Featured Articles
All Stories
பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

நா.முத்துக்குமாரின் பாடல் உருவான கதை - 2

வணக்கம் உறவுகளே?


சில பதிவுகளை பதிய எண்ணிப் பதியாமல் போனாலும் பதிய எண்ணும் காலம் அவர்கள் கொடுத்த அழுத்தமான காலமாகவே இருக்கிறது.

இப்பாடல் உருவான கதை என எப்போதோ எழுத என நினைத்து விட்டு எழுத தவற விட்டிருந்த என்னை அக்கவிஞரின் மரணமே எழுத நினைவூட்டியுள்ளது.

தமிழ் கவிஞன் என்றால் எம் மனக்கண் முன் நிற்கும் முன்னணி கவிஞரில் ஒருவராகவும் முத்து அண்ணா என உரிமையோடு எல்லோராலும் அழைக்கக் கூடியதுமாக இருந்த நா. முத்துக்குமார் அண்ணன் தன் தமிழுக்கு உயிர் கொடுத்து விட்டு தன்னுயிரை முடித்துக் கொண்டு விட்டார்.

அவரது அத்தனை பாடல்களும் மனதுக்குள் நிற்பவை தான் அதில் அங்காடித் தெரு திரைப்படத்தில் அவரால் எழுதப்பட்ட அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடலை எப்படி உருவாக்கினார் என நான் அறிந்ததை சுருக்கமாகவே தருகிறேன்.

ஒரு ஆணின் மேல் பெண்ணுக்கோ பெண்ணின் மேல் ஆணுக்கு காதல் வயப்பட்டால் எதிர்ப் பாலினத்தவர்களது நல்லது கெட்டதை ஒரு தராசில் போட்டு நிறை பார்த்துக் கொள்வார்கள். அதில் நல்ல பக்கம் தாழ்ந்திருந்தாலே காதல் என்பது உணர்வுபூர்வமாய் பரிணமிக்கும்.
இத்திரைப்படத்தில் நாயகனானவன் நாயகியின் அழகை ஒரு தராசில் போடுகிறான் அதை அழகாக வரியாக்கி இசைக்குள் நுழைத்து அத்தனை பேர் மனதையும் வருட வைத்ததில் பெரு வெற்றி கண்டவர் அமரர் நா. முத்துக்குமார் அவர்களாவார்.

சரி வரியை எப்படிக் கோர்த்தார் என்றால் அது கற்பனை வரியல்ல என அவரே ஒரு செவ்வியில் கூறியிருந்தார் எப்படியென்றால் தனது திருமண அழைப்பிதழில் தன் வாழக்கைத் துணை பற்றி வரைந்து வைத்திருந்த வரிகளைத் தான் அங்கடித் தெருவில் இசையால் உயிர் கொடுக்க வைத்து எம்மையும் உணர்வூட்டியிருக்கிறார் பாடலாசிரியர்.

அவ் வரிகள்.......

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் எப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் பெரிதாய் எதுவும் படித்ததில்லை
அவளை படித்தேன். முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிப்பதில்லை
இருந்தும் கவனிக்க மறப்பதில்லை

அவள் அப்படி…

அவள் நாய் குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவல் இருந்தால் தடுப்பதில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்குவதில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்த காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கை விரல் மோதிரம் தங்கமில்லை
அவள் கைபிடித்திடும் ஆசை தூங்கவில்லை

அவள் சொந்தமன்றி வேறு எதுவும் இல்லை
வேறு எதுவும் இல்லை

அவள் அப்படி…

அவள் பட்டு புடவை என்றும் அணிந்ததில்லை
அவர் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை
அந்த அக்கறை போல வேறு இல்லை

அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமில்லை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் அன்றி வேறு எதுவும் இல்லை
சொந்தம் அன்றி எதுவும் இல்லை
எனக்கு எதுவும் இல்லை

அவள் அப்படி…

எமக்கு தமிழால் உணர்வளித்த அச் செம்மல் எம் மனதில் உயிராய் என்று வாழ அவர் வரிகளே போதும்

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
8:34 PM - By ம.தி.சுதா 3

வியாழன், 30 ஜூன், 2016

krishan ன் copy paste பாடலை எதிர் கொண்ட விமர்சன உலகம்

வணக்கம் உறவுகளே நலம் எப்படி?

முற்குறிப்பு - இப்போதெல்லாம் எழுதுவதென்பது மறந்து போன விடயமாகிவிட்டது. இப்பாடலுக்கு எழுத வேண்டும் என ஆரம்பித்த பதிவு நீண்ட நாளாக கிடப்பிலேயே கைவிடப்பட்டு விட்டது.


சரி பதிவுக்கு வருகிறேன்



இணைய உலகம் என்பது எதையும் எவராலும் வெளிப்படையாக தம் மனதில் பட்டதை பதிய வைக்கும் ஒரு திறந்த ஊடகமாக அமைந்து நல்லதொரு திறந்த வெளிக்களத்தைக் கொடுத்துள்ளது.
இதற்குள் தம்மை அடையாளப்படுத்த பலர் எடுத்துக் கொள்ளும் ஆயுதம் தான் மாற்றுக் கருத்து அதற்குள் அடிக்கடி சிக்குப்படுவது படைப்புக்கள் தான்.
ஆனால் ஒருவன் தனது மனதில் படும் கருத்தை வெளிப்படுத்துகிறான் என்பது தவறான ஒரு விடயமல்ல ஆனால் அவன் ஏன் அதை முன் வைக்கிறான் என்பதையும் கவனத்தில் எடுத்தால் அதற்குள்ளும் பல காரணங்கள் இருக்கும்.
ஒரு படைப்பை திருடப்பட்டதாகக் கூறி கருத்தை வைத்தால் தாம் பல விடயங்கள் தெரிந்த நபர்களாகக் காட்டப்படுவோம் என்பது தான் பல கருத்தாளர்களது எண்ணமாக இருந்தாலும் அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கு சரியான ஆதாரம் வைக்க முடிவதில்லை.

அதிலும் இப்படியான கருத்தாளர்களை பார்க்கும் போது எப்படி இத்தோற்றப்பாட்டை உருவாக்குவார்கள் என்றால் X என்ற பாடலைப் பார்க்கும் போது Y என்ற பாடலின் அதே உணர்வைக் கொடுத்தது அதனால் இந்தப் பாடல் அங்கிருந்து தான் திருடப்பட்டது.

சாதாரணமாக ஒரு குற்றச்சாட்டை வைத்து விட்டுக் கடந்து விடுவார்கள். உங்களுக்கு ஒரு படைப்பு இன்னொரு படைப்பின் உணர்வைக் கொடுத்தால் அது அங்கிருந்து திருடப்பட்டது என்ற முடிவுக்கு வர முடிகிறது என்றால் உங்களது ரசனையாற்றலில் தான் சந்தேகம் உருவாக்கப்படுகிறதே தவிர படைப்பில் அல்ல... 

அப்படி ஒரு எண்ணப்பட்டுக்குள் அண்மையில் பல படைப்புக்கள் சிக்கிக் கொண்டாலும் உதாரணத்துக்கு கிரிசன் மகேசனின் OPK பாடலை எடுத்துக் கொள்வோம்.

அந்தப் பாடலின் காட்சி கணிதன் படத்தின் ”யப்பா சப்பா” பாடலின் தழுவல் என்று திரைத்துறையில் இருக்கும் சிலரே குற்றம் முன் வைத்தார்கள். இரு பாடலையும் பாருங்கள் தெரியும்.
இந்த இடத்தில் பாவப்பட்டது OPK பாடலின் நடன அமைப்பாளர் தான். காரணம் அந்த குற்றச்சாட்டுக்கு சற்று ஒத்திசைவாகப் போனது படத் தொகுப்புத் தான். எடிட்டர் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை வெட்டி ஒட்டலுக்குள் முழுதாக புகுத்தியிருப்பார் . ஒரு காட்சியையோ, நடன அசைவையோ உங்களால் பூரணமாகப் பார்த்திருக்க முடியாது. இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர் இயக்குனரே காரணம் அவர் தான் திட்டமிட்டிருப்பார்.
இந்த ஒரு வேகமான கத்தரிப்புக் காட்சிகளை வைத்து கிடைத்த உணர்வை வைத்து எம் விமர்சகர்கள் அம் முடிவுக்கு வந்திருந்தார்கள்.


ஆடுத்ததாக பாடலின் ஒலித் திருட்டு. இதில் உள்ள நகைச்சுவை என்னவென்றால் பாடலின் இசை போட்ட இராஜ் எத்தனையோ வருடத்துக்கு முதல் சிங்களத்தில் போட்ட பாடலைத் தான் தமிழுக்கு மாற்றிக் கொடுத்திருந்தார். எமது தேடல் விமர்சகர்கள் ஏன் அதை ஒத்த பாடலை இந்திய சினிமாவில் பயன்படுத்தி விட்டார்கள் என விமர்சிக்கவில்லை என்பதும் ஒரு பெரிய கேள்வி தான்.

ஆக மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இப்போது இங்கு முன் வைக்கப்படும் விமர்சனங்கள் என்பது மாற்றுக் கருத்து மூலம் தம்மைத் தனித்துவப்படுத்தி வெளிப்படுத்தலுக்காகவேயன்றி வேறெதுவுமல்ல..


நன்றிச் செதுக்கலுடன்

அன்புச் சகோதரன்
மதிசுதா

பிற்குறிப்பு - இங்கே கிரிசன் மகேசனின் பாடலை இணைத்துள்ளேன் பாடல் உருவாக்கத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


king South Krishan feat Gana Bala
Lyrics - Satheeskanth Rap Lyrics - KingSouth Krishan
Music - IRAJ 
Mixed by - Ranga Dassanayake at Hit Factory
Mastered by - Andy USA 
Visual concept: Varun Thushyanthan & Kathiresan Karthik 
Directed by: Kathiresan Karthik
Asst. Directors: Devaprasath Muthusamy ​Thanush Chelvanathan ​ Prashanth.K
Choreography - Sankaralingam Krishnakanthan (Wave Dance Studio)
Asst.Choregrapher: J.Muhunthan
Cinematography - Chinthakka Soma Keerthi
Final Editing, VFX and Color grading - Vino Dhomi
Edited at - M3 productions (Mathavan Maheswaran) Colombo 
Rushes edit - Surenth
Tittle designing - Surenth and Aathan (Jaffna)
Make-up Artist: D.M.D.Dissanayaka
Production Designer: Kathiresan Karthik and Thanush
Production Manager: Krishantha
Photography - Sai Photography (Jaffna)

Casting​​: Jerad Noel ​​ :Mithunika Fernando

Main Dancer Female: Noyal Christina
(Wave Dance Studio) S.Vithya Chagar
Dancers: (Wave Dance Studio) S.Elamaran P.Vivek J.Sasi A.Karikalan K.Rapinsan S.Anushanth (CMB Dancers) N.Naresh Jegan Pratheep Jerad Evan Babuka Prashanth

Female Dancer: Nithya Selvaraja
Recorded at - Paramount360 Colombo / Dharan studios Chennai / Iraj productions Pvt Ltd 



9:29 AM - By ம.தி.சுதா 0

வியாழன், 13 ஜூன், 2013

மலையகத்தில் இருந்து வெளிவந்துள்ள மனதை வருடும் பாடல்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
அவ்வப்போது உருவாகி வரும் எம்மவர் பாடல்களில் சிலது அப்படியே எம்மனதில் நிலைத்து விடுகிறது.
அந்த வகையில் நேற்று ஒரு சகோதரர் மூலம் எனக்கு கிடைத்த இப்பாடலானது தொண்டைக் குழியில் தங்கிஇடையிடையே வாய்வழியே எட்டிப் பார்க்கத் தவறவில்லை.
அப்பாடலுக்கான இசையை துஸ்யந்தன் செல்வராசா என்ற மலையகத்தைச் சேர்ந்தவர் இசையமைத்திருக்கிறார்.
ரஸ்லான் பாடலை பாடியிருக்க,
வயலின் சுறங்க ராஜபக்ச,
வீணை சரவண சுந்தரி முருகன் (கொழும்பு விஞ்ஞான பீட மாணவி)
பியனோ வி.செந்தூரன்
போன்றவரின் கூட்டணியுடன் கிட்டாரை துஸ்யந்தனே மீட்டியிருக்கிறார்.
இவர் நுவரெலியாவைச் சேர்ந்தவர் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீட மாணவனாக இருக்கிறார்.
.இதில் ரஸ்லான் சக்தி சுப்பர் ஸ்டார்களில் ஒருவராவார்.

மிகவும் நேர்த்தியான இசைக் கோப்புடன் உருவாகியுள்ள இப்பாடலானது மலையக மண்ணின் ஒரு தடமாக இருக்கும் என்பது என் நம்பிக்கையாகும்.

இவர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்காக இசையமைத்த தமிழ் வாழ்த்துப்பாடல் கீழே இணைத்துள்ளேன்.. அப்படியே லயிக்க வைக்கும் ஸ்வரங்கள் இவர் விரல்களுக்கும் ஒளிந்திருப்பதை உணர அதுவும் ஒரு நல்ல உதாரணமாகும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
10:37 PM - By ம.தி.சுதா 3

திங்கள், 3 ஜூன், 2013

சிங்கம் 2 பாடல்கள்- ஒரு தனிப்பட்ட மனிதனின் ரசனைப் பார்வை

முற்குறிப்பு- இது ஒரு தனிப்பட்ட மனிதனின் ரசனைக்குட்பட்ட பார்வையே...

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

ஒரு திரைப்படத்தின் (இந்திய) முக்கிய அங்கமாகக் கருதப்படுபவற்றில் பாடல்கள் முக்கிய இடம் பிடிக்கிறது. அந்த வகையில் மாற்றானில் அடிவாங்கிய சூர்யா மாற்றம் ஒன்றுக்காக காத்திருக்கும் இவ்வேளையில் சிங்கம் 2 க்கான பாடல்கள் வெளியாகியிருக்கிறது.
ஆர்வத்தோடு காத்திருந்து கேட்டதற்கான திருப்தியை ஒரு பாடல் கூட கொடுக்கவில்லை. அத்தனை பாடலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பின்னணி அடி உதையுடனேயே ஒலிக்கிறது.

சென்ற முறை அளவுக்கதிகமான வன்முறைக் காட்சிகள் இருந்தாலும் கதையின் கனத்தை அனுஷ்காவின் காதலும் தூக்கி நிறுத்தி வைத்திருந்தது. அதன் காரணமாகவே பல பெண்களும் துணிந்து அப்படத்தை வரவேற்றுக் கொண்டார்கள். அதுமட்டுமல்லாமல் 3 காதல் ததும்பும் பாடலுக்கும் இடமளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை அந்தளவு காதல் இருக்குமா தெரியவில்லை (மனைவியிடமும் காதல் காட்டலாம் தானே)
காதல் வந்தாலே – (விவேகா)
என் இதயம் – (நா முத்துகுமார்)
Stole My Heart – (விவேகா)
மற்றைய இரு பாடல்களில் ஒன்று தீம் பாடலாக போக மற்றைய விவேகாவின் ஒரு பாடல் ஹீரோயிசப்படலாகிப் போனது.

ஆனால் இம்முறை புரியவில்லை என்ற சுவேதா மேனனின் பாடல் மட்டுமே காதல் ததும்ப ஒலிக்கிறது. அத்துடன் பைலா இசையை நினைவூட்டும் வகையில் கண்ணுக்குள்ளே என்ற பாடல் ஜாவிட் அலி மற்றும் பிரியா ஹிமேஸ் குரலில் ஒலிக்கிறது நிச்சயம் இருபாடலும் நாயகி கர்ப்பாமாக உள்ள நேரத்தில் கொடுப்பாரென்றால் கருக்கலைந்து விடும் காரணம் அந்தளவு துள்ளல் இசை.

சென்ற முறை காதல் வந்தாலே பாடல் மூலம் கவர்ந்த பாபா சேகலை இம்முறை ஒரு ஹீரோயிச பாடலுக்கு பயன்படுத்தி தேவி சிறி பிரசாத்தும் சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறார்.
காட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கும் தில்லான ஒரு சிங்கம் என்ற பாடலை கர்ஜனையோடு சங்கர்மகாதேவன் படித்திருக்க அந்தப்பக்கமே தன் குரலை தெளிக்காமல் ஒளிந்திருக்கிறார் நம்ம DSP.

நம்ம DSP (தேவிசிறி பிரசாத்) இடம் ஒரே ஒரு கேள்வி கேட்க ஆசை..
பல அருமையான நல்ல பாடல்களைத் தந்த நீங்கள் உங்கள் இசையை 200 அல்லது 300 வருடம் வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக உபயோகிக்கப் போகிறீர்களா? காரணம் உலகமெல்லாம் பரந்திருக்கும் இசைக்கு பஞ்சம் வந்துவிடும் என நினைத்தோ தெரியவில்லை உங்கள் இசையை கொஞ்சம் கொஞ்சமாகவே பயன்படுத்துகிறீர்கள்.
ஏற்கனவே மாயாவி, மழை போன்ற படப்பாடலுக்குள் கஞ்சத்தனம் காட்டி இசையை கோர்த்து விட்டதை மறக்க முடியவில்லை. அதே போலவே இம்முறையும் பல இடங்களில் இசைச் சிக்கனத்தைக் கடைப்பிடித்திருக்கிறீர்கள். 
எதுவோ புரியவில்லை பாடல் கூட அந்தளவுக்கு மோசமில்லை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.. மிகுதி காட்சிகளே தீர்மானிக்கும்..

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
10:53 AM - By ம.தி.சுதா 2

வெள்ளி, 24 மே, 2013

எம்மவர் பாடல் வளர்ச்சிக்கு உதாரணமாய் அமைந்த அருமையான அம்மா பாடல்

பாடல் என்பது மனித வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தாலும் எல்லா வகைப் பாடல்களையும் எல்லா நேரத்திலும் கேட்க முடிவதில்லை. ஆனால் அதற்கு விதிவிலக்காக அமைந்த பாடல்களும் இருக்கவே செய்கிறது. அந்த வகையில் முதலிடத்தைப் பிடித்துக் கொண்ட பாடல்களில் தாயிற்காக அமைந்த பாடல் மிக முக்கியமாகும்.
யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டிருந்த இந்த அம்மா பாடல் ஒவ்வொரு தாயின் மகவையும் கட்டிப் போடும் என்பதில் ஐயம் எழ வாய்ப்பில்லை.
பாடல் தயாரிப்பளரான ஐஸ்வர்யன் எண்டர்ரெயின்மெண்டைச் சேர்ந்த உமாமகேசின் சிரத்தையால் இப்பாடல் தென் இந்தியப் பாடகர் மதுபால கிருஷ்ணனின் மதுரக் குரலில் ஒலிக்கிறது. இப்பாடலை யாழ்ப்பாணத்தில் வைத்து ஒலிப்பதிவு செய்திருப்பதும் இன்னும் சிறப்பைக் கூட்டும் விடயமாகும். அவருடன் சேர்ந்து றொசிற்றாவும் பாடியிருக்க பின்னணி இசையை ஈழத்து முன்னோடி இசைக் குழுவான அருணா இசைக்குழு ஸ்தாபகரின் மகனான அருணா கேதிஸ் வழங்கியிருக்கிறார். ஏற்கனவே பிரபலமான அம்மா பாடல் ஒன்றின் லயத்துடன் பாடல் நகர்த்திச் செல்லப்பட்டிருந்தாலும் எள்ளளவு கூட அலுக்க வாய்ப்பில்லை.
இது தான் பாடல் வரிகள்...

ஆரிராரோ பாட்டுச் சத்தம் கேட்குது
அம்மாவின் ஞாபகங்கள் தாலாட்டுது
ஆராரோ பாடி என்னை வளர்த்தாய் என் தாயே
ஆனாலும் நம் உறவை பிரிக்க முடியாதே
உதிரத்தை ஊட்டி என்னை வளர்த்ததாய் என் தாயே
(ஆரிராரோ)

ஈரைந்து மாதங்கள் கருவினில் சுமந்தாயே
ஈரேழு ஜென்மத்திலும் தாயாய் வரவேணும்
ஆலயங்கள் செல்வதில்லை நான் தாயே
தெய்வமாய் இருக்கின்றாய் என் தாயே
உதிரத்தை ஊட்டி என்னை வளர்த்ததாய் என் தாயே
(ஆரிராரோ)

கண்ணே கண்மணியே கண்ணுறங்கு
கானகத்து பூங்குயிலே கண்ணுறங்கு
கானகத்து வெண்ணிலவே கண்ணுறங்கு
அழுகின்ற என் மகனே நீயுறங்கு

தாய் மடி தேடி வந்தேன் உன் பிள்ளை நான் தானே
தாய் புகழ் பாடி வந்தேன் கவிப்பிள்ளை நான் தானே
அம்மாவின் அன்பாலே ஆனந்தம் காண்பேனே
அப்பாவின் ஆசியுடன் அகிலத்தை ஆழ்வேனே
உதிரத்தை ஊட்டி என்னை வளர்த்ததாய் என் தாயே
(ஆரிராரோ)

இந்த அருமையும் ஆழம் நிறைந்ததுமான வரிகளை கமலநாதன் மற்றும் றஜித் வரைந்திருக்க கிருத்திகன் கமராவால் வர்ணம் தீட்டியிருக்கிறார்.
இப்பாடலை சயன் இயக்க நடிகர்களாக கவிமாறன் மற்றும் சுகந்தினி ஆகியோர்  நடித்திருக்கிறார்கள். படத்தொகுப்பை டனா செய்திருக்கிறார்.
எம்மவர் முயற்சிக்கு சான்று பயற்கும் இப்படியான படைப்புகளை மென் மேலும் வாழ்த்துக்களுடன் எதிர் பார்க்கிறோம்

அந்த அழகிய பாடலை ரசித்துப் பாருங்கள்

10:38 PM - By ம.தி.சுதா 5

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்


    தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்த வரை அத்திரைப்படங்களுக்கான இலவச ஆரம்ப விளம்பரங்களாக பாடல்களே இருக்கின்றன.
அந்த வகையில் 7 ம் அறிவுப் பாடல்களும் அந்த தேவையை பூர்த்தி செய்திருக்கின்றன. ஆனால் வழமை போல இம்முறையும் அப்பாடல்களுக்கு இசை வழங்கிய ஹரிஷ் ஜெயராஜ் மீது அரைத்த மா, சுட்ட வடை என்ற பெயர்கள் அடிபட ஆரம்பித்து விட்டன.

புதன், 29 டிசம்பர், 2010

பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.

               இசை என்பது பொதுவானதே இதில் ஈழப்பாடலும் சரி சிங்களப்பாடலும் சரி எம் காது தான் அதன் ஈர்பை தீர்மானிக்கும். அது போல் தான் எனது பார்வையும் அமையப் போகிறது. சகோதரர் ஜீவதர்சன் அழைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கடந்த 10 அண்டில் என் மனதை கவர்ந்த பாடல்களை தருகிறேன்

 “ஆயிரம் தான் கவி சொன்னேன்
          முதலாவது பாடலை கட்டாயம் சகல உறவகளையும் கேட்குமாறு பணிவுடன் கேட்கிறேன். இந்தப் பாடலை நான் முதல் முதலாகக் கேட்டது பதிவர் லோசன் அண்ணாவின் தாயின் பிறந்த நாள் அன்று தான். அப்போது அதை திருடிய எனது கைப்பேசி இன்று் என்னை கலங்கடித்த வண்ணமே இருக்கிறது. பின்னர் தம்பி ஜனகன் தான் இந்த பாடல் பெற உதவினார். வைரமுத்துவின் இந்த பாட்லை ஒரு தடவை கேளுங்கள் நிச்சயம் கண்ணீர் வரும். அவர் ஆயிரத்தில் ஒருவனில் எழுதிய ஒரு வரியால் கடுப்பாகி இருந்த என்னை மீண்டும் அவர் பக்கம் ஈர்த்த வரிகள் இவை

வியாழன், 23 டிசம்பர், 2010

மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)

                   உலகில் வாழும் எந்த ஒரு கிறிஸ்தவனும் இவர்கள் பாடலை அறியாமல் இருக்கவேமாட்டான் அந்தளவுக்கு அருமையாகவும் ஈர்க்கும்
விதத்திலும் படிப்பதில் வல்லவர்கள் யாரா அவர்கள் தான் ஒரு குழுவாக ஐரோப்பியாவையே கலக்கிய Boney M. 1975 ஆண்டில் தான் இவர்கள் முதல் முதல் தொலைக்காட்சி முன்னால் தோன்றினார்கள்.
              மேற்கு ஜெர்மனில் தோற்றம் பெற்ற இந்தக் குழுவானது அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, பெல்ஜியம் என ஒரு சுற்றச் சுற்றி கலக்கி வந்தது. இக்குழுவின் ஸ்தாபகராக இருந்தவர்Frank Farian ஆவார் அத்துடன் அக்குழுவில்Bobby Farrell, Liz Mitchell, Marcia Barrett, Maizie Williams  ஆகியோர் பங்கு கொண்டிருந்தார்கள்.

திங்கள், 18 அக்டோபர், 2010

பாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)

          இப்பொது புதுப் புதுப் பாடகர்களின் வருகையானது இசையுலகில் பல வித்தியாசங்களை எற்படுத்தியுள்ளது. எனக்குத் தெரிந்த சிலரின் முதல் பாடல்களை தருகிறேன். உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் சொல்லுங்கள்.
முதலில் எனக்கு பெரிதும் பிடித்த  அந்த இருவரிலும் இருந்து தொடங்குகிறேன். அவர்கள் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பிடித்தவர்கள் தான். முதலில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை சொல்ல நினைத்தாலும் அவரது முதல் பாடலில் பல சர்ச்சைகள் இருப்பதால் பின்னர் சொல்கிறேன்
11:12 PM - By ம.தி.சுதா 45

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

சுவர்ணலதாவின் வாரலாற்றுத் தடம்....

                               ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஒரு பாடகிக்காக எழுதப்படும் ஒரு வரலாற்றுத் தொகுப்பு இதுவாகும்.
                               1973 ம் வருடம் இந்தியாவின் கேரளாவில் உள்ள பாலக்காடு எனும் இடத்தில் இவர் செருக்குட்டி மற்றும் கல்யாணி அகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சிறந்த ஆர்மோனிய வாசிப்பாளர் ஆவார். 1987 காலப்பகுதியில் சென்னைக்க குடிபெயர்ந்த இவர் எம்எஸ் விஸ்வநாதனால் அடையாளம் காணப்பட்டு இளையராஜாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் பாடிய முதல் தமிழ் பாடல் 1987 ம் ஆண்டு நீதிக்குத் தண்டனை என்ற படத்தில் பாடிய பாரதியார் பாடலாகும் (சின்னம் சிறு கிளியே). ஆனால் சிலர் இது 1982 ல் வந்ததாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல்லாயிரகண்கணக்கான திரைப்படப் பாடல்களை பாடி புகழ் பெற்றவர். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கருத்தம்மா படத்தில் இவர் பாடிய பாடலுக்காக (போறாளே பொன்னுத்தாயி) சிறந்த பின்னணி பாடகி என்ற தேசிய விருது வழங்கப்பட்டது.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்)


           இந்தப் பதிவு முடிவல்ல ஒரு ஆரம்பமாகும். எனக்குப்பிடித்த கவிஞர்களில் ஒருவரான கண்ணதாசனில் இருந்தே ஆரம்பிக்கிறேன்.
                பிரபலங்களிடையே ஒரு இறுமாப்பு, ஆணவம், தலைக்கனம் என்று எந்தச் சொல்லைச் சொல்வதென்று தெரியவில்லை ஆனால் இதில் ஒன்று இருக்கிறது என்பது உண்மை. அத்துடன் பிரபலமானவர்கள் என்று தம்மை எண்ணிக் கொள்பவர்களிடம் இது மிக மிக அதிகமாகவே இருக்கிறது. உதாரணக்துக்கு வதனப் புத்தகம் (facebook) பார்த்தால் தெரியும். வந்து பதிவிட்டுப் போவர்கள் ஆனால் தமக்கு ஏதோ நேரம் என்பதே இல்லையாம். வேலை இல்லாத விசரர்களை பின்னால் வாருங்கள் என்பது போல போவார்கள். ஆனால் யாராவது காரசாரமாகப் பதிலிட்டால் அடுத்த கணம் மறுப்பு அறிக்கை விடுவார்கள். அப்படியானால் என்ன அர்த்தம் அவர்கள் எம்மைப் போல் விசரர்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படியானவர்களை எல்லேரும் புறக்கணித்தால் என்ன..?
          

வியாழன், 15 ஜூலை, 2010

உலகக்கிண்ண பாடலின் எழுத்து வடிவம்

கா நான் பாடிய பாடலான இப்பாடல் பலரது ரிங்கிங்டோன் ஆகிவிட்டது.அதே போல் பலரது வாயில் முணுமுணுக்கும் பாடலுமாகிவிட்டது. முடிந்தால் தமிழாக்குங்கள். மிக எளிமையான மொழிநடையில் அமைந்த பாடலாகும்.


2:00 PM - By ம.தி.சுதா 4

செவ்வாய், 15 ஜூன், 2010

இராவணன்

விமர்சனம்
இராவணன்


பாடல் என்றால் பிடிக்காதவர் யாருமே இருக்க முடியாது. அதுவும் இப்போது வரும் பாடல்களில் கவிநயத்தை ரசிக்கக் கூடியவாறு ஓரு சில பாடல்களே வருகிறது.
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை (அங்ககாடித்தெரு) என்ற பாடலுக்குப்பிறகு கேட்டவுடனேயே பிடித்த பாடல் என்றால் இதுதான்.
வைரமுத்துவின் இன்னுமொரு சித்திரம் என்றே சொல்லலாம். இராவணன் திரைப்படத்தில் முழுப்பாடலையும் அவரே ஒரே நாளில் எழுதிக்கொடுத்ததாக நண்பர் ஒருவர் சொன்னார். நம்பக்கூடிய விசயம் தான். இனிபடலுக்கு வருவோம்.

6:12 PM - By ம.தி.சுதா 1

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top