வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?
முற்குறிப்பு - இப்பதிவை விறைத்த முகத்துடன் சீரியஸ் ஆக படிப்பவர்களது மன உளைச்சலுக்கு நான் பொறுப்பல்ல...
ஒரு இயக்குனர் தான் அமைக்கும் ஒவ்வொரு காட்சியிலும் முழுக்கவனமாகவே இருப்பான். அண்மையில் திரைவெளியில் உலாவிய ஒரு திரைப்படத்தின் ஒரு காட்சியை வைத்து பலவிதமான கருத்துக்கள் உலாவித் திரிந்தன.
எவ்வகையில் பார்ததாலும் அவ் இயக்குனரின் சிந்தனை வளத்தை பாராட்டியே பலர் கருத்திட்டிருந்தார்கள். ஆனால் எல்லோரும் பார்த்த பக்கம் காதல்மயமானதாகவும் ஆபாச வகையறாக்களுமானதாகவே இருந்தது. குறிப்பாக இவையை வைத்தே படத்துக்கு நிச்சயம் 'A' சான்றிதழ் கிடைக்க வைத்து விடுவார்கள்.
ஆனால் நான் சொல்கிறேன் அது ஒரு குறியீட்டுக் காட்சியாகும். அதாவது இவ்விளக்கத்தின்படி பார்த்தால் அது ஒரு காதல் படம் என்பதற்கப்பால் அது ஒரு science fiction திரைப்படமாக ஏற்றுக் கொள்வீர்கள்.
எதற்கும் இன்னொரு தடவை மேலே இட்டிருக்கும் படத்தை பார்த்து விட்டு கீழ் உள்ளதைப் படிக்கவும்...
1. இளநீர் என்பது உலகத்திலேயே கிருமிகள் அற்ற ஒரு திரவகமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
அதாவது வன்னியில் வேலை செய்த பல மருத்துவர்களுக்கு இவை பரிசோதனை ரீதியாகத் தெரியும் காரணம் சேலைன் பற்றாக் குறையான நேரங்களில் அதற்கு பதிலாக இளநீர் ஏற்றப்பட்ட சம்பவங்களும் உண்டு.
2. ஒரு மனிதனின் வாயிற்குள் (இது பெண்களுக்கு மட்டுமென்றல்ல) உலக சனத்தொகைக்கு இணையான மக்கள் தொகை கொண்ட கிருமிகள் அடங்கிக் கிடக்கிறது என மருத்துவம் சொல்கின்றது.
இதில் என்ன குறியீடு ?
இளநீர் தான் இந்த உலகமாகும் அந்தளவு தூய்மையான இன்பங்கள் கொட்டிக்கிடக்கும் பொருளை நேரடியாகப் பருகாமல் ஒவ்வொரு ஆணும் பெண்ணுக்குள் தான் இன்பம் இருக்கிறது எனக் கருதி அந்த தூய்மையான இன்பங்களை பெண்களுக்கூடாகப் பருக நினைத்து அழிந்து போகிறான். இதைத் தான் நேரடியாகச் சொல்லாமல் அவ் இயக்குனர் குறியீடாகச் சொல்கிறார். ஏன் யாரும் இப்ப சிந்திக்கிறீர்கள் இல்லை.
(இப்போது எத்தனை பேர் என்னை நோக்கி செருப்பெடுத்திருப்பீர்கள் என்று தெரியும் அதனால் அடியேன் தொலைகிறேன். விட்டு விடுங்கள் ஹர ஹர மகா தேவ கீ)
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
என்னுடைய பக்கத்துடன் LIKE செய்து இணைந்திருப்பதனூடு பதிவுகளை தொடர்ந்து பெறுங்கள்
https://www.facebook.com/actormathisutha/
நலம் எப்படி?
முற்குறிப்பு - இப்பதிவை விறைத்த முகத்துடன் சீரியஸ் ஆக படிப்பவர்களது மன உளைச்சலுக்கு நான் பொறுப்பல்ல...
ஒரு இயக்குனர் தான் அமைக்கும் ஒவ்வொரு காட்சியிலும் முழுக்கவனமாகவே இருப்பான். அண்மையில் திரைவெளியில் உலாவிய ஒரு திரைப்படத்தின் ஒரு காட்சியை வைத்து பலவிதமான கருத்துக்கள் உலாவித் திரிந்தன.
எவ்வகையில் பார்ததாலும் அவ் இயக்குனரின் சிந்தனை வளத்தை பாராட்டியே பலர் கருத்திட்டிருந்தார்கள். ஆனால் எல்லோரும் பார்த்த பக்கம் காதல்மயமானதாகவும் ஆபாச வகையறாக்களுமானதாகவே இருந்தது. குறிப்பாக இவையை வைத்தே படத்துக்கு நிச்சயம் 'A' சான்றிதழ் கிடைக்க வைத்து விடுவார்கள்.
ஆனால் நான் சொல்கிறேன் அது ஒரு குறியீட்டுக் காட்சியாகும். அதாவது இவ்விளக்கத்தின்படி பார்த்தால் அது ஒரு காதல் படம் என்பதற்கப்பால் அது ஒரு science fiction திரைப்படமாக ஏற்றுக் கொள்வீர்கள்.
எதற்கும் இன்னொரு தடவை மேலே இட்டிருக்கும் படத்தை பார்த்து விட்டு கீழ் உள்ளதைப் படிக்கவும்...
1. இளநீர் என்பது உலகத்திலேயே கிருமிகள் அற்ற ஒரு திரவகமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
அதாவது வன்னியில் வேலை செய்த பல மருத்துவர்களுக்கு இவை பரிசோதனை ரீதியாகத் தெரியும் காரணம் சேலைன் பற்றாக் குறையான நேரங்களில் அதற்கு பதிலாக இளநீர் ஏற்றப்பட்ட சம்பவங்களும் உண்டு.
2. ஒரு மனிதனின் வாயிற்குள் (இது பெண்களுக்கு மட்டுமென்றல்ல) உலக சனத்தொகைக்கு இணையான மக்கள் தொகை கொண்ட கிருமிகள் அடங்கிக் கிடக்கிறது என மருத்துவம் சொல்கின்றது.
இதில் என்ன குறியீடு ?
இளநீர் தான் இந்த உலகமாகும் அந்தளவு தூய்மையான இன்பங்கள் கொட்டிக்கிடக்கும் பொருளை நேரடியாகப் பருகாமல் ஒவ்வொரு ஆணும் பெண்ணுக்குள் தான் இன்பம் இருக்கிறது எனக் கருதி அந்த தூய்மையான இன்பங்களை பெண்களுக்கூடாகப் பருக நினைத்து அழிந்து போகிறான். இதைத் தான் நேரடியாகச் சொல்லாமல் அவ் இயக்குனர் குறியீடாகச் சொல்கிறார். ஏன் யாரும் இப்ப சிந்திக்கிறீர்கள் இல்லை.
(இப்போது எத்தனை பேர் என்னை நோக்கி செருப்பெடுத்திருப்பீர்கள் என்று தெரியும் அதனால் அடியேன் தொலைகிறேன். விட்டு விடுங்கள் ஹர ஹர மகா தேவ கீ)
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
என்னுடைய பக்கத்துடன் LIKE செய்து இணைந்திருப்பதனூடு பதிவுகளை தொடர்ந்து பெறுங்கள்
https://www.facebook.com/actormathisutha/














