புதன், 5 நவம்பர், 2014

புத்துணர்ச்சி பெற்றுள்ள கலைஞரின் நாளைய இயக்குனர்

6:49 PM - By ம.தி.சுதா 3

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

நாளுக்கு நாள் திரைத்துறைக் கனவுகளுடன் பல நூறு இளைஞர்கள் திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானவர்களுக்கு களம் தர என உருவாக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று தான் கலைஞர் ரீவியின் நாளைய இயக்குனராகும்.

இந்நிகழ்ச்சியின் ஆரம்பத் தொடர்களில் சாதித்த ஒரு சிலரே இன்று திரை உலகில் நுழைந்திருக்க அதன் பின்னர் சொல்லும்படியாக எவரும் உள் நுழையவில்லை. என் கணிப்பின் படி அவர்களை உருவாக்கியது இந் நிகழ்ச்சியல்ல அவர்களுக்கு ஒரு அடையாளமாக மட்டுமே இந்நிகழ்ச்சி இருந்திருக்கிறது.

அதற்கு காரணம் நடுவர்களின் மனத் தோற்றப்பாட்டையே கூற வேண்டும். மிக நீண்ட வருடங்களாக இந்நிகழ்ச்சியை பார்த்து வரும் எனக்கு இதில் தோன்றிய நடுவர்களது திணிப்புக்கள் என்றைக்குமே உறுத்தலாகவே இருந்திருக்கிறது.

ஒரு குறும்படம் என்பது முழு சினிமாவின் விதிமுறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சட்டதிட்டங்களை களைந்தெறிந்து உருவாக்கப்படுவதே ஆகும் ஆனால் அதற்கு இவர்கள் பல்வெறு விதமான கருத்துக்களைத் திணிப்பார்கள்.

குறிப்பாக அண்மையா நாட்களில் நடுவர்களாக இருந்த சுந்தர்.சி மற்றும் வசந் ஆகியோர் மிக மோசமாகப் படைப்பாளிகள் மேல் ஒரு வரையறைத் திணிப்பை இட்டு வந்தார்கள். கடவுள் செயலாக தனது சுய தேவைக்காக சுந்தர்.சீ ஒதுங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கார்த்திக் சுப்புராஜ் நடுவராக உள்வாங்கப்பட்டள்ளார்.

இவரது வருகையின் பின்னரே நடுவர் பக்கத்தில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டிருக்கிறது என்று கூற வேண்டும். இதுவரை காலமும் நடுவர் ஒருவர் படத்தை பார்த்தாரேன்றால் அவருக்கு அப்படத்தில் இருந்த எது விளங்கியதோ அதனடிப்படையில் தான் அவரது கருத்து மழை கொட்டும்.

ஆனால் கார்த்திக் சுப்ராஜ் வந்ததன் பிற்பாடு ஒரு சின்ன மாற்றம். படைப்பாளியின் கருத்தும் ஒன்று உள்வாங்கப்படும். அவர் படத்தை விளக்கச் சொல்லி ஒரு சொல் கேட்பார். இதில் படைப்பாளிக்கு நல்லதொரு வாய்ப்புக்கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இப்படியானதொரு பெரிய போட்டிக்கு சிறந்த கதை ஒன்றைத் தான் எடுப்பார்கள். ஆனால் பார்க்கும் எமக்கு அது சொதப்பலாகத் தெரியும். அப்படியானால் எங்கோ ஓரு இடத்தில் தப்பு நடந்திருக்கும். இவரது இச்செயற்பாட்டால் இலகுவாக அதை அடையாளம் காணக் கூடியதாக இருக்கின்றது. இது படைப்பாளிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் மிகவும் பயனைக் கொடுக்கிறது.

அரையிறுதிச் சுற்று நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அடுத்த தொடருக்கும் கார்த்திக் சுப்புராஜ் இருப்பாராக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது எண்ணமாகும். ஆனால் அவரிடமும் ஒரு குறை இருக்கின்றது. அதாவது ஒன்றில் தனி ஆங்கிலத்தில் பேசலாம் அல்லது தனி தமிழில் பேசலாம் இரண்டையும் கலந்து கோர்த்து கதைப்பாதால் அவர் பேச்சை விளங்கிக் கொள்வது மிகவும் சிரமமானதாக இருக்கிறது.

எப்படியென்றாலும் கடந்த ஒரு சிலவாரங்களாக போட்டியை மிகவும் ரசிக்கக் கூடிய மாதிரி இருக்கின்றது.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

3 கருத்துகள்:

Yarlpavanan சொன்னது…


சிறந்த பகிர்வு
தொடருங்கள்

Yoga.S. சொன்னது…

வணக்கம் சார்!நலமா?///ஹி!ஹி!!ஹீ!!!அவருக்கும் முளிசா தமிழோ,ஆங்கிலமோ தெரியாது போல?

செங்கதிரோன் சொன்னது…

good analysis...

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top