வெள்ளி, 22 மே, 2015

ஐபிஎல் போட்டிகளும் நான் வாங்கிக் கட்டும் சாத்திரங்களும்..

AM 11:06 - By ம.தி.சுதா 1

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?
ipl இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள நிலையில் ஒவ்வொரு ஐபில் க்கும் நான் ஏதாவது சொல்லப் போய் வங்கிக் கட்டுவதுண்டு இந்த முறை இன்னும் வாங்கிக் கட்டாத காரணத்தால் இந்த பதிவு....
கடந்த இரண்டு வருடமாக நான் வாங்கிக் கட்டியவையில் முக்கியமானது சென்னை அணியாகும். அதற்கு முதல் வருடம் சென்னையின் மஞ்சள் மற்றும் வெற்றிக்கு அதிக சாத்தியமான நிறம் மஞ்சள் என்றும் பலரை கவர்ந்திழுக்க கூடிய நிறம் மஞ்சள் அது தான் சென்ன ஆதரவுக்கு காரணம் என கூற வரிசை கட்டி வந்து அடி விழுந்தது.
(மஞ்சளின் ஆதிக்கம் மற்றும் சிறப்பு பற்றி ஒக்டோபசை வைத்து நான் எழுதிய பழைய பதிவு ஒன்று தொடுப்பு இதோ - ஒக்டோபஸ் சாத்திரம் உண்மைதானா? ஆய்வாளர் பார்வையில்... )
அதே போல போன வருடம் கூறியிருந்தேன். அதிக வருவாயை ஐபிஎல் லில் அள்ளிக் கொடுக்கும் அணி சென்னையணியாகும் அதனடிப்படையில் தான் அரையிறுதிவரையுமாவது உள் வருகிறது. அதுமட்டுமல்லாமல் சென்னைக்கான அதிகளவான* போட்டிகளைப் பாருங்கள் இரவுப் போட்டியாகவே இருக்கும் பகல் என்றால் அதிகளவில்* சனி ஞாயிறு தினங்களிலே தான் வருகிறது.
இவை எல்லாம் என் கணிப்பு எனக்கு அது சரியாகவே படுகிறது.. படும்....

அதே போலத் தான் இம்முறை ஒன்றை உளற விரும்புகிறேன்.
சென்னை என்பது கிழட்டு அணியாகி விட்டது. காரணம் டோனி என்ற சிங்கம் கிரிக்கேட்டின் இறுதிக் கட்டத்தில் நிற்கிறது. இனி இந்திய அணியின் தலைமைக்கு வரப் போபவர் கோலி தான் அதே போல அதிகளவு பெண்கள் பட்டாளம் ஒன்றை பின்னுக்கு வைத்திருப்பவர்.
இவையே போதும் ஐபிஎல் பணம் கொழிக்க. அதனால் ஏற்கனவே இந்திய அணியின் ரசிகர்களாலேயே வெறுக்கும் அளவுக்கு நடத்தையுள்ள விராட் கோலியை நாயகனாக்க வேண்டிய தேவை கட்டுப்பாட்டு சபைக்கு இருக்கிறது. ஏனென்றால் வரும் வருடம் கூட்டம் திரண்டு வருவதென்றால் அது கோலிக்காகத் தான் இருக்கும்.
அதனடிப்படையில் கோலியை கிண்ணம் வெல்ல வைக்க வேண்டிய தேவை ஒன்று உருவாகிறது. ஆனால் கோலி கிண்ணம் வென்றாலும் பெங்களுருக்கு இருக்கும் பார்வையாளர் பட்டாளத்தை விட சென்னைக்கான பட்டாளமே மிக மிக அதிகம்.
இதனடிப்படையில் கோலி இம்முறை தவற விட்டாலும் பெரும்பாலும் டோனிக்கு பின்னர் சென்னைக்குள் இழுத்து வரப்படப் போகும் ஒரு ராஜாவாக கோலி இருப்பார் என்பது என் நம்பிக்கையாகும்.
ஏனென்றால் கட்டுப்பாட்டுசாபைக்கு தேவைப்படுவது பணம் பணம் பணம்...

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

1 கருத்துகள்:

Yarlpavanan சொன்னது…

பயனுள்ள பகிர்வு

புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top