Featured Articles
All Stories

புதன், 29 அக்டோபர், 2014

உலகின் சிறந்த ஆவணப்படங்களை இலவசமாக அள்ளி எடுப்போமா?

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?


இன்று நண்பர் ஒருவரின் திரைப்படம் ஒன்றுக்காக விஞ்ஞானத் தகவல்கள் சேகரிக்க தேடும் போது கண்ணில் இத்தளம் தட்டுப்பட்டது.

உள்ளே நுழைந்து பார்த்தால் அப்பாடி எவ்வளவு தகவல்களை அடக்கிய ஆவணப்படங்கள். அதுவும் விருதுகள் வென்றதுடன் பரவலாகப் பெசப்பட்ட உலகின் முக்கிய ஆவணப்படங்கள் பெரும் தொகையாக காணப்படுகிறது.

அதுவும் தரப்படுத்தப்பட்டு வகைப்பிடிக்கப்படடம் எமது தேடலுக்கு இலகுவானதாகக் காணப்படுகிறது.


  • 9/11 (48)
  • Art and Artists (40)
  • Biography (58)
  • Comedy (14)
  • Conspiracy (134)
  • Crime (138)
  • Drugs (92)
  • Economics (105)
  • Environment (141)
  • Health (115)
  • History (234)
  • Media (24)
  • Military and War (125)
  • Mystery (138)
  • Nature (170)
  • Performing Arts (71)
  • Philosophy (18)
  • Politics (138)
  • Psychology (51)
  • Religion (143)
  • Science (381)
  • Sexuality (47)
  • Society (427)
  • Sports (59)
  • Technology (114)













மேலே உள்ள வகைப்பிரிப்பில் அடைப்பில் உள்ள தொகை அடிப்படையில் ஆவணப்படங்கள் காணப்படுகிறது.

அத்தளத்திற்கு செல்ல இந்தத் தொடுப்பில் செல்லுங்கள். http://topdocumentaryfilms.com/

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

PM 6:12 - By ம.தி.சுதா 6

6 கருத்துகள்:

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

ரொம்பவே பாவம் அம்மா அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்

என்னோட அம்மா
ரொம்பவே பாவம்
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்

தேயிலை போட்டதால் தான்
தேநீர் என உணர்ந்தும்
மனதால் மட்டும் சீனி போடுகிறார்

இரு முறை உப்பிட்ட குழம்பில்
கொஞ்சம் தந்து கேட்கிறார்
உப்பிட்டேனா என பார்த்து சொல் என்று

ரொம்பவே பாவம் அம்மா
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்

ஆசையாய் வைத்த கறியில்
ஒரு கறியேனும் போட மறந்து போய்
இரண்டாம் தடவை உண்ணென
குழந்தையாய் கெஞ்சுகிறார்

மணிக்கூட்டு அலாரத்துக்கு கூட
மணிக்கொரு சாத்திரம் வைத்து
தன் மனசை தேற்றுகிறார்

ரொம்பவே பாவம் அம்மா
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்

பெற்றெடுக்கா பிள்ளைகளான
பல்லிகளுக்கு உணவளிக்க
தனியாய் ஒரு மின்குமிழ்
ஒதுக்கி வைத்திருக்கிறார்

பல்லி மிச்சம் வைத்த
ஒற்றை பூச்சியேனும்
அடிக்கடி எட்டிப் பார்க்கும்
ஏதாவது ஒரு உணவுக்குள்

ரொம்பவே பாவம் அம்மா
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்

இத்தனைக்குள்ளும்
அறுசுவை உணவே உண்கிறேன்
அத்தனை குறையையும்
தான் சந்தோசமாயிருப்பதாய்
நடித்து அளிக்கும்
பாசம் என்ற சுவையூட்டியால்
அறு சுவை உணவே உண்கிறேன்

ரொம்பவே பாவம் அம்மா
அடிக்கடி தன்னை மறந்து போகிறாா்

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
PM 10:39 - By ம.தி.சுதா 5

5 கருத்துகள்:

வெள்ளி, 10 அக்டோபர், 2014

ஓட ஓட கலைத்த என்னுடைய நவராத்திரி நகைச்சுவை நாடகம் - 2014

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
இன்றைய பதிவில் கடந்த நவராத்திரி விழா அன்று எம் ஊரில் என்னால் மேடை ஏற்றப்பட்ட ”செவிட்டு வாத்தியார்” நகைச்சுவை நாடகத்தை பகிரலாம் என்றிருக்கிறேன்.
முதலியேயே சொல்லிக் கொள்கிறேன் இந்நாடகமானது எந்த வித ஓத்திகையுமில்லாமல் மேடையேற்றப்பட்டதாகும். காரணம் ஒத்திகைக்கு ஒதுக்கப்பட்ட முதல் நாள் இரவு அவசர படப்பிடிப்பு என்று சன்சிகனும், மதுரனும் கூட்டிப் போனதன் விளவு தான் காரணம். அப்புறம் எப்படி சாத்தியப்பட்டது என்கிறீர்களா?

நடிக்க தெரிவு செய்யப்பட்ட ஒவ்வாருத்தருக்கும் ஒவ்வாரு நகைச்சுவையை கொடுத்து விட்டு அறிமுகம் முடிய அவர்களே தான் எனக்கு நினைவூட்டுவார்கள்.

என்னால் அந்தளவு நகைச்சுவையையும் ஒத்திகை எதுவும் இல்லாமல் நினைவில் வைத்திருந்து நடிக்க முடியாது என்று முதலே தெரியும். உன்னிப்பாக கவனியுங்கள் எப்படி அவர்கள் நினைவூட்டுகிறார்கள் என்பது தெரியும்.

எப்படி இருப்பினும் இணையத்தில் இருந்து உருவி எடுத்த நகைச்சுவைகளை வைத்து script கூட தயாரிக்கவில்லை என் கையில் இருக்கு காகிதம் தான் ஸ்கிரிபட் ஆகும்.
ஏதோ சிரிப்புக்கு நான் உத்தரவாதம் .

அத்துடன் இரண்டாவது வீடியோவாக சென்ற வருட நாடகத்தை பகிர்ந்திருக்கிறேன் அதற்கும் இதே பெயர் தான் ஆனால் நகைச்சுவை வேறு. அத்துடன் ஒலிச்சேர்க்கையில் சில குறைகள் காணப்படுகின்றன என்பதை முற்கூட்டியே அறியத்தருகிறேன்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா


2013 ல் இடம்பெற்ற செவிட்டு வாத்தியார் நாடகம்.

PM 7:08 - By ம.தி.சுதா 1

1 கருத்துகள்:

செவ்வாய், 7 அக்டோபர், 2014

ஆரண்ய காண்டம் படத்தில் நான் ரசித்தவை

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?


எம் தமிழ் சினிமா ரசிகர்களின் குணத்துக்கு விதிவிலக்காக அமையாமல் போன படங்களில் ஒன்று தான் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவான ”ஆரண்ய காண்டம்” திரைப்படமாகும்.

படத்தில் ஆபாச வசனங்கள் சற்று தூக்கலாக இருந்தாலும் ஜதார்த்தத்தில் இருந்து ஒரு முடி அளவு கூட விலத்தாமல் கதையோடு நகர்ந்து செல்வதே அதன் தனிச்சிறப்பாகும்.


திரை உருவாக்கம் பற்றி அறிய நினைக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் மிக முக்கியமானவற்றில் ஒன்றாகும். காரணம் மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்ட திரைக்கதைக்கு தெரிந்தெடுக்கப்பட்ட பாத்திரச் செதுக்கல்கல்கள் ஆகும். எந்த ஒரு பாத்திரத்தில் கூட ஜதார்த்த விலகலைக் காட்ட முடியாது.

அதிலும் குறிப்பாக மிக மிக தத்ரூபமாக செதுக்கப்பட்டிருந்த பாத்திரமாக குடிகார ஜமிந்தாரையே குறிப்பிட்டு ஆக வேண்டும். 7ஜி ரெயின் போ காலணியில் வந்து போன ரவிகிருஸ்ணாவை சரியாக அடையாளம் கண்டு பயன்படுத்தியிருப்பார்கள். அந்த சப்பை பாத்திரத்துக்காக வாழ்தலில் சரியாக வாழ்ந்து முடித்துச் சென்றிருக்கிறார் ரவி கிருஸ்ணா.
அதற்கப்பால் மிக முக்கியமாக பேசப்பட வேண்டியவர்கள் 
1. சம்பத் - சாதாரணமாகவே அவரது எந்த நடிப்பானலும் எனக்கு மிக மிகப் பிடிக்கும் அதிலும் கோவா படத்தை ரசித்ததே அவருக்காகத் தான்.
2. ஜாக்கி செராப் (வில்லன் பாத்திரம்) - எங்கே தேடிப்பிடித்தார்களோ தெரியவில்லை அப்படி ஒரு தத்ரூபமான தெரிவாகும். அவர் தொடர்பாக தேட முனைந்த பொது தான் தெரிந்தது அவர் 150 படங்களுக்கு மேலாக நடித்த ஒரு குஜராத்தியர் என்பது.
3. மாஸ்டர் வசந் - அத்தனை பெரிய நடிகர்களுக்கும் ஈடாக அவரது நடிப்பிருக்கும். தந்தையை காப்பாற்றியவுடன் சம்பத் கேட்ட கேள்விக்கு அநாயசமாக ஒரு பதில் சொல்லுவான் பாருங்கள் அந்த இடம் அவன் நடிப்புக்கு பெரிய சான்றாகும்.

அதற்கப்பால் நடிகை, ஜாக்கி செராப் ன் வலது கையாக வரும் நடிகர் என ஒவ்வொரு பாத்திரங்களும் கதையோடு இயைபாக்கப்பட்டு நகர்கிறது.


படத்தில் பேச வேண்டியவற்றில் ஒன்று வசனமாகும். ”எது தேவையோ அது தான் தர்மம்” என்று படம் ஆரம்பிக்கும் இடத்தில் பிள்ளையார் சுழி ஓடு ஆரம்பித்து அத்தனை கேவலமான பாத்திரங்களையும் அந்த ஒரு வசனத்தாலேயே நியாயப்படுத்தி கோபம் வராமல் எம்மையும் ஒத்திசைய வைப்பதில் இயக்குனர் பெரு வெற்றி கண்டிருக்கிறார்.


இக்கதையை நம்பி 5 கோடி ரூபாயை போட்ட எஸ்பிபி சரணை பாராட்டத் தான் வேண்டும். அதே இடத்தில் அவ்வளவு காசையும் கொட்டியவர் அப்படத்தை சந்தைப்படுத்திய விதத்துக்கு திட்டித் தீர்த்தே ஆக வேண்டும். அந்தக் கடனை அடைக்க தந்தையாரான எஸ்பி.பாலசுப்ரமணியம் தனது ஸ்ரூடியோவை விற்ற கதை எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை.


அத்துடன் பாடல்களே இல்லாத இப்படத்தில் யுவன் இசையால் ஒரு புது உலகுக்கு அழைத்துச் சென்றிருப்பார். காட்சிக்கு முன்னரே கதைக்களத்துக்கான உணர்வைக் கொடுத்து எம்மை தயார்ப்படுத்துவதில் இசை முழு வெற்றி கண்டிருக்கிறது.

இத்திரைப்படமானது சிறந்த படத் தொகுப்பிற்காக தேசிய விருது பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

52 காட்சிகள் நீக்கப்பட்டே வெளியிடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த இப்படத்தில் விஜய் தொலைக்காட்சி தானும் தன் பாட்டுக்கு வெட்டி எறிந்திருந்தாலும் அதன் யூரியுப் பக்கத்தில் தணிக்கைக்கு உட்படுத்தாத படத்தை பகிர்ந்துள்ளது இப்பதிவின் கீழ் தணிக்கை செய்யப்படத அப்படத்தை இணைத்துள்ளேன்.


நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
PM 6:02 - By ம.தி.சுதா 2

2 கருத்துகள்:

வியாழன், 2 அக்டோபர், 2014

ஈழத்தவர் புலம்பெயர் வாழ்வியல் காட்டும் ”இருளின் நிழல்”

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?


எம் சினிமா வளரவில்லை வளரவில்லை என்று கூறிக் கொண்டு குண்டுச் சட்டிக்குள் பிட்டத்தை ஓட்டி விட்டு எழும்பத் தெரியாமல் இருக்கும் பலருக்கு அடிக்கடி எம் சில சினிமாக்களை வலிந்து திணித்துக் காட்ட வேண்டியிருக்கிறது.

2013 ல் உருவாக்கப்பட்ட கடந்த வாரம் பிரான்சில் இருந்து வெளியிடப்பட்டிருந்த பிரசண்ணாவின் ”இருளின் நிழல்” குறும்படத்தை பற்றி கட்டாயம் பேசியே ஆக வேண்டும். முதலில் அவரது படத் தலைப்புத் தெரிவுக்கு என் முதல் வாழ்த்துக்கள்.
காரணம் எப்போதும் படத் தலைப்பு என்பது படத்தின் பிரதிபலிப்பாகவும் ஒரு இயக்குனரின் அடையாளமாகவும் காணப்படும். ஆழமான அந்த அர்த்தத்தை பொதிந்திருந்த தலைப்பே படத்துக்கான ஒரு ஆர்வத்தை அள்ளி விதைத்திருந்தது.

சுய பூமியில் வாழ்வியலைத் தொலைத்து விட்டு புலத்தில் போயிருந்து வாழக்கைப் போராட்டம் நடத்தும் பல இளைஞர்களின் பிரதிபலிப்பாக படம் அமைந்திருந்தது. அந்த இளைஞனாக வந்த ரஜிந் இன் பாத்திரம் இப்பவும் மனசில் அப்படியே ஒட்டி நிற்கிறது.



ஒவ்வொரு பாத்திரத் தெரிவுகளிலும் சரியாகக் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. படத்தை தூக்கி வைத்திருக்கும் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களும் மிக மிகச் சரியான தெரிவாக அமைந்திருந்தது. அதிலும் குணபாலன் அண்ணாவின் நடிப்பு பற்றி சொல்லவே தேவையில்லை படம் பார்த்தால் நீங்களே சொல்லுவீர்கள்.
வசனங்கள் சில இடத்தில் பேச்சுத் தமிழில் இருந்து விலத்தியிருந்தாலும் மிக அழுத்தமான வசனங்களாகும்.
“ மக்களுக்காக திறந்திருந்த கடைகள் மட்டும் கடைப்பிடிச்சவையே”
”விசா கிடைச்சோண்ணை என்னைப்பாரு என்ரை குண்டியை பாரு எண்டு திரிவியள்”

இயக்குனர் திரைக்கதை அமைத்த விதமும் சகலருக்கும் சொல்ல வந்த விடயத்தை தெளிவாகக் காட்டியிருக்கிறது. காரணம் எந்த ஒரு இடத்தில் கூட குணபாலன் அண்ணாவின் மறைத் தோற்றம் அவர் பாவனையில் (காட்சியில் இருந்தல்ல) இருந்து வெளிப்படுத்தப்படவில்லை. அதனால் பிரசண்ணாவே தோன்றும் இறுதிக் காட்சியில் அந்த முடிச்சை முற்று முழுதாக பார்வையாளருக்கு அவிட்டுக் காட்டுகிறார்.
இக்குறும்படமானது 

london internaional tamil film festivel 2014 ல் 3 ம் இடத்தையும் சிறந்த writter க்கான விருதையும்

navalar short film festivel 2013 ல் 3 ம் இடத்தையும்

norway tamil film festivel ல் official selection ஆகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இக்குறும்படத்தை படைத்த அவதாரம் மற்றும் அதற்காக உழைத்த குழு அனைவருக்கும் நல்ல ஈழப்படம் ஒன்றைத் தந்ததற்காக என்னுடைய நன்றிகள்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா


AM 10:51 - By ம.தி.சுதா 3

3 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top