திங்கள், 20 டிசம்பர், 2010

யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

                            எம்மவர்களின் திறமையை மீண்டும் நிருபிக்க ஒரு சந்தர்ப்பமாக நேற்று இது அமைந்தது. aaa movies international ஏற்பாட்டில் எடுக்கப்பட இருக்கும் பனைமரக்காடு என்ற குறும்படத்திற்கான பட பூசை வெங்கடேஸ்வர வரதராயப் பெருமாள் கோயிலில் இடம் பெற்றது.

      
         இதற்கு பின்னணி இசையமைப்பாளரான சிற்பி, நடன நட்சத்திரமான மனோகர்போன்றோர் வந்திருந்தனர். இதை கேசவராஜா இயக்குவதாக அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை முன்னைய காலங்களில் அவருடன் ஏற்பட்ட சந்திப்புகள் மூலம் கண்டிருக்கிறேன். முன்னைய படங்கள் அவரது முழுத் திறமையையை வெளிக்காட்டும் சந்தர்ப்பத்தை அழித்திருக்கவில்லை. இம்முறை அவர் ஒரு சுதந்திர மனிதராக வெளியழுத்தங்கள் குறைவாக படம் ஒன்றை பிரசவிக்கப் போவதால் எனது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இப்படம் மட்டும் இணையத்திற்கு சொந்தமானது
           அத்துடன் தயாரிப்பாளர் பற்றி சொல்லியே ஆக வேண்டும் இவரை யாழில் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள் காரணம் கடந்த தேர்தல் காலத்தில் ஒவ்வொருவர் வீட்டு மதிலில் சிரித்தபடி நின்றவரான செவ்வேள் தான் தயாரிக்கப் போகிறார் ஒரு வழக்கறிஞர் ஆன இவர் இதற்கு முன் தயாரித்த படங்கள் (காதல்.கொம்,கோடம்பாக்கம், பேசாத கண்ணும் பேசுமே)) பெரிதளவு பெயரை பெற்றுக் கொடுக்காவிட்டாலும் இம்முறை தனது முதலை ஈழத்தில் இட்டிருப்பது வரவேற்கத் தக்க விசயமே
நானே ஒட்டிய சுவரொட்டி அழகாயிருக்கா ?
         எம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பனைமரக்காடு (panaimarakaadu)காட்டுக்குள்ளேயே தங்குமா அல்லது நாட்டையே கலக்குமா காத்திருப்போம்.. வழமை போல் அனைவரும் அறிந்த ஒன்றை எடுக்காமல் புதிதாய் ஒரு விடயத்தை காட்டினால் பலரை ஈர்க்கும் அத்துடன் வெளி நாட்டவரை கவர வேண்டுமானால் சில விசயங்களை கூறக்கூடாது இப்படியெல்லாம் விதிகள் இருப்பதால் சிலதை கவனத்திலெடுத்து பலதை சிந்தித்தால் பிரபலமாவது உறுதியாகும்.


குறிப்பு - இதே தயாரிப்பாளரிடம் நான் கேட்க வேண்டிய சில கேள்விகள் இருக்கிறது. அவர் மீண்டும் என்னை சந்திப்பார என தெரியாததல் இங்கேயே சொல்கிறேன் “ஐயா எனக்கு அடையாள அட்டை பெற்றுத் தருவதாகச் சொல்லி சாமம் சாமமாகவும் , பற்றைகள் பருகுகளிலும் ஐந்து கிலோ மாவை மட்டும் தந்து ஓசியில் வேலை வாங்கினீர்களே. மற்ற கட்சிக்காரன் ஒரு இரவுக்கு 1000 ரூபா சம்பளமும் கொத்துரொட்டியும் கொடுத்து ஆட்களை வைத்திருக்க ஒற்றை ஐசி க்காக அலைந்தேனே என்னை நினைவிருக்கிறதா ?” ஐயா இப்பொதும் என்னிடம் ஐசி இல்லை ஆனால் நான் நடமாடுகிறேன் காரணம் ஓரிரு மனித நேயம் உள்ள மானிடர்களால். என்மேல் உங்களுக்கு கோபம் வரலாம் நியாயமிருக்கிறது.... அப்படி கோபம் வந்தால் இப்போதாவது எனக்கு உதவுங்கள்... நான் உங்கள் சுவரொட்டியை ஒட்ட சுடுதண்ணிர் விடவில்லை அதில் என் வியர்வை தான் இட்டேன்.


என் துணிவைப் பாராட்டுகிறேன் என்று யாரும் கருத்திட வேண்டாம் நான் ஏமாற்றப்பட்டவன். அந்தச் சொல்லுக்கு தகுதியில்லாதவன்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

52 கருத்துகள்:

எப்பூடி.. சொன்னது…

உங்க ஐட்டம் எனக்குத்தான் போல, அதுதாங்க சுடு சோறு :-)

எப்பூடி.. சொன்னது…

ஆமாமா எனக்குத்தான் :-)

ம் ...

எப்பூடி.. சொன்னது…

வெற்றிபெற வாழ்த்துக்கள், அனால் எனக்கு படத்தின் பெயர் பிடிக்கவில்லை, பனங்கூடல் என்பதே சரியான தமிழ்ச்சொல் என்று நினைக்கிறேன்.

ஷஹன்ஷா சொன்னது…

பொறுமையோடு எதிர்பார்ப்போம்......அண்ணா

பனி பொழியுது....

Kiruthigan சொன்னது…

பார்க்கலாம்..

Subankan சொன்னது…

ம்.. பார்க்கலாம்

நிரூஜா சொன்னது…

vazhthukal

Kiruthigan சொன்னது…

ஓ.. ஐ.. சீ...
எல... தலைவர பத்தி குறைவா கதைச்சா பிச்சிப்புடுவேன் பிச்சு...
அண்ணாச்சி எனக்கு ஒரு ஓட்டுக்கு ரெண்டாயிரம்ரூவாவும் கொத்துறொட்டியும் தந்திருக்காரு தெரியுமா..?

மாணவன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி நண்பா

Philosophy Prabhakaran சொன்னது…

நெகடிவ் ஓட்டு...? பிரபலமாயிட்டீங்க :)

KANA VARO சொன்னது…

படம் பற்றிய விபரத்தை விட உங்கள் நிலைமை யோசிக்க வைக்கிறது. அதற்கு எங்களால் இயலாது. விரைவில் அதைப் பெறுவதற்கு முயற்சிக்கவும். பதிவர் சந்திப்பில் கூட பலர் சுதாவின் வருகையை எதிர்பார்த்திருந்தார்கள்.

pichaikaaran சொன்னது…

பதிவர் சந்திப்புக்கு நீங்கள் செல்லாதது, சர்வதேச அளவில் ஆச்சர்யம் ஏற்படுத்திவிட்டதே

சுதா,பொதுவாக சினி ஃபீல்டில் நம் உழைப்பை உறிஞ்சுபவர்களும் ,ஏமாற்ற நினைப்பவர்களும் அதிகம்.என்னிடம் கூட காமெடி டிராக் வாங்கி ஏமாற்றி இருக்கிறார்கள்.நாம் ஒதுங்கி இருக்க வேண்டியதுதான்.

நமக்கும் ஒரு காலம் வரும் காத்திருப்போம்

Muruganandan M.K. சொன்னது…

மண்ணின் மணம் இதில் சிறப்பாக இருக்கும் என நம்புவோம்.

sinmajan சொன்னது…

பொறுத்திருந்து பார்ப்போம்..

Unknown சொன்னது…

என்னது சுடுசோற்றுக்கே ஏமாற்றமா??நெஞ்சு பொறுக்குதில்லையே....

என்னது? மாவுக்காக சுவரொட்டி ஒட்டினீங்களா??? கொழும்பில சுவரொட்டி ஒட்டுற ரேட் என்ன தெரியுமா? இப்படி அப்பாவியா இருந்திட்டீங்களே.

என்னைக்கேட்டா ஐ.சி. போன்றவற்றைப் பெற அரசியல்வாதிகளைப் பிடிப்பதைவிட அதிகாரிகளைப் பிடிப்பதே நன்று.

தர்ஷன் சொன்னது…

ஆமா உங்களை ஏமாற்றிய அரசியவாதி எடுக்கும் படத்துக்கும் ஆதரவாக ஒரு பதிவு இட்டிருக்கிறீர்களே இதுதான் "இன்ன செய்தாரை ஒருத்தல்" என்பதா?

நான் உங்கள் சுவரொட்டியை ஒட்ட சுடுதண்ணிர் விடவில்லை அதில் என் வியர்வை தான் இட்டேன்.///

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை சார் ..............................

செங்கோவி சொன்னது…

நல்ல பதிவு நண்பா..கடைசி வரிகளைப் படித்தபோது மனம் கனத்தது.

----செங்கோவி
ப்ளாக்கை பிரபலமாக்க 7 சூப்பர் டிப்ஸ்

"பனைமரக்காடு" சிறந்த படமாக வாழ்த்துக்கள்.............




அண்ணா நீங்கள் கூறிய ஒரு விடயத்தை நான் மறுக்க விரும்புகின்றேன்........................
கண்டிப்பாக நீங்கள் ஏமாந்து போனவரல்ல ஏமாற்றப்பட்டவர்என்றோ ஓர் நாள் அதே அரசியல்வாதிக்கு உங்களால் ஏதாவது உதவி தேவைப்படும்
இதுதான் உலக நியதி கவலை கொள்ளாதீர்கள்

Arun Prasath சொன்னது…

படிக்கச் கஷ்டமாதான் இருக்கு... படத்திற்கு வாழ்த்து மட்டும் சொல்லிகரேன்

தினேஷ்குமார் சொன்னது…

பனைமரக்காடு வெற்றி வாகை சூட என் வாழ்த்துக்களும் சகோதரா

இளங்கோ சொன்னது…

பனைமரக் காடு வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

"பனைமரக்காடு"நினைக்கவே மனம் ஊர் நோக்கிப் பறக்கிறது சுதா.
மண்வாசனையோடு வெற்றிநடை போடட்டும் !

Vathees Varunan சொன்னது…

ம்.. இப்படத்தில் பல இலங்கை கலைஞர்கள் நடிக்கப்போவதாக கேள்விப்பட்டேன..நல்ல முயற்சி... எனக்கும் இந்த நிகழ்வுக்கான அழைப்பு கிடைத்தது ஆனாலும் பதிவர்கள் சந்திப்பு ஏற்பாட்டு குழுவில் இருந்தவன் என்ற ரீதியிலும் பதிவர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்ற காரணத்தினாலும் ஆரம்பவிழாவில் கலந்துகொள்ளவில்லை.

அதுசரி நீங்க இன்னும் அடையதள அட்டை இல்லாமல்தான் இருக்கிறியளோ...

kippoo சொன்னது…

உங்களின் ஆதங்கமும் புரிகின்றது. அதேநேரம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

ARV Loshan சொன்னது…

ம்ம்...
உங்களை அப்பாவி என்பதா ஏமாளி என்பதா தெரியவில்லை சுதா..

Unknown சொன்னது…

தயாரிப்பாளர் யோசிக்கட்டும் .
இது மாதிரி எத்தனைப்பேரின் உழைப்பும், ரத்தமும் உறிஞ்சப்பட்டுள்ளதோ?

Unknown சொன்னது…

//ஆமா உங்களை ஏமாற்றிய அரசியவாதி எடுக்கும் படத்துக்கும் ஆதரவாக ஒரு பதிவு இட்டிருக்கிறீர்களே இதுதான் "இன்ன செய்தாரை ஒருத்தல்" என்பதா?//

Jana சொன்னது…

உண்மையை சொல்லவேண்டும் என்றால் எனக்கு ஏமாற்றுபவர்களின் மீது கோபம் வருவதில்லை!

aswamethan சொன்னது…

படம் சிறப்பாக வர வாழ்த்துக்கள்
உங்கள் தேவையை பூர்த்தி செய்ய உரிய தரப்பை நாடுங்கள் .காலை கையை பிடிப்பது சரிப்பட்டு வராது சகோதரா
புரிந்து கொள்

ராவணன் சொன்னது…

பனங்காடு...இல்லை தேரிக்காடு என்று இருந்தால் நன்றாக இருக்கும்.

பனைமரக்காடு என்று ஒருவரும் கூறுவதில்லை.

ராஜகோபால் சொன்னது…

நண்பா முடிஞ்சா ஒனக்கு புடிச்ச பத்த பாட்ட ஒரு போடு போடு. தொடர்பதிவு புடிச்சா எழுது

http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/12/10.html

arasan சொன்னது…

பகிர்வுக்கு நன்றி நண்பா ...

Kiruthigan சொன்னது…

என் கருத்துக்கு மதிப்பளித்து மாற்றம் செய்தமைக்கு நன்றி ஆனால் என்னால் தான் மீண்டும் மாத்திக்குத்த முடியாமல் உள்ளது... நன்றி

படம் வெற்றி அடைய வாழ்த்துகள் . எண்ணம் வெற்றியடையட்டும் பாராட்டுகள் .

Unknown சொன்னது…

//வெளி நாட்டவரை கவர வேண்டுமானால் சில விசயங்களை கூறக்கூடாது//
உண்மை! உண்மை!

//இப்பொதும் என்னிடம் ஐசி இல்லை ஆனால் நான் நடமாடுகிறேன் காரணம் ஓரிரு மனித நேயம் உள்ள மானிடர்களால்//
நானும் உங்களை எதிர்பார்த்தவர்களில் ஒருவன்! விரைவில் ஐ.சி.கிடைக்கட்டும்!

செல்வா சொன்னது…

//(காதல்.கொம்,கோடம்பாக்கம், பேசாத கண்ணும் பேசுமே)//

கோடம்பாக்கம் படம் கொஞ்சம் பார்த்திருக்கேன் ..!!

Unknown சொன்னது…

சுதா! நீங்க சொன்ன ஐ.சி., சுவரொட்டி அனுபவம்! இது கூட ஒரு நல்ல குறும்படத்திற்கான கரு!

செல்வா சொன்னது…

// மற்ற கட்சிக்காரன் ஒரு இரவுக்கு 1000 ரூபா சம்பளமும் கொத்துரொட்டியும் கொடுத்து ஆட்களை வைத்திருக்க ஒற்றை ஐசி க்காக அலைந்தேனே என்னை நினைவிருக்கிறதா ?” //

//நான் உங்கள் சுவரொட்டியை ஒட்ட சுடுதண்ணிர் விடவில்லை அதில் என் வியர்வை தான் இட்டேன்.//

அட கொடுமையே .? விரைவில் உங்கள் விருப்பம் நிறைவேறட்டும் .. உங்களுக்கு IC கிடைக்கட்டும் ..!!

ஜிஎஸ்ஆர் சொன்னது…

சில விஷயங்கள் எனக்கு புரியாததால் நான் வந்ததை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்

கலையன்பன் சொன்னது…

நிச்சயமாக உங்களுக்கு அடையாள அட்டை
கிடைக்கும் என்பது என் நம்பிக்கை!
அதற்கு என் வாழ்த்துக்கள்!

vanathy சொன்னது…

//அப்படி கோபம் வந்தால் இப்போதாவது எனக்கு உதவுங்கள்... நான் உங்கள் சுவரொட்டியை ஒட்ட சுடுதண்ணிர் விடவில்லை அதில் என் வியர்வை தான் இட்டேன்.//

இந்தப் பதிவை அவர் பார்த்தாரா?
படத்தில் ஹீரோ, ஹீரோயின் யாரு?

Admin சொன்னது…

படம் வெற்றி பெற வாழ்த்துவோம்..

நல்ல பதிவு நண்பா..கடைசி வரிகளைப் படித்தபோது மனம் கனத்தது.

Unknown சொன்னது…

விரைவில் ID எடுக்கப்பாருங்க
நல்ல தகவல்

Fusion The Explorer சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Fusion The Explorer சொன்னது…

30 வருட இடை வெளிக்கு பின் ஈழத்தில் மீண்டும் உதிக்கிறது தமிழர் வாசனை. அவ் வாசனை முழு ஈழத்திற்கும் பரவி வீறு நடை போட வேண்டும் என்பது என் வாஞ்சை. வாழ்த்துக்கள்.

N.H. Narasimma Prasad சொன்னது…

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top