Featured Articles
All Stories
ipl லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ipl லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 மே, 2015

ஐபிஎல் போட்டிகளும் நான் வாங்கிக் கட்டும் சாத்திரங்களும்..

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?
ipl இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள நிலையில் ஒவ்வொரு ஐபில் க்கும் நான் ஏதாவது சொல்லப் போய் வங்கிக் கட்டுவதுண்டு இந்த முறை இன்னும் வாங்கிக் கட்டாத காரணத்தால் இந்த பதிவு....
கடந்த இரண்டு வருடமாக நான் வாங்கிக் கட்டியவையில் முக்கியமானது சென்னை அணியாகும். அதற்கு முதல் வருடம் சென்னையின் மஞ்சள் மற்றும் வெற்றிக்கு அதிக சாத்தியமான நிறம் மஞ்சள் என்றும் பலரை கவர்ந்திழுக்க கூடிய நிறம் மஞ்சள் அது தான் சென்ன ஆதரவுக்கு காரணம் என கூற வரிசை கட்டி வந்து அடி விழுந்தது.
(மஞ்சளின் ஆதிக்கம் மற்றும் சிறப்பு பற்றி ஒக்டோபசை வைத்து நான் எழுதிய பழைய பதிவு ஒன்று தொடுப்பு இதோ - ஒக்டோபஸ் சாத்திரம் உண்மைதானா? ஆய்வாளர் பார்வையில்... )
அதே போல போன வருடம் கூறியிருந்தேன். அதிக வருவாயை ஐபிஎல் லில் அள்ளிக் கொடுக்கும் அணி சென்னையணியாகும் அதனடிப்படையில் தான் அரையிறுதிவரையுமாவது உள் வருகிறது. அதுமட்டுமல்லாமல் சென்னைக்கான அதிகளவான* போட்டிகளைப் பாருங்கள் இரவுப் போட்டியாகவே இருக்கும் பகல் என்றால் அதிகளவில்* சனி ஞாயிறு தினங்களிலே தான் வருகிறது.
இவை எல்லாம் என் கணிப்பு எனக்கு அது சரியாகவே படுகிறது.. படும்....

அதே போலத் தான் இம்முறை ஒன்றை உளற விரும்புகிறேன்.
சென்னை என்பது கிழட்டு அணியாகி விட்டது. காரணம் டோனி என்ற சிங்கம் கிரிக்கேட்டின் இறுதிக் கட்டத்தில் நிற்கிறது. இனி இந்திய அணியின் தலைமைக்கு வரப் போபவர் கோலி தான் அதே போல அதிகளவு பெண்கள் பட்டாளம் ஒன்றை பின்னுக்கு வைத்திருப்பவர்.
இவையே போதும் ஐபிஎல் பணம் கொழிக்க. அதனால் ஏற்கனவே இந்திய அணியின் ரசிகர்களாலேயே வெறுக்கும் அளவுக்கு நடத்தையுள்ள விராட் கோலியை நாயகனாக்க வேண்டிய தேவை கட்டுப்பாட்டு சபைக்கு இருக்கிறது. ஏனென்றால் வரும் வருடம் கூட்டம் திரண்டு வருவதென்றால் அது கோலிக்காகத் தான் இருக்கும்.
அதனடிப்படையில் கோலியை கிண்ணம் வெல்ல வைக்க வேண்டிய தேவை ஒன்று உருவாகிறது. ஆனால் கோலி கிண்ணம் வென்றாலும் பெங்களுருக்கு இருக்கும் பார்வையாளர் பட்டாளத்தை விட சென்னைக்கான பட்டாளமே மிக மிக அதிகம்.
இதனடிப்படையில் கோலி இம்முறை தவற விட்டாலும் பெரும்பாலும் டோனிக்கு பின்னர் சென்னைக்குள் இழுத்து வரப்படப் போகும் ஒரு ராஜாவாக கோலி இருப்பார் என்பது என் நம்பிக்கையாகும்.
ஏனென்றால் கட்டுப்பாட்டுசாபைக்கு தேவைப்படுவது பணம் பணம் பணம்...

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
11:06 AM - By ம.தி.சுதா 1

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

சட்டத்தின் பிடியில் தவிக்கும் நடிகர் ஷாருக்கான் பிடித்ததும் பிடிக்காததும்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
ஹிந்தித் திரையுலகம் என்றவுடன் சட்டென நினைவுக்கு வருபவர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ஷாருக்கான் பிரதான இடத்தில் இருக்கிறார். இன்றும் கூட பல இளம் பெண்களின கனவு நாயகனாக வலம் வரும் ஸாருக்கானுக்கு 47 வயது கடந்து விட்டது என்று சொன்னால் யாருமே நம்பத் தயாராக இருக்கமாட்டார்கள்.
ஆப்கானிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்த ஸாருக்கான் 1965 ல் பிறந்தவராகும். 1988 ம் ஆண்டில் திரையுலகத்துக்குள் காலடி வைத்த இவர் King of Bollywood மற்றும் The Badshah of Bollywood என்ற பிரபல பட்டப் பெயர்களோடு அழைக்கப்படுகிறார்.
ஹிந்தித் திரையுலகத்தில் இவருக்கென்றும் பல தனி மதிப்பிருக்கிறது. உதாரணத்துக்கு இவர் தனது மனைவியான Gauri Khan தவிர்ந்த யாருக்குமே உதட்டு முத்தம் கொடுப்பதில்லை. எந்தப் பெரிய இயக்குனர் எப்படிக் கேட்டாலும் சம்மதிப்பதே இல்லை.

சரி இவரைச் சட்டம் என்ன செய்தது என்று பார்ப்போமா?

1) கடந்த வருடம் ஏப்ரல் 9 ல் ராஜஸ்தானில் இடம்பெற்ற கொல்கத்தா நைட் ரைடர் மற்றும் ராஜஸ்தான் றோயல் அணிக்கிடையிலான போட்டியில் கமரா முன்னாக பொது இடத்தில் புகைத்த குற்றத்திற்காக ராஜஸ்தான் பொலிசாரால் குற்றப்பத்தரிகையை ஏற்றிருந்தார். ஆனால் அந்த வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டப்பணம் எவ்வளவு தெரியுமா? 140 ரூபாய் மட்டுமே.
ஒரு பொது இடத்தில் புகைத்ததற்கான குற்றப்பணம் இவ்வளவும் தான் என சட்டம் நிர்ணயித்திருந்தாலும் அக் குற்றத்தைச் செய்தவர் சமூகத்தில் எந்த அந்தஸ்தில் உள்ளவர் என்பதை சட்டம் கணக்கிலெடுக்கத் தானே வேண்டும் என எனது நண்பரிடம் நான் வாதிட்டது இப்போதும் நினைவில் இருக்கிறது.


2) அதன் பின்னர் மே மாதம் 16 ல் தான் அடுத்த தலையிடி வந்தது. மும்பை வன்கடே மைதானத்தில் மும்பை இந்தியன் அணியை கொல்கத்த நைட் ரைடர் அணி வீழ்த்தியதன் பின்னர் நடந்த சம்பவமானது அவரை 5 ஆண்டுகள் அந்த மைதானப்பக்கமே தலை வைத்து படுக்க கூடாதென நீதிமன்றம் உத்தரவு போடுமறவுக்கு நிகழ்ந்தது.
நடந்தது என்ன?
ஷாருக்கான் தனக்கான தகுந்த ஆள் அடையாள அட்டை இல்லாமல் மைதானத்துக்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டி காவலர்கள் முரண்டு பிடித்திருக்கிறார்கள். இவரும் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் அதற்கிவர் கொடுத்த விளக்கம் தனது குழந்தைகளுடன் அத்து மீறி நடந்ததால் தான் தான் தகராறில் ஈடுபட்டதாக கூறியிருந்தார். ஆனால் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. பாவம் நம்ம சாருவுக்கு 5 ஆண்டு தடை பிறந்து விட்டது.
இவ்வளவு ஓட்டையுள்ள சட்டத்தில் இந்த ஓட்டையை தேடி அலையும் சாருக்கானுக்கு பெரிய ஓட்டையாக கிடைக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமும் ஆகும்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
11:52 AM - By ம.தி.சுதா 2

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top