வியாழன், 21 ஜூலை, 2011

சாருவின் ஆபாச அரட்டை உண்மையா? பொய்யா? ஆதார பதிவு

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி ?
      பதிவின் நோக்கம் - இந்தப் பதிவு சாருவுக்காக வக்காளத்து வாங்குவதற்காக எழுதப்படவில்லை. அவர் மீது சுமத்தப்பட்ட கருத்துக்களின் ஆதாரம் பற்றி எனக்கெதுவும் தெரியாது ஆனால் இப்படி ஒரு கோணத்தில் ஆராய்ந்து பார்த்தால் என்ன என எனது குறுக்கு மூளையில் யோசித்தது எழுதுகிறேன்.

             
அண்மைக்காலமாக எழுத்தாளர் சாரு அவர்கள் தமிழ் பொண்ணு என்ற பெண்ணுடன் அபாச அரட்டைகளில் ஈடுபட்டதாக பெரிய பூகம்பமே கிளம்பியது. உண்மையில் அதன் உண்மை பொய் எனக்குத் தெரியாது. ஆனால் நானும் இடக்கு முடக்காகச் சிந்தித்துப் பார்த்தேன். அது தானுங்க ஒருவரது இணையப் பக்கத்தையோ அல்லது அவரது அரட்டைப் பக்கத்தையோ நாம் விரும்பியது போல எடிட் செய்யலாம் இதைப்பற்றி சசிக்குமாரும் ஒரு பதிவு இட்டிருந்தார். உதாரணத்திற்கு கேபிள் சங்கரின் பக்கத்தை எடிட் செய்து படமாக தந்திருக்கேன் பாருங்கள். (படம் சிறிதாக இருந்தால் படத்தின் மேல் சொடுக்குங்கள்)

         பெரிதாக ஒன்றுமில்லை இங்கே நான் தந்திருக்கும் ஸ்கிரிப்டை 

javascript:document.body.contentEditable%20=%20'true';%20document.designMode='on';%20void%200

                 நீங்க மாற்ற வேண்டிய இணைய பக்கத்தின் அட்ரஸ் பாரில் போடுங்கள் அதன் பின் enter button ஐ தட்டுங்கள் இனி நீங்கள் மாற்றலாம் அதன் பின் அதை ஒரு புகைப்படமாக save செய்தால் சரி. அதன் பின் அதே இணையப்பக்கத்தை ஒரு முறை reload பண்ணினால் பழைய படி வந்து விடும். யாருடைய அரட்டைகளை மாற்ற வேண்டுமா ? ஏற்கனவே நடந்த ஒரு சாதாரண அரட்டையை உங்கள் மெயிலில் paste பண்ணுங்கள் அதன் பின் இதே முறையை பின் பற்றினால் சரி..
         இனி எதிலும் கவனமாக நடவுங்கள் உங்கள் ஆப்புகளை நீங்களே தீட்டிக் கொடுத்து விடாதீர்கள்.

குறிப்பு - உறவுகளே எனது தளம் திறக்க பிந்துகிறது என்ற அதிகளவான குற்றச்சாட்டால் புளொக்கர் லிஸ்ட்டை தற்காலிகமாக நீக்க வேண்டி வந்துவிட்டது மன்னிக்கவும்
           அத்துடன் எனது முகவரியை mathisutha.com ஆகா மாற்றுகிறேன்.
           அத்துடன் பதிவர்களுடனான எனது தொலைபேசி உரையாடல்கள் அனைத்தையும் நிறுத்தி எழுத்து மூலமான தொடர்புகளை மட்டுமே இனிமேல் பேணுவேன் ஆனால் என்னுடன் உறவு ரீதியாக யாரும் எந் நேரமும் தொடர்பு கொள்ளலாம் பதிவராக வேண்டாமே.......

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

55 கருத்துகள்:

ஆஹா ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு சுடுசோறு கிடைச்சிருக்கு எனக்குத்தான்.......

நிரூபன் சொன்னது…

வணக்கம் மிஸ்டர் மதி சுதா...

சுடு சோறு பெறுவதற்காக சகோதரி ஒருவர் வரிசையில் நிற்கிறார் போலிருக்கிறதே.

நிரூபன் சொன்னது…

சித்தாரா மகேஷ். said...
ஆஹா ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு சுடுசோறு கிடைச்சிருக்கு எனக்குத்தான்.......//

இது அலாப்பல், இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை, அண்ணனும் தங்கையும் பேசி வைத்து, ப்ளான் பண்ணி சுடு சோறு வாங்குவதாக அறிந்தேன்.

பெயரில்லா சொன்னது…

மூன்றாவது ஆளுக்கு கொஞ்சம் ஆறிய சோறாவது கிடைக்குமா !!

பெயரில்லா சொன்னது…

///அண்மைக்காலமாக எழுத்தாளர் சாரு அவர்கள் தமிழ் பொண்ணு என்ற பெண்ணுடன் அபாச அரட்டைகளில் ஈடுபட்டதாக பெரிய பூகம்பமே கிளம்பியது. // பாஸ், அந்த பொண்ணு "மதுரை பொண்ணு" என்ற பெயரிலே முகநூலில் கவிதை எழுதிக்கொண்டு இருந்தது. தமிழ் பொண்ணு என்பது பின்னர் தமிழச்சியால் மாற்றியது.

@நிரூபன்
பொறாமை சார் உங்களுக்கு இன்னிக்கு எனக்கு சுடுசோறு கிடைச்சிட்டென்று....cool cool

பெயரில்லா சொன்னது…

நீங்கள் சொன்ன போலவும் நடந்திருக்கலாம், ஆனால் ஆசாமி நித்தியானந்தா வெளியிட்ட சாருவின் மனைவி எழுதிய கடிதம்....!!!

சாரு செய்யக்கூடிய ஆள் தான் ;-)

நிரூபன் சொன்னது…

http://mathisutha.com/

இணைய உலகில் அடுத்த திருப்பம், மதிசுதாவின் பதிவில் ஒரு புதிய முயற்சி,

வாழ்த்துக்கள் மாப்ளே.

பெயரில்லா சொன்னது…

////நிரூபன் said...

வணக்கம் மிஸ்டர் மதி சுதா...

சுடு சோறு பெறுவதற்காக சகோதரி ஒருவர் வரிசையில் நிற்கிறார் போலிருக்கிறதே.///ஆறுதலாய் வரிசையில் நின்று குழப்படி செய்யாமல் சாப்பிட்டுவிட்டு போங்க;-)

நிரூபன் சொன்னது…

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி ?//

ஓமோம் அண்ணை, சேமம் என்னவோ உள்ளூராட்சித் தேர்தலோடு போய் விட்டது.

பெயரில்லா சொன்னது…

///இனி எதிலும் கவனமாக நடவுங்கள் உங்கள் ஆப்புகளை நீங்களே தீட்டிக் கொடுத்து விடாதீர்கள்.// உண்மை தான் ,இன்று சமூக தளங்களில் உலாவுபவர்கள் சற்றே அதிகம் கவனமாக இருக்க வேண்டும் .

கந்தசாமி. said...
////நிரூபன் said...

வணக்கம் மிஸ்டர் மதி சுதா...

சுடு சோறு பெறுவதற்காக சகோதரி ஒருவர் வரிசையில் நிற்கிறார் போலிருக்கிறதே.///ஆறுதலாய் வரிசையில் நின்று குழப்படி செய்யாமல் சாப்பிட்டுவிட்டு போங்க;)

இது நல்ல பிள்ளைக்கு அழகு......

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

நிரூபன் said...
சித்தாரா மகேஷ். said...
ஆஹா ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு சுடுசோறு கிடைச்சிருக்கு எனக்குத்தான்.......//

இது அலாப்பல், இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை, அண்ணனும் தங்கையும் பேசி வைத்து, ப்ளான் பண்ணி சுடு சோறு வாங்குவதாக அறிந்தேன்.

எட்டாப் பழம் புளிக்கும்.......

ஆகுலன் சொன்னது…

வந்துடன்.................
இது அலாப்பல், இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை, அண்ணனும் தங்கையும் பேசி வைத்து, ப்ளான் பண்ணி சுடு சோறு வாங்குவதாக அறிந்தேன்.
இதே பீலிங் தான் எனக்கும்.....
பதிவை வசித்து விட்டு வாறன்.........

மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............

ஆகுலன் சொன்னது…

எனக்கு இந்த தொழில் நுட்பம் ரொம்ப பிடிதிருக்குது..............(யாருக்கும் ஆப்பு அடிக்கலாம்)
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............

ஆகுலன் சொன்னது…

ஆனால் என்னுடன் உறவு ரீதியாக யாரும் எந் நேரமும் தொடர்பு கொள்ளலாம் பதிவராக வேண்டாமே.......
இந்த டீலிங் நல்லா இருக்குது அண்ணா...

.காம் ஆக மற்றியதிற்கு வாழ்த்துக்கள்...
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............

ஆமினா சொன்னது…

பிரபலமாயிட்டா இப்படி தான் ஆகுமோ........

உஷார் பதிவுக்கு நன்றிகள்

//எனது தொலைபேசி உரையாடல்கள் அனைத்தையும் நிறுத்தி எழுத்து மூலமான தொடர்புகளை மட்டுமே இனிமேல் பேணுவேன் //

ஒட்டுக்கேட்பு பிரச்சனை வந்துடும்னு பாக்குறீங்களா? :)

vanathy சொன்னது…

ஏதோ ஒரு பெண் ( தமிழோ, மதுரையோ ) முக நூலில் பார்த்த ஞாபகம். கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம். அதுக்காக இப்படியா சாரு பிகேவ் பண்ணனும்.

மதிசுதா டாட் காம் வரவேற்கிறேன்...

நிரூபன் சொன்னது…

இனி எதிலும் கவனமாக நடவுங்கள் உங்கள் ஆப்புகளை நீங்களே தீட்டிக் கொடுத்து விடாதீர்கள்//

மச்சி, எனக்கு ஏற்கனவே இரண்டு காதலிகள் இருப்பதால், இது தொடர்பாக கவலைப்படப் போவதில்லை. ஒருத்தி சிங்கள பொண்ணு, மற்றவா தமிழ். தமிழ் தெரிஞ்ச பிள்ளை என்ரை ப்ளாக்கில் ஏதும் எழுத மாட்டாது என்று நினைக்கிறேன். ஏன்னா அதுக்கு நான் ப்ளாக் எழுதுவதே தெரியாது.

ஹி...ஹி..

நிரூபன் சொன்னது…

சித்தாரா மகேஷ். said...
@நிரூபன்
பொறாமை சார் உங்களுக்கு இன்னிக்கு எனக்கு சுடுசோறு கிடைச்சிட்டென்று....cool cool//

என்னது நமக்குப் பொறாமையா?
ஹி....ஹி...

நிரூபன் சொன்னது…

அத்துடன் பதிவர்களுடனான எனது தொலைபேசி உரையாடல்கள் அனைத்தையும் நிறுத்தி எழுத்து மூலமான தொடர்புகளை மட்டுமே இனிமேல் பேணுவேன் ஆனால் என்னுடன் உறவு ரீதியாக யாரும் எந் நேரமும் தொடர்பு கொள்ளலாம் பதிவராக வேண்டாமே.......//

ஹா...ஹா.. இதென்ன புது டீலிங்...

காட்டான் சொன்னது…

மாப்பிள சாரு என்ன வேண்டி நின்றாரோ அதை நாங்கள் எல்லோரும் சேர்ந்து நிறைவேற்றுகிறோம். ஆமாப்பு அந்த ஆள் தனக்கு விளம்பரம் வேண்டுமென்றால் எது வேண்டுமானாலும் செய்வார்.. தனக்கு மூஞ்சி புத்தகத்தில் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் வெளிநாடுகளில்  எவ்வளவு இரசிகர்கள் இருக்கிறார்கள் என்று பீத்திக்கிறார்..!?

தன்னுடைய படைப்பிலேயே சிறந்தது ராச லீலாதான்னு கூவுறார் 75 புத்தகத்துக்கு மேல் விற்கவில்லைன்னு  வேறு கதறுகிறார் அட இவருடைய கணக்குப்படி பார்த்தாலே இவருடைய நன்பர்கள் அரைவாசிப்பேர் இவருடைய புத்தகங்களை வாங்கினாலே  ஐம்பதாயிரத்தை தாண்டிவிடும் விற்பனை..!?

அந்தப்பெண்னை இவர் தனது விளம்பரத்துக்கு பயன் படுத்தியுள்ளார் அவ்வளவே..! அதை இந்த முட்டாள் பெண் அறியவில்லையே என்று எண்னும்போது..!? 

ஆமாய்யா இப்ப இவரைப்பற்றி ஒரு பெண்மனி எழுதிவிட்டு சாருவ ஆதரித்து கதைப்பவர்கள் முதலில் அவர்களின் சகோதரிகள் தாய்மார்கள் என்று எல்லாரையும் சாருவிடம் விட்டுட்டு வந்து கதைக்கட்டுமாம்..!?

இப்பிடித்தான் ஊரில எங்கட மணியண்னை யாக்காவது அடி போட வேண்டுமெண்டா தண்னியடித்து விட்டு அவனுடைய அம்மாவ அல்லது சகோதரிகள இகழ்ந்து கதைபார்..!? அதைப்போலவே அந்த பதிவரும் எழுதினார்.. 

இவருக்கு மறுமொழி எழுதினால்..!?
ஊரில ஒன்று சொல்லுவார்களே குடிகாரனோட சண்டை பிடித்தால் உங்களில் யார் குடித்திருக்கிறீர்கள் என்று தெரியாதாம்..!

சரி அந்த பிள்ளை சொல்வதே சரி என்று வைத்துக்கொள்வோம் ..?

இவர் என்ன செய்திருக்க வேண்டும் ஆரம்பத்திலேயே சாருவின் நடவடிக்கைகள பார்து விலகியிருக்க வேண்டும்.. அப்படி இல்லை எனில் அதை அவர் இரசித்திருக்கிறார் என்றே அர்த்தம்...!?

சாருவிற்கு தேவையில்லை விளம்பரம் ...
இஞ்ச ஒரு பிள்ளையே பிள்ள பிடிக்க திரியுரார் அவருக்கு சிரமம் கொடுக்காமல் நாங்கள் எல்லோரும் போய் A+ பிளாக்கில் ஆகுலனுக்கு (நன்றாக எழுதுகிரார் நிசம்தாங்கோ) கருத்திட்டால் இரண்டு நாளைக்கு மாப்பிளைய வலையுலகில் பார்க்க முடியாது..!? எல்லோருக்கும் மறுமொழி இட்டுக்கொண்டிருப்பார்..! 

பாருங்கோ காட்டான் ஏன் இப்படி விமர்சனம் எழுதுகிறார் ..!??
காட்டானுக்கும் விளம்பர ஆசைதானுங்கோ..!?

காட்டான் குழ போட்டான்..

செங்கோவி சொன்னது…

தலைவரு பாதியிலேயே மெய் மறந்து பாஸ்வேர்டு வேற கொடுத்துட்டாரு..அதுக்கப்புறம் நடந்த சாட் யார் வேணா பண்ணி இருக்கலாம் இல்லையா..டெக்னிகல் பாயிண்ட்டுக்காகச் சொன்னேன்.சாருவை நியாயப்படுத்த அல்ல!

செங்கோவி சொன்னது…

//எல்லோரும் போய் A+ பிளாக்கில் ஆகுலனுக்கு (நன்றாக எழுதுகிரார் நிசம்தாங்கோ) கருத்திட்டால் இரண்டு நாளைக்கு மாப்பிளைய வலையுலகில் பார்க்க முடியாது..!? எல்லோருக்கும் மறுமொழி இட்டுக்கொண்டிருப்பார்..! //

ஹா..ஹா..சிரிச்சுக்கிட்டே இருக்கேன்..கலக்கிட்டீங்க காட்டான்.

Mahan.Thamesh சொன்னது…

அண்ணே கலக்கல் நடவடிக்கை . வாழ்த்துகள்

Unknown சொன்னது…

no no mee the firstu..

rajamelaiyur சொன்னது…

//
நிரூபன் said...

http://mathisutha.com/

இணைய உலகில் அடுத்த திருப்பம், மதிசுதாவின் பதிவில் ஒரு புதிய முயற்சி,

வாழ்த்துக்கள் மாப்ளே.

//


நானும் வாழ்த்துறேன்

rajamelaiyur சொன்னது…

இன்று என் வலையில்

உங்கள் கடவு சொல்லை (PASSWORD) பாதுகாப்பது எப்படி ?

பாலா சொன்னது…

ஒரு வேளை இப்படியும் இருக்கலாமோ?

ARV Loshan சொன்னது…

அட.. இப்பிடில்லாம் நடக்குமா? நடக்குதா?

நல்ல உஷார் பதிவு..

அது கிடக்க, மதி சுதா வாழ்த்துக்கள்...
கலக்குங்கள்..

உங்கள் பார்த்தேன்..
உங்கள் மனத்தைக் காயப்படுத்தும் விடயம் எதுவோ நடந்துள்ளது என ஊகிக்கிறேன்...
கவலையை வழமை போல் உதறி முன்னேறுங்கள்..

ஷஹன்ஷா சொன்னது…

அண்ணா.. நிறைய பேரை பாதுகாத்து விட்டுள்ளீர்கள்.. நல்ல எச்சரிக்கை,உஷார் பதிவு..

என்னமோ ஒரு விடயம் உங்களுக்கு எதிராக நடந்துள்ளது என்பது முகப்புத்தகம்,முன்னைய பதிவுகளினுாடாக தெரிகிறது..

எல்லாம் உங்களுக்கான சாதனைப்படிகள் தான்..
தளராதீர்கள்.. சாதியுங்கள்...

Unknown சொன்னது…

அட்டகாசமான பதிவு சுதா! இதுல சாரு வேற கேனத்தனமா தன்னோட பாஸ்வேர்ட் முதற்கொண்டு அந்தப்பொண்ணுக்கு கொடுத்திருக்கு!
ஆனா ஒண்ணு சூதானமா இருக்கணும் மாப்ள! :-)

தனிமரம் சொன்னது…

புதிய தளத்தில் வருவது கலக்கல்  இப்படியும் இருக்கலாம் என்பதில் ஜோசிக்க வேண்டிய விடயம்! 
பழஞ்சோறு சரிகிடைக்குமா இல்லை ஒரு பால் கோப்பி தருவீங்களா!

ஹேமா சொன்னது…

சுதா..பதிவும் பின்னூட்டங்களும் சோறா....சாருவா என்று கேட்க வைக்கிறது !

கவி அழகன் சொன்னது…

முழங்கால தவிர உடம்பு முழுக்க மூலை

தம்பி ஆகுலன் நிசமா கலக்கிறார் குட்டியன் டீம் தலைவரப்பா அவர்

சீனிவாசன் சொன்னது…

// அவர் மீது சுமத்தப்பட்ட கருத்துக்களின் ஆதாரம் பற்றி எனக்கெதுவும் தெரியாது //- ஆதாரம் பற்றி தெரியாது எனில் பொதுப்படையாய் பதிவிடலாமே, சாரு மற்றும் தமிழ்பொண்ணு என இருவரின் பெயரையும் தவிர்த்திருக்கலாம்.

maruthamooran சொன்னது…

நல்ல பதிவு சுதா!

மாய உலகம் சொன்னது…

எச்சரிக்கை பதிவு... வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

மாப்ள எப்படியும் இருக்கலாம்!...ஆனா இதுவரை எந்த எதிர்ப்பும் வரவில்லை நினைவில் கொள்ள வேண்டும் நாம்!.....இன்னொரு விஷயம் ப்ராப்ளம் ச்சே பிரபலம் இல்லாத ஒருத்தர் இந்நேரம் பொங்கி இருப்பாருங்க மாப்ள!........காமுக்கு அதான்யா .com க்கு வாழ்த்துக்கள்!

>> அத்துடன் பதிவர்களுடனான எனது தொலைபேசி உரையாடல்கள் அனைத்தையும் நிறுத்தி எழுத்து மூலமான தொடர்புகளை மட்டுமே இனிமேல் பேணுவேன் ஆனால் என்னுடன் உறவு ரீதியாக யாரும் எந் நேரமும் தொடர்பு கொள்ளலாம் பதிவராக வேண்டாமே.

hi hi ஹி ஹி புரிஞ்சிடுச்சு.. மதி சுதாவும் எங்கனவோ மாட்டி ஹி ஹி

சிந்திக்க வேண்டிய விசயம்..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

FARHAN சொன்னது…

http://mathisutha.com/


all the best .....

பெயரில்லா சொன்னது…

இணையத்தில் யாரு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கள்ளத்தனம் செய்துவிட முடியும்
இதை சாரு தான் செய்தாரா இல்லையா என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது

எதையும் முழுவதுமாக தெரிந்து கொள்ளாமல் ஒருவரை பற்றி கண்டபடி எழுதாதீர்கள் பதிவர்களே , வாசகர்களே

கார்த்தி சொன்னது…

புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள்! தகவலுக்கு நன்றிகள்

Mathuran சொன்னது…

சுதா அண்ணா... சாருவின் பிரச்சியை வித்தியாசமான கோணத்தில் ஆராய்ந்திருக்கிறீர்கள்..

.com இற்கு மாறியதற்கு வாழ்த்துக்கள்

உணவு உலகம் சொன்னது…

தொழில்நுட்பம் தொல்லை நுட்பம் ஆகிவிடக்கூடாது.

Muruganandan M.K. சொன்னது…

அணுகுமுறை வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் இவை எல்லாம் எனக்கு பிடிபடாத வில்லங்கங்கள்.

.காம் ஆக மற்றியதற்கு வாழ்த்துக்கள்.

erodethangadurai சொன்னது…

ரைட்டு .. ஆரம்பிச்சாசா

ஆகா இப்படிக்கூட செய்யமுடியுமா!.....அருமையான பயனுள்ள
தகவல் தந்தீர்கள் சகோ.(சரி என்னைப்பற்றி யாராவது உங்களிடம்
இவ்வாறு தவறாகச் சொன்னார்களா?....காரணம் நான் பலமுறை உங்கள்
ஆக்கங்களைப் படித்து கருத்திட்டுள்ளேன். ஆனால் இந்தச் சின்னம்
என் தளத்தில் தோன்றுவதில்லை அதுதான் ஏன் என்று புரியவில்லை.
என் தாய்நாட்டு உறவு என்னைத் தள்ளி வைக்கலாமா?.. என்னைத் திட்டவேண்டாமா?...)
பகிர்வுக்கு மிக்க நன்றி.............

பெயரில்லா சொன்னது…

while adding movie feed there should not be unwanted spaces between characters in the feed....if there is even a single unwanted space then u will not get essays in google reader....I have given u correct feeds....they wont cause u trouble...but in case if they cause trouble then it means there must be unwanted space between characters in the feed. erase space...add feed once again..

எஸ் சக்திவேல் சொன்னது…

மதி, சாருவின் இந்தச் சங்கதி உண்மையா பொய்யா என்று ஆராய்வதைவிட. சாரு தானே சொன்ன கதைகளை வைத்துப் பார்த்தால், தனிப்பட்ட முறையில் சாரு ஒரு மோசமான சைக்கோ. அவரின் எழுத்துக்களை மட்டும் படிப்போமே?

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top