செவ்வாய், 7 அக்டோபர், 2014

ஆரண்ய காண்டம் படத்தில் நான் ரசித்தவை

PM 6:02 - By ம.தி.சுதா 2

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?


எம் தமிழ் சினிமா ரசிகர்களின் குணத்துக்கு விதிவிலக்காக அமையாமல் போன படங்களில் ஒன்று தான் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவான ”ஆரண்ய காண்டம்” திரைப்படமாகும்.

படத்தில் ஆபாச வசனங்கள் சற்று தூக்கலாக இருந்தாலும் ஜதார்த்தத்தில் இருந்து ஒரு முடி அளவு கூட விலத்தாமல் கதையோடு நகர்ந்து செல்வதே அதன் தனிச்சிறப்பாகும்.


திரை உருவாக்கம் பற்றி அறிய நினைக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் மிக முக்கியமானவற்றில் ஒன்றாகும். காரணம் மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்ட திரைக்கதைக்கு தெரிந்தெடுக்கப்பட்ட பாத்திரச் செதுக்கல்கல்கள் ஆகும். எந்த ஒரு பாத்திரத்தில் கூட ஜதார்த்த விலகலைக் காட்ட முடியாது.

அதிலும் குறிப்பாக மிக மிக தத்ரூபமாக செதுக்கப்பட்டிருந்த பாத்திரமாக குடிகார ஜமிந்தாரையே குறிப்பிட்டு ஆக வேண்டும். 7ஜி ரெயின் போ காலணியில் வந்து போன ரவிகிருஸ்ணாவை சரியாக அடையாளம் கண்டு பயன்படுத்தியிருப்பார்கள். அந்த சப்பை பாத்திரத்துக்காக வாழ்தலில் சரியாக வாழ்ந்து முடித்துச் சென்றிருக்கிறார் ரவி கிருஸ்ணா.
அதற்கப்பால் மிக முக்கியமாக பேசப்பட வேண்டியவர்கள் 
1. சம்பத் - சாதாரணமாகவே அவரது எந்த நடிப்பானலும் எனக்கு மிக மிகப் பிடிக்கும் அதிலும் கோவா படத்தை ரசித்ததே அவருக்காகத் தான்.
2. ஜாக்கி செராப் (வில்லன் பாத்திரம்) - எங்கே தேடிப்பிடித்தார்களோ தெரியவில்லை அப்படி ஒரு தத்ரூபமான தெரிவாகும். அவர் தொடர்பாக தேட முனைந்த பொது தான் தெரிந்தது அவர் 150 படங்களுக்கு மேலாக நடித்த ஒரு குஜராத்தியர் என்பது.
3. மாஸ்டர் வசந் - அத்தனை பெரிய நடிகர்களுக்கும் ஈடாக அவரது நடிப்பிருக்கும். தந்தையை காப்பாற்றியவுடன் சம்பத் கேட்ட கேள்விக்கு அநாயசமாக ஒரு பதில் சொல்லுவான் பாருங்கள் அந்த இடம் அவன் நடிப்புக்கு பெரிய சான்றாகும்.

அதற்கப்பால் நடிகை, ஜாக்கி செராப் ன் வலது கையாக வரும் நடிகர் என ஒவ்வொரு பாத்திரங்களும் கதையோடு இயைபாக்கப்பட்டு நகர்கிறது.


படத்தில் பேச வேண்டியவற்றில் ஒன்று வசனமாகும். ”எது தேவையோ அது தான் தர்மம்” என்று படம் ஆரம்பிக்கும் இடத்தில் பிள்ளையார் சுழி ஓடு ஆரம்பித்து அத்தனை கேவலமான பாத்திரங்களையும் அந்த ஒரு வசனத்தாலேயே நியாயப்படுத்தி கோபம் வராமல் எம்மையும் ஒத்திசைய வைப்பதில் இயக்குனர் பெரு வெற்றி கண்டிருக்கிறார்.


இக்கதையை நம்பி 5 கோடி ரூபாயை போட்ட எஸ்பிபி சரணை பாராட்டத் தான் வேண்டும். அதே இடத்தில் அவ்வளவு காசையும் கொட்டியவர் அப்படத்தை சந்தைப்படுத்திய விதத்துக்கு திட்டித் தீர்த்தே ஆக வேண்டும். அந்தக் கடனை அடைக்க தந்தையாரான எஸ்பி.பாலசுப்ரமணியம் தனது ஸ்ரூடியோவை விற்ற கதை எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை.


அத்துடன் பாடல்களே இல்லாத இப்படத்தில் யுவன் இசையால் ஒரு புது உலகுக்கு அழைத்துச் சென்றிருப்பார். காட்சிக்கு முன்னரே கதைக்களத்துக்கான உணர்வைக் கொடுத்து எம்மை தயார்ப்படுத்துவதில் இசை முழு வெற்றி கண்டிருக்கிறது.

இத்திரைப்படமானது சிறந்த படத் தொகுப்பிற்காக தேசிய விருது பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

52 காட்சிகள் நீக்கப்பட்டே வெளியிடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த இப்படத்தில் விஜய் தொலைக்காட்சி தானும் தன் பாட்டுக்கு வெட்டி எறிந்திருந்தாலும் அதன் யூரியுப் பக்கத்தில் தணிக்கைக்கு உட்படுத்தாத படத்தை பகிர்ந்துள்ளது இப்பதிவின் கீழ் தணிக்கை செய்யப்படத அப்படத்தை இணைத்துள்ளேன்.


நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

2 கருத்துகள்:

நான் இரண்டு மூன்று முறை ரசித்துப் பார்த்தபடம்... அருமையான படம்...
பகிர்வுக்கு நன்றி....

Unknown சொன்னது…

http://m.youtube.com/watch?v=d2KdB9sqhLk

Idha paarunga... Oru beep sound kooda varadhu... Suthamaana uncensored print

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top