Featured Articles
All Stories
aravanaippom லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
aravanaippom லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 நவம்பர், 2015

எம் குழந்தை ஒன்றுக்கு எம்மால் முடிந்த உதவி


கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிாிவு செல்வாநகா் கிராமத்தைச் சோ்ந்த எஸ். சுரேஸ் ஆனந் அவா்களுடைய 17 வயது மகள் ஜெனிகா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தெல்லிப்பளை மருத்துவமனையில் சிகிசைப் பெற்று வருகின்றாா்.

தற்போது ஜெனிகாவுக்கு உயிா் வாழ்வதற்கான சிகிசை மேற்கொள்வதற்கு 750000 ரூபா ( ஏழு இலட்சத்து ஜம்பதாயிரம்) தேவையென மருத்துவா்கள் அறிவித்துள்ளனா்.
மூன்று பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளையான ஜெனிகாவின் மருத்துவச் செலவை தேட முடியாது சாரதியான தந்தை சுரேஸ் ஆனந்த போராடி வருகின்றாா். குடும்பம் மிகவும் வறியது .

தனது மகளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று தந்தை பல இடங்களிலும் ஏறி இறங்கி வருகின்றாா். மகளை காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கிறாா்.மகளை காப்பாற்ற துடிக்கும் பாசமுள்ள தந்தையின் தவிப்பை இங்கு வாா்த்தையில் விபரிக்க முடியவில்லை.
இதுவரைக்கும் மகளின் மருத்துவச் செலவுக்குரிய பணம் கிடைக்கவில்லை.

அன்பான உதவும் உள்ளங்களே முடிந்தவா்கள் ஜெனிக்காவின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்

தொடா்புக்கு.
சுரேஸ்ஆனந்த இல.145 செல்வாநகா் கிளிநொச்சி. தொலைபேசி 075 7535050, 0770755050. 

Via - Murukaiya Thamilselvann
8:04 PM - By ம.தி.சுதா 0

சனி, 20 செப்டம்பர், 2014

மனமிருந்தால் உதவுங்கள் இக் குழந்தைகளுக்கு (அரவணைப்போம்)

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

இப்பகிர்வானது ஆர்டிசம் வகை நோயால் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்கள் தொடர்பானது. இக் குழந்தைகளின் சிகிச்சைக்காக இந்தியா சென்றுள்ளார்கள்.
உதவ மனமிருப்போர் நிச்சயம் தங்களால் முடிந்ததை உதவுங்கள்.

இத் தகவல் ஆனது நாம் நீண்டகாலமாக நடாத்தி வரும் ”அரவணைப்போம்” செயற்திட்டத்திற்கு உதவி கோரப்பட்டது. அதை உறுதிப்படுத்தியே பகிர்கின்றேன்.

தொடர்புகள் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



எமது தனிப்பட்ட செயற்பாட்டில் முன்னெடுத்து வரும் அரவணைப்போம் திட்டத்தின் செயற்பாடுகளை அறிய இங்கே செல்லவும்.

மொத்தச் செயற்பாடுகளையும் பார்வையிட இங்கே செல்லவும் 
12:11 PM - By ம.தி.சுதா 0

சனி, 25 மே, 2013

சிறு நீரக மாற்றத்துக்காக மரணத்தோடு தவிக்கும் பெண்ணை காப்பாற்ற உதவுங்கள் (ஒலிக் கோப்பு இணைப்பு)

எனது அரவணைப்போம் செயற்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள இந் நபர் பற்றிய விபரங்கள் படத்தில் இணைக்கப்பட்டுள்ளது படத்தின் மேல் சொடுக்குவதன் மூலம் பெரிதாக்கிப் பார்வையிடலாம்.

இவர்கள் வன்னியின் இறுதி யுத்தத்தில் இருந்து மீண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இவரது குடும்ப விபரம், வாழும் சூழல், பணம், தொழில் விபரம் பற்றி ஒலிவடிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.


உதவ மனமுள்ளவர்கள் உங்களால் முடிந்த 100 ரூபாயைக் கொடுத்தால் கூட இப்பணம் இலகுவாக சேகரிக்கப்பட்டுவிடும். சிறு துளி பெரு வெள்ளம்

இந்த உலகத்தில் ஒவ்வொருத்தனும் மாற்றம் ஒன்றை விரும்பினால் நடைமுறைப்படுத்துவது பெரிய சிரமமான விடயமல்ல ஒரு கணம் சிந்தித்து முடிவெடுப்போம்.

உங்களால் முடியாவிட்டாலும் யாரோ ஒரு உதவ மனமுள்ளவர் உலகத்தின் எந்த மூலையிலாவது இருக்கக் கூடும். இப்பதிவை பேஸ்புக்கிலோ அல்லது  சமூக வலைத்தளங்களிலோ பகிர்ந்து இவருக்கு உதவுங்கள்
என் தனிப்பட்ட செயற்பாட்டில் முன்னெடுத்து வரும் அரவணைப்போம் திட்டத்தின் செயற்பாடுகளை அறிய இங்கே செல்லவும்.

2:51 PM - By ம.தி.சுதா 0

ஞாயிறு, 1 ஜூலை, 2012

ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
சரியாக ஒரு மாத இடைவெளியின் பின்னர் ஒரு அவசர உதவிக்காக என் தளம் மீண்டிருக்கிறேன். (தற்காலிகமாக)
காரணம் என்னவென்றால் என் கண்ணில் பட்ட ஒரு மாணவனுக்காகத் தான் இங்கு வந்திருக்கிறேன். இங்கு அவனது பெயரை நான் பகிரவில்லை. ஆனால் ஊரையும் பாடசாலையையும் தருகின்றேன். யாராவது உதவ விரும்பினால் அவர்களுக்கு நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

இம் மாணவன் யாழ் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் சாதாரண தரம் படித்துக் கொண்டிருக்கிறான். இவன் வல்வெட்டித் துறையிலுள்ள தீருவில் பகுதியை சார்ந்த மாணவன்.
இவனது சாதனை என்னவென்றால் இந்த பாடசாலைக்குள் நுழைந்த குறிப்பிட்ட சில நாளிலேயே அனைத்து மாணவர்களையும் முந்தி முழுப்பாடத்திலும் முதன்மைப் பெறுபேறைப் பெற்றிருக்கிறான். ஆனால் இவனது குடும்பப் பின்னணி சற்று மனதை நெருடுவது ஆகும்.

இறுதிப் போரில் போரிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அண்ணனின் முகவரி தெரியாது. தந்தை ராணுவ பகுதிக்குள் வரும் போது மறுமணம் செய்து இக் குடும்பத்தை கைவிட்டு விட்டார். தாயும் ஒரு தங்கையும் தம்பியுமே எஞ்சி நிற்பவர்கள். ஆனால் இப்படி சாதனை புரியும் இம் மாணவன் இடியப்பம், தோசை போன்றன விற்றுத் தான் பாடசாலையே வருகிறான். இது தான் இவர்களது நாளாந்த வருமானமும் கூட.

பழைய காலங்களில் இவை சாத்தியப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றைய நாளில் ஒரு சாதாரண தர மாணவனின் முழுமையான கற்கை நெறிக்கே மாதம் 2000 ரூபாய்  தேவைப்படும். நிச்சயம் எதிர்காலத்தில் நல்லதொரு நிலைக்கு வரக் கூடியவன் என இவனது விஞ்ஞான பாட ஆசிரியரே தெரிவிக்கின்றார்.

யாராவது இவனை பொறுப்பேற்று கற்பிக்க விரும்புபவர்கள் முன்வாருங்கள். தங்களால் இயலாவிடினும் பரவாயில்லை இத்தகவலை மற்றவருக்கு சேர்ப்பதன் மூலம் இவனுக்கு உதவுங்கள்

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

குறிப்பு - இது என் மீள் வருகையல்ல இன்னும் சில நாளில் ஓய்வின் பின்னர் மீண்டும் ஒரு புதிய மனிதனாக சந்திக்கிறேன். பழைய ம.தி.சுதா நிச்சயம் மீண்டும் வரமாட்டான். அன்பு உறவுகளின் வேண்டுகைக்கமைவாக மீண்டும் ஆரம்ப கால ம.தி.சுதாவாகவே மாறிக் கொள்கிறேன்.

சனி, 31 டிசம்பர், 2011

கல்விக்காய் ஏங்கும் பயிருக்கு கரம் கொடுக்க வாருங்கள்



முற்குறிப்பு - இப்பதிவானது சகோதரன் சந்துரு அவர்களின் வலைத் தளத்தில் பகிரப்பட்டிருந்தது. ஒரு பொது நோக்கிற்காக அவரின் அனுமதியுடனும். அந்தப் பாதிக்கப்பட்டவரின் ஒலிப்பதிவையும் பெற்று தங்களுடன் பகிர்கின்றேன். கல்வியில் சிறந்து விளங்கும் அந்தப் பையனை வாழ வைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். எனது முகவரிக்கோ (mathisutha56@gmail.com) அல்லது கீழே உள்ள சந்துருவின் முகவரிக்கோ தொடர்பு கொண்டால் அந்தப் பையனின் தொலைபேசி இலக்கத்தை தருகின்றோம்.
10:41 PM - By ம.தி.சுதா 12

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

மனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1)



 நீங்கள் தான் இவருக்கு உதவி செய்ய வேண்டுமென்பதில்லை. என்னைப் போல இந்தத் தகவலை பகிர்ந்தாலே போதும் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவராவது உதவக்கூடும்.
இணையத்தில் எத்தனை மணித்தியாலங்களைச் செலவழிக்கிறோம் சில நிமிடங்களை இதற்கும் செலவழியுங்களேன். ஒவ்வொருத்தரும் 10 பேருக்காவது பகிர்ந்தாலே போதும். நீங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவரானால் மாதத்தில் ஒரு வேளை தேநீரை இவர்களுக்குக் கொடுத்தாலே போதும் உறவுகளே...
இந்தத் திட்டத்தில் இதுவரை 5 பேர் பயன்பெற்றிருப்பது மிகவும் சந்தோசமான சேய்தியாகும்.

ஞாயிறு, 3 ஜூலை, 2011

மனித நேயம் கொண்ட தமிழரே எம் பாவம் தீர்ப்போம் வாருங்கள்

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி ?
                    மனிதனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஏதோ ஒரு பாவமாவது அறிந்தோ அறியாமலோ செய்திருப்போம். நாம் வாழும் காலம் மிக மிக சொற்பமானதே அந்தக் குறுகிய காலத்தில் எம்மால் முடிந்த சிறு உதவியாவது செய்தால் ஒரு மனத் திருப்தியிருக்குமல்லவா
                        இது ஒரு சுயலாபமற்ற திட்டம் சம்பந்தமானது . நாம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top