் மனிதர்களானவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு திக்கித் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இயற்கையின் சக்கரத்தில் காலநிலை மாறலில் ஏற்படும் புவிமாற்றமே பல மதவாதிகளுக்கு மதப் பிரச்சாரத்திற்கு தூண்டு கோலாக அமைந்து விடுகிறது. இப்பதிவானது சில இஸ்லாமியபதிவர்களின் மிலெச்சத்தனமான மதவாதத் தாக்குதலாலேயே இடப்படுகிறது.
இதற்கு அவர்கள் ஒரு கேள்வியை எழுப்பலாம். மற்ற மதத்தைப் பற்றி கதைக்க எவனுக்கும் தகுதி இல்லையா? எனலாம். மதம் என்பது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம் அதை யார் மேலும் திணிக்க முடியாது. தனது பிட்டத்தை ஒழுங்காக கழுவும் ஒருவனால் மட்டுமே மற்றவர் பிட்டமணம் பற்றி கதைக்க முடியும்.
இந்த கால ஓட்டத்திற்கான முதல் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது சகோதரி ஆமினா முகமட்டிடம் இருந்து தான்.
ஆதாரம்-
அதன் பின்னர் அவருக்கு பதில் அழிக்கையில் பலர் தெரிவித்திருந்தோம் இப்படி நீங்கள் கூறியது தப்பில்லை ஆனால் அது எப்போது உண்மையென்றால் நீங்கள் உங்கள் மத ஓட்டை பற்றியும் கூறியிருந்தால் இது சரி. உங்களுகு இதற்கே குமட்டல் வந்தால் நபியின் 10 திருமண வரலாறையும் கேட்டவனுக்கு குடல் முழுக்க அல்லவா வெளியே வரணும்.
எப்படி இருக்கிறது பாருங்கள் இவர்களது மதப்பிரச்சாரம். இப்படி இடுவார்கள் அப்புறம் யாராவது தட்டிக் கேட்கப் போய் மோட்டுக் கேள்வி கேட்டால். ஒரு இறை தூதர் வருவார் வந்து கேட்பார் “உங்களுடன் சகோதரியாக பழகியவரிடம் இப்படியா நடப்பது” என்பார். சகோதரியாக பழகியவர் என்பதற்காக எல்லாத்தையும் வழி மொழிய வேண்டிய அவசியம் இல்லையே.

Aashiq Ahamed சகோ ப்ளீஸ், உங்கள் வாதத்தில் சிறிதும் லாஜிக் இல்லை. உங்களுக்கு சற்றே ஓய்வு தேவை என்று நினைக்கின்றேன். எங்கள் மார்க்கத்தில் நடக்கும் மூட நம்பிக்கைகளை எதிர்த்து போராடி தான் இது வரை வந்துள்ளோம் என்று கூறுகின்றேன்.
இதை எத்தனை பேரால் நம்ப முடிகிறது. நீங்கள் ஏதாவது கேட்டால் கருணாநிதி பதில் சொல்வது போல 10 சம்மந்தமே இல்லாத லிங்கை கொண்டு வந்து கொடுப்பார்கள்.
திரு சுவனப்பிரியன் அவர்கள் நித்தியானந்தவை இந்து மதத்தோடு திரிபுபடுத்தி எழுதியிருந்தார். அதன் தாக்கத்தை மதுரன் தெளிவாக விபரித்திருந்தான் தொடுப்பு கடைசியில் தருகிறேன். ஒற்றை ரஞ்சிதாவை தொட்டது தான் இந்தளவு பிரச்சனை என்றால். நபி அவர்கள் 10 பேரை தொட்டதற்கு உங்கள் மதம் என்ன செய்ய வேண்டும்.
1.25 ஆவது வயதில் 40 வயது கதியா எனும் பணக்கார விதவையை திருமணம் செய்தார்.
2.கத்யாவின் மரணத்திற்கு பின்பு 50 வயதான சௌதா பிந்த் சமா எனும் மற்றுமொருமொரு விதவையை முகமது திருமணம் செய்தார்.
3.அபு பக்கரின் மகள் அயிஷாவை முகமது நபி திருமணம் செய்தான். அப்பொழுது அயிஷாவினுடைய வயது 6.
4.ஹவ்சா பிந்த் உமர் அடுத்து இவர் மணந்த பெண்ணாவர்.. முகமது இவளை திருமணம் செய்யும் பொழுது இவளுக்கு வயது 20, முகமதுக்கு 56.
5.சைனாப் பிந்த் குசைமா. இவளுடைய கணவன் கொலை செய்யப்பட்டதற்கு பின்பு, முகமதுவை திருமணம் செய்து 8 மாதத்திற்கு பின்பு இவள் இறந்தாள்.
6.போரில் உம் சலாமா ஹிந்த் பிந்த் அபி உமயா எனும் பெண்ணுடைய கணவன் இறந்ததும் இவளும் முகமதை திருமணம் செய்து கொண்டாள். திருமணம் செய்யும் சமயம் இவளுடைய வயது 29.
7.20 வயது யுவேரியா பிந்த் ஹரித்வையும் முகமது நபி திருமணம் திருமணம் செய்தார். அப்பொழுது முகமது நபிக்கு 58 வயது. இவளுடைய தந்தையை முகமது தாக்கி, இவளை சிறைப்பிடித்து திருமணம் செய்தார்.
8.உம் ஹபிபா ரம்லா 35 வயதாக இருக்கையில் 60 வயதான முகமது இவளை திருமணம் செய்து கொண்டான். இவள் அபு சுயிபானுடைய மகள். இவன் முகமதுடைய பெரிய எதிரி.
9.சபியா பிந்த் ஹீயாய் வயது 17 ஆக இருக்கையில் 60 வயதான முகமது இவளை திருமணம் செய்து கொண்டார். இவளுடைய கணவன் முகமதினுடைய ஆட்களினாலே கொல்லப்பட்டான். முகமதுவின் மரணத்திற்கு பின்பு இவள் விதவைவாயாகவே வாழ்ந்து தன்னுடைய 60 ஆவது வயதில் இறந்தாள்.
10.மைமுனா பிந்த் அல் ஹரித் - முகமது மணமுடித்த பத்தாவது பெண். இவர்பற்றிய மேலதிக விபரங்களை அறியமுடியவில்லை..
      
இதை விடவா நித்தியானந்தா மோசமாக செய்து விட்டார் (நான் நித்தியானந்தாவுக்கு வக்காளத்து வாங்குவதாக யாரும் நினைக்க வேண்டாம இது ஒரு உதாரண ஒப்பீடு மட்டுமே.) பணத்துக்காக இத்தனை விதவைகளை மணம் முடித்தவரையா மற்ற மானிடர் பின்பற்ற வேண்டும்.

ஆதனால்,ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும்.

எவ்வளவு ஒரு மடத்தனமான பிரச்சாரம் பாருங்கள். அத்துடன் கல்கி தான் இந்துக்களின் முழு முதற்கடவுள் என்பது தான் இவர்களது நம்பிக்கை வேறு. இவரிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். நான் உங்கள் மதத்திற்கு வரத் தயார் ஆனால் எனக்கும் 10 கலியாணம் செய்து தருவீர்களா?

இவர்களிடம் வாதிடப் போனால் என்ன நடக்கும் தெரியுமா. யாராவது ஒரு பெண் வந்தால் சரி இப்படியான வாதத்தைத் தான் திசை திருப்புவார்கள்.

Siraj Mohamed என்ன சுஜிதா. நீங்கள் சொல்வது போல் வைத்துக்கொள்வோம்.
உங்கள் தங்கையை ஒருவன் கற்பழித்து கொலை செய்துவிட்டான் என்று வைப்போம். மன்னிப்பின் மாணிக்கமல்லவா நீங்கள்.... மன்னிப்பீரோ....... இல்லை கற்பிழப்புக்கு நீதிமன்றம் மூலமாக பணம் பெறுவீரோ...

 இவர்களது மதவாதத்திற்காக Faris Bin Gafoor  என்ற மத ஒப்பீட்டியல் மாணவன் என்று ஒருவரை களமிறக்கினார்கள். அவர்
Director(student) at National Film Corporation of Sri Lanka இருப்பதுடன் ICBT Campus ல் கல்வி கற்று வருகிறாராம். அவரது கருத்தின்படி எங்களை அது படித்திய இது படித்தியா எனக் கேள்வி கேட்டார். நான் கேட்டேன் குர் ஆனில் அன்பைப் போதிக்கும் ஒரு வசனம் தாருங்கள் என்றேன். ஏதோ இலக்கத்தைத் தருகிறார். போதாத குறைக்கு தான் இருக்கு, யசூர் போன்ற நான்மறைகளைக் கற்ற ஒருவனாம். அதிலிருந்து இஸ்லாம் தான் சிறந்ததாம். எவ்வளவு மற்றவனை மடையானாக்குகிறார்கள். நான் மறையை முனிவர்களைத் தவிர யாருமே கற்றதாக புராணங்கள் சொல்லவில்லை.
போதாத குறைக்கு சிராஜ் ஒரு முறை தன் பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஈழம் ஈழம் எனக் கத்துவோர் யாராவது ஒரு ஈழ விதவைப் பெண்ணுக்கு வாழ்வளிப்பீர்களா என்கிறார். (படங்கள் அதிகமாகையால் அந்த ஸ்கிரீன் சொட்டை தரவில்லை தேவைப்பட்டால் தருகிறேன்). நிச்சயமாக ஆனால் அதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் சட்டப்படி 5 மணம் செய்யலாம் அதனால் 4 எய்ட்ஸ் பெண்ணுக்கு வாழ்வளியுங்கள் நாங்களும் தங்கள் கேள்விப்படியே நடக்கிறோம். காரணம் உங்கள் நபி பணத்துக்காகத் தானே இத்தனை விதவைகளை மணம் முடித்திருக்கிறார்.

தனியே வாதங்களில் மட்டும் ஈடுபட்டு வந்த நான் இடும் முதாலாவது எதிர்ப்புப் பதிவு இது தான். உங்களால் மற்றவர் மதம் எப்படிச் சாடப்படுகிறதோ அதே போல் உங்கள் மதமும் எம்மால் சாடப்படும். நீங்கள் விட்ட தவறு என்னவெனில் ஒரு இந்து வெறியனுடனோ அல்லது கிறிஸ்தவ வெறியனுடனோ மோதியிருக்கலாம் ஏனெனில் அவன் தனது மதம் தவிர்ந்த  ஏனைய எதையும் படிக்கமாட்டான். ஆனால் மதத்தை எதிர்க்கும் வெறியர்களோடு மோதினால் இது தான் கதி. அது முடிவல்ல ஆரம்பம்..

நன்றிச் செதுக்கலுடன்
மத எதிர்ப்பு வெறியன்
ம.தி.சுதா

பதிவுலகத்தில் இவர்கள் நடத்தும் கூட்டாட்சிக்கான ஆதாரம் இதோ தமிழ்மணத்தில் உலாவும் போலி ஐடிகள் ; அம்பலமான குட்டு

விரைவில் - கனடா தேசத்தில் அல்லா செய்த கொடுரப் படுகொலை (ஒரு கிரைம் உண்மைச் சம்பவம்)
PM 10:46 - By ம.தி.சுதா 40

40 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top