சனி, 6 டிசம்பர், 2014

வன்னி மீண்ட பெண்களின் களங்கம் கலைக்க நாம் படைத்த ஒரு படைப்பு - “கொண்டோடி குறும்படம்”

AM 11:48 - By ம.தி.சுதா 0

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?


 நாம் வெளியிட்டிருந்த புதிய படைப்பு ஒன்றுடன் உங்களைச் சந்திக்கிறேன்.
முழு நீளத் திரைப்படத்துக்கு தயாராகும் நாம் எமது செயற்பாட்டு வேகத்தை அதிகரிப்பதற்காக இக் குறுகிய காலப் படப்பிடிப்பு ஒன்றை கையில் எடுத்துக் கொண்டோம். ”கொண்டோடி” என்று தலைப்பிடப்பட்ட இக் குறும்படத்துக்கான படப்பிடிப்பு மற்றும் பின்கள வேலைகளை 12 மணித்தியாலத்திற்குள் முடித்து வெளியிட்டிருந்தோம்.

இக்குறும்படத்தை RTK friends media தயாரித்திருந்தது. எம் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையை நாம் கூறியது போல காப்பாற்றியிருந்தது எமக்கு மிகப் பெரிய சந்தோசமான விடயமாகும்.

குறும்படத்துக்கான கதை, திரைக்கதை, இயக்கத்தை நான் பார்த்துக் கொள்ள ஒளிப்பதிவை முதுரனும் சன்சிகனும் செய்தார்கள்.
என்னோடு உதவி இயக்கத்தை ஜனகன் செய்து கொள்ள கதைக்கான உணர்வை
கவிதாயினி, சுஜிதா, சோபி ஆகியோர் செதுக்கி கொடுத்திருந்தார்கள்.

படத்தொகுப்பை மதுரனும் ஒலியமைப்பை சன்சிகனும் மிக வேகமாக செய்து கொடுத்தார்கள்.

எம் பரிட்சார்த்தமாக செய்த இப்படைப்பை தற்போது பகிர்ந்திருந்தாலும் செப்பனிடப்பட்ட படைப்போடு மீண்டும் சந்திக்கலாம்.

தங்களது மேலான கருத்துக்களுக்காக இக்குறும்படம் பகிரப்படுகிறது

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா


About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

0 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top