Featured Articles
All Stories
HOT NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
HOT NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 ஏப்ரல், 2011

பதிவர்களுக்கு லட்ச ரூபாய் போட்டி (அவசர பதிவு)

             எமக்குத் தெரிந்த ஒரு விடயத்தை பத்து நபர்களிடம் பகிருவதில் வரும் சந்தோசமே ஒரு தனி ரகமாக இருக்கிறது. என்னடா இவனை ஒரு புளொக்கிலயும் காணக்கிடைக்கலியே ஊட்டுக்குள்ளால் வந்து பதிவு மட்டும் போடுறானே என நினைக்கிறீங்களா ? சில சந்தோசங்கள் பல வலிகளை பறக்கச் செய்யும். அதே போலத் தான் இதுவும். எனது சுடு சோறை பெற இன்னும் ஓரிரு வாரங்கள் பொறுத்திருங்களேன்.
11:34 AM - By ம.தி.சுதா 29

வெள்ளி, 4 மார்ச், 2011

பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

வணக்கம் சகோதரங்களே சேமம் எப்படி ?

         அவசர பதிவொன்றுடன் அவசரமாக சந்திக்க வேண்டி வந்துவிட்டது. செவ்வாய் கிழமையே பதிவிட வேண்டியது நேரம் இன்மையால் தவற விட்டுவிட்டேன்.
        இப்போது வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் எனச் சொல்லி பலர் பல வழியில் பணம் பறிக்கத் தொடங்கி விட்டார்கள். இவ்வளவு காலமும் தரகர்கள் மூலம் ஒரு பெரும் தொகைப் பணத்தை சுருட்டிக் கொண்டார்கள். இதில் பெரிதும் பாதிக்கப்படுவது கொஞ்சம் பணம் படைத்தவர்கள் தான். அனால் இப்போ அப்படியில்லை நடுத்தர வர்க்கத்துக்கு கீழ்ப்பட்டவர்களையும் இலக்கு வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
          சென்ற சனிக்கிழமை காலை யாழ்ப்பத்திரிகையான உதயனில் ஒரு விளம்பரம் வந்தது இதில் கனடாவிற்கு உடனடி வேலை வாய்ப்புடனான வீசா எனவும் 0777140416 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் இருந்தது. ஒரு நண்பர் ஒருவர் தொடர்பு கொள்ளுமாறு வற்பறுத்தினார். அதற்கு கொழும்பிலிருந்து ஒருவர் கதைத்தார். அந்த உரையாடலை சுருக்கமாகத் தருகிறேன்.

அவர் - திங்கட் கிழமை கனடா தூதரகத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்கணுமாம்.             அதனால் மறு நாள் கையளிக்க வேண்டுமாம்.
நான் - சரி எங்கு கொண்டுவருவது உங்கள் அலுவலகம் எங்கே இருக்கிறது.
அவர் - இல்லை தம்பி நாளை ஞாயிறு அலுவலகம் திறக்காது உடனடியாக கொடுக்கணும் அதனால் நீங்கள் கொழும்பு வந்து எனக்கு போன் பண்ணுங்க நான் லொட்ஜ்ஜிற்கு வந்து வாங்கறன்.
நான் - முதல் எவ்வளவு பணம் கட்டணும்
அவர் - அதெல்லாம் தேவையில்லை நான் விசா கையில் தருகையில் நீங்கள் 32 லட்சம் தந்தால் சரி.
நான் - அப்படியென்றால் ஆவணம் மட்டும் போதுமா ?
அவர்- இல்லை ஒரு றிசிட் (பற்றுச் சீட்டு) போடணும் அதற்கு 12,200 ரூபா தரணும்.
நான் - வேலை எங்கே ?
அவர் - கனடா எயாப்பொட் ஒன்றில் துப்பரவுப் பணி மாதம் 3 லட்சம் சம்பளம்.

(இவ்வளவும் உங்களுக்கு விளங்கிக் கொள்ளப் போதும் என நினைக்கிறேன். 10 லட்ச ரூபாய் படி 10 பேரை கூட இப்ப ஏமாற்ற முடிவதில்லை அதனால் 10 அயிரம் ரூபா படி 1000 பேரை எமாற்ற ஒரு திட்டம் தான் இது)

சரி இன்னொரு விடயம் கனடாவில் அப்பிள் தோட்டத்தில் வேலை எனக் கூறியும் எடுக்கிறார்கள் முதலில் வீமான பயணச் சீட்டுக்கு 2 1/2 லட்சம் செலுத்தினால் சரி மிகுதி 15 லட்சத்தை வேலை செய்யும் போது கழிக்கப்படுமாம். இதற்கு கனடா நண்பர் யாராவது விளக்கம் தாருங்கள். காரணம் இப்போது அங்கே குளிர் காலம் சரியாக முடியவில்லை அதனால் மரத்தில் இலைகள் கூட இருக்காது. வைகாசி, ஆனி காலப்பகுதி வரை இங்கிருந்து போபவர்கள் என்ன செய்வார்கள்.

முடிந்தவரை மற்றைய நண்பர்களுக்கும் சொல்லுங்கள். யாருக்காவது தகவல் பகிரணுமுன்னா கீழே உள்ள FACE BOOK பொத்தானை சொடுக்கி உங்கள் சுவரில் பகிருங்கள். அல்லது மெயில் பொத்தனை சொடுக்கி மின்னஞ்சலாக அனுப்பலாம். 

நன்றி மீண்டும் சந்திப்போம்.
11:36 AM - By ம.தி.சுதா 52

செவ்வாய், 11 ஜனவரி, 2011

ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்

               ஆரம்பத்திலேயே சொல்லிக் கொள்கிறேன் இது அசினுக்கெதிராகவோ அல்லது காவலனுக்கு எதிராகவோ எழுதப்படும் பதிவல்ல. எம்மை (என்னையல்ல) ஒரு கேணைக்கிறுக்கன் என நினைத்த ஒருவருக்காக எழுதப்படும் பதிவாகும்.
               சமீபத்திய நாட்களில் எல்லோரும் தமிழன் ஏமாற்றப்பட்ட கதையை நடிகர்கள் மூலமாகவும் அரசியல்வாதிகள் மூலமாகவும் கே(கெ)ட்டாகி விட்டது. என்ன பலரால் சிலதை ஏற்கமுடியாதுள்ளது ஒருவன் படம் நடித்தால் படத்தை பார்ப்போம் ரசிப்போம் அது சரி அதற்காக அவன் செய்வதெல்லாம் சரி என வாதிடக் கூடாது. ஏற்கனவே அசினின் சமூகப் பணியால் பார்வை இழந்த யாழ் வறியவர்கள் என்ற தலைப்பிட்டு எழுதிய ஒரு புதிய செய்தியால் பலருக்கு என் மீது கோபமிருக்கிறது நான் மீண்டும் சொல்கிறேன் தலைப்பானது உள்ளே உள்ள கட்டுரையை பரப்புவதற்காகவே இடப்பட்டது அவர் செய்த சேவை பாராட்டத்தக்கது
12:51 AM - By ம.தி.சுதா 37

புதன், 5 ஜனவரி, 2011

இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்

         அனைவரின் எதிர்பார்ப்பிற்கும் உள்ளாகி இருப்பது இளைய தளபதி விஜயின் காவலன் திரைப்படம் தான் ஆனால் அது எதிர் கொள்ளும் சர்ச்சைகளுக்கு அளவே இல்லை ஏற்கனவே அசினுக்கு வந்த பிரச்சனையை சிமானின் கோபத்தால் அவர் வெற்றிகரமாகத் தடுத்தார் ஆனால் அவரை தலையிடி விடுவதாயில்லை.
               இலங்கையில் ரஜனி படங்கள் போல் அவர் படத்தை யாரும் அடிபட்டு வாங்காதது அவர் மீதான நம்பிக்கையை சிதறடித்துள்ளது. யாழில் மனோகரா வாங்குகிறது என முன்னரே உறுதியானாலும் பொதுவாக முதலில் ஆறு திரையரங்குகளே முன்வந்திருந்தது இப்போ அது எட்டு ஆகா அதிகரித்துள்ளது.
10:52 PM - By ம.தி.சுதா 37

செவ்வாய், 4 ஜனவரி, 2011

பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel

            யாருமே எதையும் எதிர் பார்த்து நடப்பதில்லை அதில் ஒன்று தான் மரணமும் அது யார் இவரென்று பாகுபாடு பார்ப்பதில்லை அதன் வலையில் வீழ்ந்தவர் தான் டிஸ்கோ உலகின் மன்னனாக திகழ்ந்த பொபி பெரல் (Bobby Farrell) ஆவார்.
                  அவர் இறக்கும் போதும் ஒரு இளைஞனாகவே இறந்தது தான் அதிசயமாகும் இப்பாடலை பாருங்கள் என்ன ஒரு வேகம் என்ன ஒரு உடல் கட்டு இந்த 61 வயதில் எவ்வளவு நேரம் தலை கீழாக நிற்கிறார் பார்த்தீர்களா ? (இந்த வீடியோ மொஸ்கோவில் இடம் பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 30.10.2010 அன்று பெறப்பட்டதாகும் அதிகமாக இன்னும் பலர் பார்க்காத காணோளியாகும் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் இந்த கானோளி சொனி மியுசிக்கால் தடுக்கப்படலாம்)

திங்கள், 13 டிசம்பர், 2010

HUTCH வலையமைப்பு நிறுத்தப்படப் போகிறது.

               முதலில் இந்த வாரமும் தமிழ் மணத்தில் எனக்கு 11 ம் இடம் பெற்றுத் தந்த என் உறவுகளுக்கு மிக்க நன்றி.
         தொலைத் தொடர்பாளர் வலையமைப்பு என்பது இப்போது உலகின் பிரதான சத்தியாக மாறிவருகிறது திட்டமிடல் இல்லாத நிர்வாகம் எப்படித் திண்டாடும் என்பதற்கு HUTCH நிர்வாகமே பெரும் உதாரணம் ஆகும்.
   இலங்கையில் வலையமைப்பகளுக்கிடையே உருவாகியுள்ள போட்டியானது இவர்களை பெரிதும் நசுக்கி விட்டது. இதனால் தானோ தெரியவில்லை மறைமுகமாக பணத்தை பறிக்கிறார்கள். இது பற்றி நான் முன்னரே விபரமாகக் குறிப்பிட்டிருக்கிறேன் அதன் தொடுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
11:59 AM - By ம.தி.சுதா 37

வெள்ளி, 10 டிசம்பர், 2010

சீமானின் விடுதலையின் பின்னணி ரகசியம்

       இன்றைய செய்திகள் அனைத்தும் அவர் விடுதலை பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றன. நானும் அரசியல் பத்தி எழுதி நீண்ட நாள் ஆகிவிட்டது. உண்மையில் அரசியலிலோ அது சார்ந்த கட்டுரையளிலோ எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை. சிலவேளை அவற்றை நுனிப் புல் மேய்ந்து வருவதும் உண்டு சிலவேளை என் தந்தையார் பெற்றுக் கொண்ட பாடங்கள் எனக்கு         அதை வேப்பம் கொட்டை போல் மாற்றியிருக்கலாம்.
              சரி விசயத்திற்கு செல்வோம். கடந்த 10-2-2010 அன்று தமிழக மீனவருக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் சில வீர வாசனங்கள் பேசிய குற்றத்தால் சீமான் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை நேற்று நீதிமன்று திடீரென விடுதலை செய்தது.
11:00 AM - By ம.தி.சுதா 43

திங்கள், 6 டிசம்பர், 2010

பதிவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசுப் போட்டி...

         இது நேற்று எதேச்சையாகத் தட்டுப்பட்ட விசயங்களில் ஒன்றாகும். மிகவும் வரவேற்பிற்குரிய விசயங்களாக இவை பார்க்கப்படுகிறது. ஒருபுறம் தமிழ் மணம் பெரும் போட்டித் தன்மை ஒன்றை பதிவர் மட்டத்தில் அரங்கேற்றி விட்டுள்ளது. விருதுக்கென ஒரு புறம் போட்டி அது போதாது என்று மறுபுறம் வாரம் 20 பதிவர்களின் தெரிவு என ஒரு கலக்கல் கலக்குகின்றது.
           இன்னுமொரு பக்கம் சிங்காப்பூர் செல்வதற்கான பரிசுடன் அங்கும் ஒரு போட்டி நடைபெறுகிறது.
11:07 AM - By ம.தி.சுதா 77

வியாழன், 25 நவம்பர், 2010

இந்தியாவிலும் தமிழர் சிறுபான்மையினரா..??

                என்ன கேள்வியைப் பார்க்க குழப்பமாயிருக்கிறதா..?? என்ன செய்வது கேட்க வைத்துவிட்டார்களே காரணம் இன்று இடம் பெற்ற மீனவர்களின் பேச்சு வார்த்தையாகும்.
              இன்று இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களிடையே மீன்பிடி சம்பந்தமான பேச்சு வார்த்தை ஒன்று இடம் பெற்றது இதில் இந்திய மீனவர் சார்பாக தேவதாசும் இலங்கை மீனவர் சார்பாக தவரட்ணமும் கலந்து கொண்டார்கள். இதில் தேவதாசால் வாரத்தில் 2 நாட்களாவது சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதி கேட்கப்பட்டது அனால் தவரட்ணம் இதற்கு சம்மதிக்கவில்லை. அவர் சொன்ன காரணம் இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளால் மீன் பிடித்து கடல் வளத்தை சீர் குலைக்கின்றனர் என்பதாகும். அனால் 1974 ல் ஏற்படத்தப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் இரு சாராரும் சேர்ந்து மீன் பிடிக்கலாம் என்ற ஒரு பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
11:37 PM - By ம.தி.சுதா 66

சனி, 30 அக்டோபர், 2010

மறைமுகமாய் பணத்தை பறிக்கும் HUTCH வலையமைப்பு

               உலக மாற்றத்தில் தொலைத் தொடர்பாடல் ஆனது முக்கிய பங்கினை பெற்றுள்ளது. அதிலும் இலங்கையைப் பொறுத்தவரை கைப்பேசி வலையமைப்புகளின் விஸ்தரிப்பானது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

             வாடிக்கையாளரைப் பொறுத்தவரை எதைப் பாவிப்பது எதைத் தவிர்ப்பது என குழம்பிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இங்கு முக்கிய விடயமாகக் குறிப்பிடப்படுவது என்னவென்றால் ஒரு வலையமைப்பானது தனது வாடிக்கையாளரிடம் மறைமுகமாகப் பணம் பறிக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது.

வியாழன், 23 செப்டம்பர், 2010

அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!!

                      ஓவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய செய்தியாகும். முக்கியமாக பதிவர்கள், வாசகர்கள் மற்றும் இணைய உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்குங்கள்.
பாதிக்கப்பட்டவர்
                   இது அசினின் பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்த கதையாகும். இதில் உள் குற்றம் வெளிக் குற்றம் பார்க்கக் கூடாது தான் அனால் பாதிக்கப்பட்டது ஏழைகளல்லவா. திரையில் ஏழைகளுக்கு உதவத் துடிக்கும் நடிகர்களோ அல்லது அவர்கள் ரசிகர்களோ இதை கவனத்திலெடுங்கள்.
சம்பவம் என்னவென்றால் சில நாட்களிற்கு முன் யாழ் வந்திருந்த அசின் இங்குள்ள 300 வறியவர்களுக்கு விழிவெண்படல அறுவைச்சிகிச்சை இலவசமாக செய்து கொடுத்தார்.
12:34 PM - By ம.தி.சுதா 96

திங்கள், 13 செப்டம்பர், 2010

தமிழ் நாடு ஈழத்திற்கு இதையாவது தருமா..?

                       ஈழத்தமிழர் மீண்டும் ஒரு முறை தமிழக அரசிடம் வேண்டி நிற்க வேண்டிய தருணம் வந்திருக்கிறது. இதையாவது முதல்வர் கண்டு கொள்வாரா.. அல்லது பசப்பு வார்த்தை பேசி நழுவிக் கொள்வாரா தெரியவில்லை.
                         சம்பவம் இது தான் 2008 ம் ஆண்டளவில் நாமக்கல் மாவட்டத்தில் பொலிஸாரால் ஒரு சிலை கைப்பற்றப்பட்டது. இது முருகக் கடவுளின் பஞ்சலோகச் சிலையாகும்.
11:55 PM - By ம.தி.சுதா 16

சனி, 4 செப்டம்பர், 2010

வன்னி மக்களின் நகை திருடியவரைத் தெரியுமா...?

                                 இது இதுவரை உண்மை புலப்படாத ஒரு உவமைக் கட்டுரையாகும். இதில் மக்களுக்கு பெரியளவு பாதிப்புகள் இன்னும் வரவில்லையானாலும் ஒரு தொகை நட்டம் இருப்பது நிச்சயம் உண்மை தான்.
                                    இங்கிருக்கும் புகைப்படத்தைப் பார்த்தால் உண்மை தெரியும். இது நகை அடகு வைத்தமைக்கான பற்றுச்சீட்டாகும். அதுவும் ஒரு வார கால இடைவெளியில் வைக்கப்பட்டதாகும். ஒரு பற்றுச்சீட்டில் தவறியதாக ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டுள்ளது. மற்றையதில் இவர்கள் செலுத்த வேண்டிய வட்டிப் பணம் குறிக்கப்பட்டிருக்கிறது.

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

இலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்......


Hon. Maithripala Sirisena
Minister of Health
          இது இலங்கைக் குடி மக்களுக்காக சுகாதார அமைச்சு கொண்டு வந்திருக்கும் புதிய சட்ட அமுலாக்கலாகும்.
           போதைவஸ்தால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அதற்கான மருத்தவச் செலவை ஏற்க வேண்டும் என்று இலங்கையின் சுகாதார சேவைகள் அமைச்சர் எனது மூன்று பாலா தெரிவித்துள்ளார். அடடா குழம்பீட்டிங்களா நான் தமிழில் மொழி பெயர்த்த விட்டேன். அவர் பெயர் மைதிரிபாலா. இந்தச் சட்டம் போதை எதிர்ப்பிற்கு சார்பானதென்றால் எல்லோருக்கும் சந்தோசம் தான் ஆனால் இதனால் பாதிக்கப்படப் போவது குடிமக்களல்ல ஏழைக் குடியானவர்களே.
10:12 PM - By ம.தி.சுதா 6

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

தப்பான முடிவெடுத்ததால் முழி பிதுங்கிய சங்ககார.

                                             நான் சங்காவின் துடுப்பாட்டத்திற்கு அடிமை. ஆனால் அவரது தலைமைத்துவத்திற்கு எதிரானவன். காரணம் அவரது முடிவுகளில் எனக்கு எள்ளளவு உடன்பாடும் இல்லை.
உதாரணம் இன்று சுரேஷ் ரைனா, மிதுன் ஆகியோரை இவ்வளவு ஓட்டம் எடுக்க வைத்தது முடிவுதான்.


10:20 PM - By ம.தி.சுதா 7

சனி, 31 ஜூலை, 2010

சண் ரிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள்.

                   இது இதுவரை வெளிவராத மறைமுகத் தகவல் ஒன்று இதை முதல் முதல் வெளிக்கொணர்வதையிட்டு பெருமையடைகிறேன். இதில் முதல் பாதிக்கப்படப்போவது இலங்கையின் முதல் தர நகரமாக மாறிவரும் யாழ்ப்பாணமாகும்.
இலங்கைக்கான சண் ரிவி ஒளிவரப்பு உரிமத்தை LBN ( lanka broad band netmork) நிறுவனம் பெற்றுள்ளது. இவர்கள் கொழும்பில் ஒரு பிரபல கேபிள் ரிவி ஒளிபரப்பாளர்கள் ஆகும்.

வெள்ளி, 23 ஜூலை, 2010

AIRTEL வளர்ச்சியும் ஆட்டம் காணும் அரச சேவைகளும்


மிகப் பெரிய முதலீட்டுடன்  எயாரெல் நிறுவனமானது இலங்கையில் கால் பதித்துள்ளது. என்ன சகுணமோ தெரியவில்லை கால் வைத்ததிலிருந்து பலத்த சவால்களை எதிர் கொள்ள நேரிட்டுள்ளது. குறிப்பாக கடந்த சிலநாட்களுக்கு முன் தொலைத் தொடர்பு சேவைகள் அமைச்சு அறிவித்திருந்த புதிய சட்டமாகும். “வெளிச் செல்லும் அழைப்புக்கான குறைந்த கட்டணம் 2.00 ரூபாய்” என அறிவித்தது. (அரச வரியுடன் 2ரூபாய் 66சதம்).

10:52 AM - By ம.தி.சுதா 2

புதன், 14 ஜூலை, 2010

திருநெல்வேலியில் மட்டும் ஏன் பொருட்கள் மலிவு



இது இலங்கை விசயமானாலும் இவர்கள் கையாளும் நுட்பத்தை எல்லாரும் அறியவேண்டும் 
இக்கட்டுரையை நான் ஆராய்ந்து எழுதக்காரணம் எனக்கு நடந்த சம்பவம். எனக்கொரு காகித வெட்டி (paper cutter) தேவைப்பட்டது அதை திருநெல்வெலியில் 55 ரூபாய்க்கு வாங்கினேன். அது அழகான உருக்காலான (steel) கத்தியாகும். வாங்கி வருகையில் அருகில் நின்ற கொழும்பு சுற்றுலா வாசியொருவர் ”மேக்க மில கீ(h)யத” என்றார். நானும்
55 ரூபாய்க்கு வாங்கினேன் என்று கூறினேன். ”அம்மட்ட உடு” என்று தலையில் கைவைத்தவர். அதே போன்றதொன்றை தான் கொழும்பில் 150 ரூபாய்க்கு வாங்கியதாகக் கூறினார்.


11:17 AM - By ம.தி.சுதா 9

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top