வெள்ளி, 10 அக்டோபர், 2014

ஓட ஓட கலைத்த என்னுடைய நவராத்திரி நகைச்சுவை நாடகம் - 2014

PM 7:08 - By ம.தி.சுதா 1

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
இன்றைய பதிவில் கடந்த நவராத்திரி விழா அன்று எம் ஊரில் என்னால் மேடை ஏற்றப்பட்ட ”செவிட்டு வாத்தியார்” நகைச்சுவை நாடகத்தை பகிரலாம் என்றிருக்கிறேன்.
முதலியேயே சொல்லிக் கொள்கிறேன் இந்நாடகமானது எந்த வித ஓத்திகையுமில்லாமல் மேடையேற்றப்பட்டதாகும். காரணம் ஒத்திகைக்கு ஒதுக்கப்பட்ட முதல் நாள் இரவு அவசர படப்பிடிப்பு என்று சன்சிகனும், மதுரனும் கூட்டிப் போனதன் விளவு தான் காரணம். அப்புறம் எப்படி சாத்தியப்பட்டது என்கிறீர்களா?

நடிக்க தெரிவு செய்யப்பட்ட ஒவ்வாருத்தருக்கும் ஒவ்வாரு நகைச்சுவையை கொடுத்து விட்டு அறிமுகம் முடிய அவர்களே தான் எனக்கு நினைவூட்டுவார்கள்.

என்னால் அந்தளவு நகைச்சுவையையும் ஒத்திகை எதுவும் இல்லாமல் நினைவில் வைத்திருந்து நடிக்க முடியாது என்று முதலே தெரியும். உன்னிப்பாக கவனியுங்கள் எப்படி அவர்கள் நினைவூட்டுகிறார்கள் என்பது தெரியும்.

எப்படி இருப்பினும் இணையத்தில் இருந்து உருவி எடுத்த நகைச்சுவைகளை வைத்து script கூட தயாரிக்கவில்லை என் கையில் இருக்கு காகிதம் தான் ஸ்கிரிபட் ஆகும்.
ஏதோ சிரிப்புக்கு நான் உத்தரவாதம் .

அத்துடன் இரண்டாவது வீடியோவாக சென்ற வருட நாடகத்தை பகிர்ந்திருக்கிறேன் அதற்கும் இதே பெயர் தான் ஆனால் நகைச்சுவை வேறு. அத்துடன் ஒலிச்சேர்க்கையில் சில குறைகள் காணப்படுகின்றன என்பதை முற்கூட்டியே அறியத்தருகிறேன்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா


2013 ல் இடம்பெற்ற செவிட்டு வாத்தியார் நாடகம்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

1 கருத்துகள்:

அருமை சகோதரா... வாழ்த்துக்கள்...
ஒலிபெருக்கியின் எக்கோ உங்கள் வாய்ஸைக் கேட்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருக்கிறது...

அருமை....

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top