வியாழன், 2 அக்டோபர், 2014

ஈழத்தவர் புலம்பெயர் வாழ்வியல் காட்டும் ”இருளின் நிழல்”

AM 10:51 - By ம.தி.சுதா 3

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?


எம் சினிமா வளரவில்லை வளரவில்லை என்று கூறிக் கொண்டு குண்டுச் சட்டிக்குள் பிட்டத்தை ஓட்டி விட்டு எழும்பத் தெரியாமல் இருக்கும் பலருக்கு அடிக்கடி எம் சில சினிமாக்களை வலிந்து திணித்துக் காட்ட வேண்டியிருக்கிறது.

2013 ல் உருவாக்கப்பட்ட கடந்த வாரம் பிரான்சில் இருந்து வெளியிடப்பட்டிருந்த பிரசண்ணாவின் ”இருளின் நிழல்” குறும்படத்தை பற்றி கட்டாயம் பேசியே ஆக வேண்டும். முதலில் அவரது படத் தலைப்புத் தெரிவுக்கு என் முதல் வாழ்த்துக்கள்.
காரணம் எப்போதும் படத் தலைப்பு என்பது படத்தின் பிரதிபலிப்பாகவும் ஒரு இயக்குனரின் அடையாளமாகவும் காணப்படும். ஆழமான அந்த அர்த்தத்தை பொதிந்திருந்த தலைப்பே படத்துக்கான ஒரு ஆர்வத்தை அள்ளி விதைத்திருந்தது.

சுய பூமியில் வாழ்வியலைத் தொலைத்து விட்டு புலத்தில் போயிருந்து வாழக்கைப் போராட்டம் நடத்தும் பல இளைஞர்களின் பிரதிபலிப்பாக படம் அமைந்திருந்தது. அந்த இளைஞனாக வந்த ரஜிந் இன் பாத்திரம் இப்பவும் மனசில் அப்படியே ஒட்டி நிற்கிறது.



ஒவ்வொரு பாத்திரத் தெரிவுகளிலும் சரியாகக் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. படத்தை தூக்கி வைத்திருக்கும் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களும் மிக மிகச் சரியான தெரிவாக அமைந்திருந்தது. அதிலும் குணபாலன் அண்ணாவின் நடிப்பு பற்றி சொல்லவே தேவையில்லை படம் பார்த்தால் நீங்களே சொல்லுவீர்கள்.
வசனங்கள் சில இடத்தில் பேச்சுத் தமிழில் இருந்து விலத்தியிருந்தாலும் மிக அழுத்தமான வசனங்களாகும்.
“ மக்களுக்காக திறந்திருந்த கடைகள் மட்டும் கடைப்பிடிச்சவையே”
”விசா கிடைச்சோண்ணை என்னைப்பாரு என்ரை குண்டியை பாரு எண்டு திரிவியள்”

இயக்குனர் திரைக்கதை அமைத்த விதமும் சகலருக்கும் சொல்ல வந்த விடயத்தை தெளிவாகக் காட்டியிருக்கிறது. காரணம் எந்த ஒரு இடத்தில் கூட குணபாலன் அண்ணாவின் மறைத் தோற்றம் அவர் பாவனையில் (காட்சியில் இருந்தல்ல) இருந்து வெளிப்படுத்தப்படவில்லை. அதனால் பிரசண்ணாவே தோன்றும் இறுதிக் காட்சியில் அந்த முடிச்சை முற்று முழுதாக பார்வையாளருக்கு அவிட்டுக் காட்டுகிறார்.
இக்குறும்படமானது 

london internaional tamil film festivel 2014 ல் 3 ம் இடத்தையும் சிறந்த writter க்கான விருதையும்

navalar short film festivel 2013 ல் 3 ம் இடத்தையும்

norway tamil film festivel ல் official selection ஆகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இக்குறும்படத்தை படைத்த அவதாரம் மற்றும் அதற்காக உழைத்த குழு அனைவருக்கும் நல்ல ஈழப்படம் ஒன்றைத் தந்ததற்காக என்னுடைய நன்றிகள்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா


About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

3 கருத்துகள்:

தனிமரம் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி இனித்தான் பார்க்க வேண்டும்.

Yarlpavanan சொன்னது…

சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்

நல்ல குறும்படப் பகிர்வு சகோதரா...
வாழ்த்துக்கள்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top