திங்கள், 3 ஜூன், 2013

சிங்கம் 2 பாடல்கள்- ஒரு தனிப்பட்ட மனிதனின் ரசனைப் பார்வை

AM 10:53 - By ம.தி.சுதா 2

முற்குறிப்பு- இது ஒரு தனிப்பட்ட மனிதனின் ரசனைக்குட்பட்ட பார்வையே...

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

ஒரு திரைப்படத்தின் (இந்திய) முக்கிய அங்கமாகக் கருதப்படுபவற்றில் பாடல்கள் முக்கிய இடம் பிடிக்கிறது. அந்த வகையில் மாற்றானில் அடிவாங்கிய சூர்யா மாற்றம் ஒன்றுக்காக காத்திருக்கும் இவ்வேளையில் சிங்கம் 2 க்கான பாடல்கள் வெளியாகியிருக்கிறது.
ஆர்வத்தோடு காத்திருந்து கேட்டதற்கான திருப்தியை ஒரு பாடல் கூட கொடுக்கவில்லை. அத்தனை பாடலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பின்னணி அடி உதையுடனேயே ஒலிக்கிறது.

சென்ற முறை அளவுக்கதிகமான வன்முறைக் காட்சிகள் இருந்தாலும் கதையின் கனத்தை அனுஷ்காவின் காதலும் தூக்கி நிறுத்தி வைத்திருந்தது. அதன் காரணமாகவே பல பெண்களும் துணிந்து அப்படத்தை வரவேற்றுக் கொண்டார்கள். அதுமட்டுமல்லாமல் 3 காதல் ததும்பும் பாடலுக்கும் இடமளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை அந்தளவு காதல் இருக்குமா தெரியவில்லை (மனைவியிடமும் காதல் காட்டலாம் தானே)
காதல் வந்தாலே – (விவேகா)
என் இதயம் – (நா முத்துகுமார்)
Stole My Heart – (விவேகா)
மற்றைய இரு பாடல்களில் ஒன்று தீம் பாடலாக போக மற்றைய விவேகாவின் ஒரு பாடல் ஹீரோயிசப்படலாகிப் போனது.

ஆனால் இம்முறை புரியவில்லை என்ற சுவேதா மேனனின் பாடல் மட்டுமே காதல் ததும்ப ஒலிக்கிறது. அத்துடன் பைலா இசையை நினைவூட்டும் வகையில் கண்ணுக்குள்ளே என்ற பாடல் ஜாவிட் அலி மற்றும் பிரியா ஹிமேஸ் குரலில் ஒலிக்கிறது நிச்சயம் இருபாடலும் நாயகி கர்ப்பாமாக உள்ள நேரத்தில் கொடுப்பாரென்றால் கருக்கலைந்து விடும் காரணம் அந்தளவு துள்ளல் இசை.

சென்ற முறை காதல் வந்தாலே பாடல் மூலம் கவர்ந்த பாபா சேகலை இம்முறை ஒரு ஹீரோயிச பாடலுக்கு பயன்படுத்தி தேவி சிறி பிரசாத்தும் சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறார்.
காட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கும் தில்லான ஒரு சிங்கம் என்ற பாடலை கர்ஜனையோடு சங்கர்மகாதேவன் படித்திருக்க அந்தப்பக்கமே தன் குரலை தெளிக்காமல் ஒளிந்திருக்கிறார் நம்ம DSP.

நம்ம DSP (தேவிசிறி பிரசாத்) இடம் ஒரே ஒரு கேள்வி கேட்க ஆசை..
பல அருமையான நல்ல பாடல்களைத் தந்த நீங்கள் உங்கள் இசையை 200 அல்லது 300 வருடம் வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக உபயோகிக்கப் போகிறீர்களா? காரணம் உலகமெல்லாம் பரந்திருக்கும் இசைக்கு பஞ்சம் வந்துவிடும் என நினைத்தோ தெரியவில்லை உங்கள் இசையை கொஞ்சம் கொஞ்சமாகவே பயன்படுத்துகிறீர்கள்.
ஏற்கனவே மாயாவி, மழை போன்ற படப்பாடலுக்குள் கஞ்சத்தனம் காட்டி இசையை கோர்த்து விட்டதை மறக்க முடியவில்லை. அதே போலவே இம்முறையும் பல இடங்களில் இசைச் சிக்கனத்தைக் கடைப்பிடித்திருக்கிறீர்கள். 
எதுவோ புரியவில்லை பாடல் கூட அந்தளவுக்கு மோசமில்லை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.. மிகுதி காட்சிகளே தீர்மானிக்கும்..

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

2 கருத்துகள்:

இனி மேல் தான் கேட்டுப் பார்க்க வேண்டும்...

நன்றி...

Unknown சொன்னது…

வணக்கம்,ம.தி.சுதா!நலமா?///பாடல்கள் கேட்கவில்லை,பார்க்கலாம்!விமர்சனத்துக்கு நன்றி!!!

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top