புதன், 1 டிசம்பர், 2010

என்னைக் கவர்ந்த ரஜனியின் படங்கள் 10

              இது யாரும் எழுதாத ஒன்றை நான் எழுத வரவில்லை தான் அனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனையிருக்கும் அதிலும் நான் கொஞ்சம் வித்தியாசமாக ரசிப்பவன் பெரும்பாலானவர் ரஜனியின் ஸ்டைலுக்காகவே அவரை ரசிப்பவர்களாக இருந்தாலும்.. நான் ஒரு போதும் அவரது ஸ்டைலுக்காக அவர் படம் ஒன்றை திருப்பிப் பார்த்த்தில்லை.. எனக்கு அவர் நடிப்பில் அந்தக் கண்களே அதிகமாகப் பிடிக்கும் அதன் நடிப்பே பெரும் கதையை சொல்லாமல் சொல்லி விடும். ஞானப்பறவை திரைப்படத்தில் சிவாஜி தன் கண்ணளால் காட்டுவாரே அதற்கடுத்த்தாக கண்காளால் ஒரு கலை ஜாலம் காட்டும் நபராக என்னை கவர்ந்தவர் ரஜனி தான்..
       நான் அதிகம் ரசித்த படங்களை தருகிறேன் இது ஒரு தரப்படுத்தலில் அடங்கவில்லை.
தளபதி
மணிரத்தினத்தின் இப்படம் அவரது வித்தியாசமான படைப்புக்களில் ஒன்று. குறிபாகச் சொல்வதானால் தளபதி திரைப்படத்தில் நான் மறுபடி மறுபடி பார்த்த காட்சி எது தெரியுமா. அந்தக் கோயில் கேணியில் தாயை மறைந்திருந்து பார்க்கும் காட்சியும்அவர் முகத்தோடு பேசும் இவர்கண்களின் நளினமுமாகும். அதற்கேற்றால் போல் ஒலிக்கும் இசை ஞானியின் பாடல் “சின்னத் தாயவள் மனதில் பெரும் அழுத்த்த்தை உண்டாக்கும் காட்சியது.
படிக்காதவன்
அதிலே இவர் கண்கள் பேசும் காட்சியும் பின்னணி இசையும் மிகவும் தத்ரூபமானது அதுவும் யாருடன் பேசினார் தெரியுமா நடிகர் திலகத்துடனல்லவா. சிறுவயதில் பிரிந்த அண்ணனைக் காண்கிறான் ஒரு இளைஞன். தன்னை வியப்போடு பார்க்கும் அந்த இளைஞனை வியந்து பார்க்கும் வழக்கறிஞர்... அது ஒரு உச்சக்கட்ட நடிப்பு அதை விபரிப்பது சிரமமானது.
எந்திரன்
இப்படம் பற்றி பலர் பலதையும் சொல்லியாகிவிட்டது. அதிலும் அவர் கண்கள் பேசுகிறது ஆனால் அந்த இயந்திரத்தனம் அதை மறைக்க முயற்சிக்கிறது. அதில் வரும் வசியின் பார்வையை பாரங்கள் எப்போதும் ஒரு அறிவு கூர்மையான அப்பாவித்தனம் இருக்கும்.
தர்மதுரை
அதிலும் இவரது உச்சக்கட்ட காட்சி ஒன்றை நான் கண்டேன். தம்பி செய்த கொலைக்காய் கைதாகிப் போகும் வேளையில் ஒரு பார்வை பார்ப்பாரே. அதிலே பாசம், ஏமற்றம், வஞசகம் எல்லாம் தெரியம்.
சிவாஜி
அதிலே பெரும் உணர்ச்சியை ஏற்படுத்தாத காட்சி தான் ஆனால் அங்கும் அவர் கண் பேசிக் கொள்ளும்.. அதுதாங்க ஸ்ரேயாவை ஏற இறங்கப் பார்ப்பாரே அதைத் தான் சொல்கிறேன்.
சந்திரமுகி
அதிலே ஒரு நகைச்சுவைக் காட்சியை குறிப்பிடுகிறேன். வடிவேலுவுடன் அந்த பேய் பற்றி விபரிப்பாரே அப்போது முழிக்காதா எங்களையும் திருதிருவென்று முழிக்க வைத்தவிடுவார்.
ஆறிலிருந்து அறுபது வரை
அதிலேயும் ஒரு உணர்ச்சிபூர்வமான கட்டம் தான். அவரது இறுதித் தருணங்களில் அந்த சாய்மனைக் கட்டிலில் இருந்தபடி ஒரு ஏக்கப்பார்வை ஒன்றை உதிர்ப்பாரே ஒரு ஏழ்மையின் தோற்றப்பாடு, ஏதொ சாதித்த்தாய் தெறிக்கும் பார்வைக் கோடுகள் எம் மனதை உருக்கும் காட்சியது.
தில்லு முல்லு
அதில் ஒரு காட்சியில் திணரறும் வேளையில் இரு விழிகளையும் குவித்தும் விரித்தும் ஒரு ஜாலம் காட்டுவாரே நினைவிருக்கா..?
மன்னன்
அதிலே ஒரு சமையல் குறிப்பிற்கு சமைப்பாரே ஒரு சமையல் அப்போது கடைசியில் ஒரு எமாற்றப்பார்வை பார்ப்பாரே அந்தப் பார்வை எப்படியிருந்தது.
முத்து
நானும் கடைசிப்படத்தை ஒரு அழுத்த்த்துடன் தர வேண்டுமல்லவா.... தந்தையாக இவர் நடித்த முழுக் காட்சியிலும் இவரது கண்களுக்கு  தான் உயரிய நடிப்புக் கொடுக்கப்பட்டிருக்கும். ஆமாம் அப்படி ஒரு சாந்தமான ஈர்க்கும் கண்கள். “விடுகதையா இந்த வாழ்க்கைஎன்று பாடலிலே இன்னும் உயர்வாகக் காட்டியிருப்பார்கள்.

        என்ன பதிவு பொலிவில்லாமல் இருக்கிறதா..?? எனது ரசனை இப்படிப்பட்டது தான் உண்மையில் எனக்கு ஆர்ப்பாட்டமான, ஹீரோயிசமான காட்சிகள் பிடிக்காது நடிப்பவரை மட்டும் தான் நான் நடிகனென்று எற்றுக் கொள்ளும் மனம் உடையவன். அந்த வகையில் தான் நான் விரம்பிப் பார்க்கும் படங்களும் அமைந்திருக்கும். நான் ஒரு ரஜனியின் தீவிர ரசிகனில்லை (அப்ப கமலுடைய ஆளா..??) என்றால் அதுவும் இல்லை என்பதே என் பதில் நான் வேறொருவருடைய ஆள்..
என்னை தொடர்பதிவிற்கு அழைத்த முதல் நபரும், என் தளத்தை தன் தளத்தில் பார்வைக்கு வைத்த முதல் நபரும், என் பதிவுலகத்தின் ஆரம்ப கால நண்பருமான ரஹிம் காசாலி  அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
       அடுத்ததாக இன்னுமொரு நண்பரும் தொடர்பதிவிற்கழைத்திருந்தார் அடுத்த பதிவில் அதை தொடர்கிறேன். யார் அந்த நடிகர் என எனத் தெரிய வேண்டுமா வேறு யாருமில்லை நடிப்பின் வரைவிலக்கணங்களில் ஒன்றாக கருதப்படும் கமல்ஹாசன் பற்றியது தானுங்கோ...
விரைவில் தொடர்கிறேன் சகோதரம்...

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

66 கருத்துகள்:

Unknown சொன்னது…

nice! :-)

சசிகுமார் சொன்னது…

அருமையான படங்கள்.

நல்ல தொகுப்பு ஆனாலும் "முள்ளும் மலரும்" மிஸ்ஸிங்!!!

KANA VARO சொன்னது…

நல்ல ரசனை தான் சகா...

Jana சொன்னது…

ம்ம்ம்..."சுப்பர்ஸ்ரார்ஸ் சுப்பர் ரென்" நன்றாகத்தான் உள்ளது. படிக்காதவன் திரைப்படத்தில் ஒருகாட்சி, தன் தம்பிதான் ரஜினி என்று தெரிந்தவுடன் சிவாஜி கணேசன், ஜெயிலில் வந்து ரஜினியுடன் பேசும் ஒரு காட்சி, அதில் ரஜினி பேசாமல், கண்களால் பேசுவார்..
நடிப்பு திலகத்தின் முன்னால் அந்த கட்டம் அபாரம்.

ஷஹன்ஷா சொன்னது…

ஃஃஃஃஆறிலிருந்து அறுபது வரை
அதிலேயும் ஒரு உணர்ச்சிபூர்வமான கட்டம் தான். அவரது இறுதித் தருணங்களில் அந்த சாய்மனைக் கட்டிலில் இருந்தபடி ஒரு ஏக்கப்பார்வை ஒன்றை உதிர்ப்பாரே ஒரு ஏழ்மையின் தோற்றப்பாடு, ஏதொ சாதித்த்தாய் தெறிக்கும் பார்வைக் கோடுகள் எம் மனதை உருக்கும் காட்சியது.ஃஃஃஃஃ

உண்மைதான் அண்ணா...என்னை முதன் முதலில் அழவைத்த படம் என்றால் இதுதான்......

pichaikaaran சொன்னது…

மாறுபட்ட ரசனை

ஷஹன்ஷா சொன்னது…

உங்கள் ரசனையை மதிக்கிறேன்...

அடுத்த பதிவுக்கு காத்திருப்பு....

THOPPITHOPPI சொன்னது…

சுடு சோறு மன்னா பதிவு அருமை

நிரூஜா சொன்னது…

பாட்ஷாவை விட்டுடீங்களே தலைவா..!

roshaniee சொன்னது…

வித்தியாசமான பதிவு

ஹரிஸ் Harish சொன்னது…

ரைட்டு...

நல்ல தொகுப்பு

karthikkumar சொன்னது…

தொகுப்பு அருமை நண்பா

Bavan சொன்னது…

கண்ணா நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி.. தொகுப்பு சூப்பர்மா..:P

பெயரில்லா சொன்னது…

எல்லா பட விமர்சனமும் டாப்

பெயரில்லா சொன்னது…

தளபதி ஆக்‌ஷன் அவதார்

பெயரில்லா சொன்னது…

கமல் கலக்க போறாரு

கவி அழகன் சொன்னது…

Supper star

ஆமினா சொன்னது…

//நான் ஒரு போதும் அவரது ஸ்டைலுக்காக அவர் படம் ஒன்றை திருப்பிப் பார்த்த்தில்லை..//
me too............

நல்ல தொகுப்பு!!!

கலக்கிட்டீங்க

nis சொன்னது…

நல்ல பட தொகுப்பு சுதா
அதுவும் தள்ளபத்தி அம்மா பாடலுடன் தொடங்கியது அசத்தல்

Unknown சொன்னது…

படிக்காதவனை குறிப்பிட்டது நல்ல ரசனை..

Unknown சொன்னது…

நல்ல தொகுப்பு!!!

pichaikaaran சொன்னது…

தொகுப்பு அருமை..

எழுதிய விதம், நீங்கள் இதுவரை எழுதியதிலேயே மோசம் ...

இவ்வளவு கஷ்டப்பட்டு இதை எழுதி இருக்க தேவையில்லை என்பது என் கருத்து

சுதா ரொம்ப சுருக்கமா இருக்கே,ஆனா நல்லாருக்கு,

சுதா பதிவு ரொம்ப சின்னதா இருக்கே ,ஆனா கடுகு சிறுத்தாலும் காரம் குறையலே

suneel krishnan சொன்னது…

அதே சின்ன தாய் அவள் அந்த பாடலில் ,ஸ்ரீ வித்யா தலையிலிருந்து விழும் பூ அதை உள்ளங்கையில் வெச்சுகிட்டு ஒரு நொடி முக பாவனை கொடுப்பாரு !!கிளாஸ் !! உங்கள் ரசனை மிகவும் ரசிக்க தக்கது ..
முத்துவில் -அப்பா இவரு யாரு -? சாமிய உள்ள வெச்சுகிட்டு வெளிய தேடுரான்கப்பா .இந்த இடத்தில் கை தட்டி சிரிப்பார் :)அழகாக இருக்கும் ..
படிக்காதவன் -தம்பி ஆங்கிலத்தில் திட்டும் போது -மிகை இல்லாமல் ,எஸ் ,எஸ் தாங்க்யு என்று சொல்லி கண் கலங்குவார் ,எல்லாமே அற்புதம் :)
நல்ல தேர்வு,நல்ல ரசனை

anuthinan சொன்னது…

ரஜனியின் படங்களை தெரிவுகள் என்று தெரிந்து எடுப்பது சிரமம் ஆனது!!

பாட்சா விடுபடாது மன வருத்தமே!!

உங்கள் ரசனை சற்று வித்தியாசமாக இருப்பது நன்றாகவே இருக்கிறது

ராஜகோபால் சொன்னது…

சுடு சோறு ரஜனியின் படங்களை நல்லாருக்கு

Chitra சொன்னது…

ரஜினிக்கு, வசீகரத்துடன் உள்ள காந்த கண்கள் தான். பகிர்வுக்கு நன்றிங்க.

அன்பரசன் சொன்னது…

நல்ல தொகுப்பு

பெயரில்லா சொன்னது…

//எனக்கு அவர் நடிப்பில் அந்தக் கண்களே அதிகமாகப் பிடிக்கும் //
உங்கள் ரசனை மிக வித்தியாசமாய் இருக்கிறது நண்பா! :)
தேர்வு நன்று

வைகை சொன்னது…

வித்தியாசமான ஆனால் நல்ல ரசனை மதி! என் உலகத்திற்கு உங்களை ஆவலோடு எதிபார்க்கிறேன் http://unmai-sudum.blogspot.com/

ம.தி.சுதா சொன்னது…

ஜீ... said...

ஃஃஃஃஃnice! :-)ஃஃஃஃ

நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

சசிகுமார் said...

ஃஃஃஃஅருமையான படங்கள்ஃஃஃஃ

வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள் சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

சிவா என்கிற சிவராம்குமார் said...

ஃஃஃஃஃஃநல்ல தொகுப்பு ஆனாலும் "முள்ளும் மலரும்" மிஸ்ஸிங்!!ஃஃஃஃஃ

வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள் சகோதரா...
ஆமாம் அதிலும் அந்த தங்கைக்காக ஏங்கும் காட்சியிருக்கிறத அனால் 10 படம் தானே பதிவிலெடுத்தேன் சகோதரா..

ம.தி.சுதா சொன்னது…

KANA VARO said...

ஃஃஃஃஃநல்ல ரசனை தான் சகா..ஃஃஃஃஃ

வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள் சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

Jana said...

ஃஃஃஃம்ம்ம்..."சுப்பர்ஸ்ரார்ஸ் சுப்பர் ரென்" நன்றாகத்தான் உள்ளது. படிக்காதவன் திரைப்படத்தில் ஒருகாட்சி, தன் தம்பிதான் ரஜினி என்று தெரிந்தவுடன் சிவாஜி கணேசன், ஜெயிலில் வந்து ரஜினியுடன் பேசும் ஒரு காட்சி, அதில் ரஜினி பேசாமல், கண்களால் பேசுவார்..
நடிப்பு திலகத்தின் முன்னால் அந்த கட்டம் அபாரம்ஃஃஃஃஃ

ஆமாம் அண்ணா...

ம.தி.சுதா சொன்னது…

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...

ஃஃஃஃஉண்மைதான் அண்ணா...என்னை முதன் முதலில் அழவைத்த படம் என்றால் இதுதான்......ஃஃஃஃ

ஆமாம் தம்பி மிகவும் அழுத்தமாக இருக்கும்..

ம.தி.சுதா சொன்னது…

பார்வையாளன் said...

ஃஃஃஃஃமாறுபட்ட ரசனைஃஃஃஃ

வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள் சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...

ஃஃஃஃஉங்கள் ரசனையை மதிக்கிறேன்...

அடுத்த பதிவுக்கு காத்திருப்பு.ஃஃஃஃ

நன்றி.. இன்னும் ஒரு சூடு போட்டாச்சு வாங்க..

ம.தி.சுதா சொன்னது…

THOPPITHOPPI said...

ஃஃஃஃசுடு சோறு மன்னா பதிவு அருமைஃஃஃஃஃ

மிக்க நன்றி சகோதரா..

ம.தி.சுதா சொன்னது…

நிரூஜா said...

ஃஃஃஃஃபாட்ஷாவை விட்டுடீங்களே தலைவா..!ஃஃஃஃஃ

ஆமாம் அதிலும் நண்பன் சாகும் தருணம் மிகவும் அழுத்தமானது
நன்றி சகோதரா..

ம.தி.சுதா சொன்னது…

roshaniee said...

ஃஃஃஃஃஃவித்தியாசமான பதிவுஃஃஃஃ

நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

ஹரிஸ் said...

ஃஃஃரைட்டு...ஃஃஃ

நன்றி சகோதரம்.

ம.தி.சுதா சொன்னது…

வெறும்பய said...

ஃஃஃஃநல்ல தொகுப்புஃஃஃஃ

வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள் சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

karthikkumar said...

ஃஃஃதொகுப்பு அருமை நண்பாஃஃஃஃ

வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள் சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

Bavan said...

ஃஃஃகண்ணா நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி.. தொகுப்பு சூப்பர்மா..:Pஃஃஃ

வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள் சகோதரா... கண்ணா நாம ஒரு தடவை நன்றி சொன்ன 100 பதிவுக்கு சொன்ன மாதிரி..

ம.தி.சுதா சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஃஃஃஃஎல்லா பட விமர்சனமும் டாப்
தளபதி ஆக்‌ஷன் அவதார்
கமல் கலக்க போறாருஃஃஃஃ

மிக்க நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

யாதவன் said...

ஃஃஃஃSupper starஃஃஃ

நன்றி அண்ணா..

ம.தி.சுதா சொன்னது…

ஆமினா said...

ஃஃஃஃஃநல்ல தொகுப்பு!!!

கலக்கிட்டீங்கஃஃஃ

நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

nis said...

ஃஃஃநல்ல பட தொகுப்பு சுதா
அதுவும் தள்ளபத்தி அம்மா பாடலுடன் தொடங்கியது அசத்தல்ஃஃஃஃ

எனக்கு அம்மா மேல் தான் பற்று அதிகம் சகொதரம்...
மிக்க நன்றி..

ம.தி.சுதா சொன்னது…

பாரத்... பாரதி... said...

ஃஃஃபடிக்காதவனை குறிப்பிட்டது நல்ல ரசனை.ஃஃஃ

மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

பார்வையாளன் said...

ஃஃஃஃஃஃதொகுப்பு அருமை..

எழுதிய விதம், நீங்கள் இதுவரை எழுதியதிலேயே மோசம் ...

இவ்வளவு கஷ்டப்பட்டு இதை எழுதி இருக்க தேவையில்லை என்பது என் கருத்துஃஃஃஃஃஃ

ஏற்றுக் கொள்கிறேன் சகோதரம்...
மிக்க நன்றி..

ம.தி.சுதா சொன்னது…

சி.பி.செந்தில்குமார் said...

ஃஃஃஃஃசுதா ரொம்ப சுருக்கமா இருக்கே,ஆனா நல்லாருக்கு
சுதா பதிவு ரொம்ப சின்னதா இருக்கே ,ஆனா கடுகு சிறுத்தாலும் காரம் குறையலேஃஃஃஃ

சாகோதரம் என் வாழ்க்கை வட்டம் போல் தான் என் பதிவும்..
மிக்க நன்றி...

ம.தி.சுதா சொன்னது…

dr suneel krishnan said...

ஃஃஃஃஃஅதே சின்ன தாய் அவள் அந்த பாடலில் ,ஸ்ரீ வித்யா தலையிலிருந்து விழும் பூ அதை உள்ளங்கையில் வெச்சுகிட்டு ஒரு நொடி முக பாவனை கொடுப்பாரு !!கிளாஸ் !! உங்கள் ரசனை மிகவும் ரசிக்க தக்கது ..
முத்துவில் -அப்பா இவரு யாரு -? சாமிய உள்ள வெச்சுகிட்டு வெளிய தேடுரான்கப்பா .இந்த இடத்தில் கை தட்டி சிரிப்பார் :)அழகாக இருக்கும் ..
படிக்காதவன் -தம்பி ஆங்கிலத்தில் திட்டும் போது -மிகை இல்லாமல் ,எஸ் ,எஸ் தாங்க்யு என்று சொல்லி கண் கலங்குவார் ,எல்லாமே அற்புதம் :)
நல்ல தேர்வு,நல்ல ரசனைஃஃஃஃஃ

ஆமாம் என்னை விட நீங்கள் தான் அரமையாக ரசித்திருக்கிறீர்கள் நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

Anuthinan S said...

ஃஃஃஃஃஃரஜனியின் படங்களை தெரிவுகள் என்று தெரிந்து எடுப்பது சிரமம் ஆனது!!

பாட்சா விடுபடாது மன வருத்தமே!!ஃஃஃஃஃ

ஆமாம்.. ஆனால் பத்துத் தானே எடுத்டுதேன் சகோதரா...
மிக்க நன்றி..

ம.தி.சுதா சொன்னது…

ராஜகோபால் said...

ஃஃஃஃசுடு சோறு ரஜனியின் படங்களை நல்லாருக்குஃஃஃஃ

நன்றி சகோதரா ஆனால் பார்க்கிறவங்க வித்தியாசமா நெனைக்கப் போறானுவள்...

ம.தி.சுதா சொன்னது…

Chitra said...

ஃஃஃரஜினிக்கு, வசீகரத்துடன் உள்ள காந்த கண்கள் தான். பகிர்வுக்கு நன்றிங்கஃஃஃ

மிக்க நன்றி அக்கா...

ம.தி.சுதா சொன்னது…

அன்பரசன் said...

ஃஃஃநல்ல தொகுப்புஃஃஃ

மிக்க நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

Balaji saravana said...

ஃஃஃஃ//எனக்கு அவர் நடிப்பில் அந்தக் கண்களே அதிகமாகப் பிடிக்கும் //
உங்கள் ரசனை மிக வித்தியாசமாய் இருக்கிறது நண்பா! :)
தேர்வு நன்று
உங்கள் ரசனை சற்று வித்தியாசமாக இருப்பது நன்றாகவே இருக்கிறதுஃஃஃ

வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள் சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

வைகை said...

ஃஃஃஃஃவித்தியாசமான ஆனால் நல்ல ரசனை மதி! என் உலகத்திற்கு உங்களை ஆவலோடு எதிபார்க்கிறேன் http://unmai-sudum.blogspot.com/ஃஃஃஃஃ

வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள் சகோதரா...
வந்துட்டா போச்சுது...

கலையன்பன் சொன்னது…

வித்தியாசமான கருவாய் கண்களை
வைத்து....
மாறுதலாய் இந்தப் பதிவு!
சுடுசோறு போலவே சுவை...!

ம.தி.சுதா சொன்னது…

கலையன்பன் said...

ஃஃஃஃஃவித்தியாசமான கருவாய் கண்களை
வைத்து....
மாறுதலாய் இந்தப் பதிவு!
சுடுசோறு போலவே சுவை...ஃஃஃஃ

வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள் சகோதரா...

டிலீப் சொன்னது…

தகவல் உலகம் - விருதுகள்
http://dilleepworld.blogspot.com/2010/12/blog-post_03.html

ம.தி.சுதா சொன்னது…

டிலீப் said...
தகவல் உலகம் - விருதுகள்
http://dilleepworld.blogspot.com/2010/12/blog-post_03.html

]]]]]]]]]]]]]]]]]

மிக்க நன்றி டிலீப்...

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top