திங்கள், 1 நவம்பர், 2010

இலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...

         தமிழ் இலக்கியம் என்பது ஒரு பெரும் கடல் அங்கு பாசியிலிருந்து வலம்புரி வரை எல்லாம் இருக்கிறது. முத்துக் குளிப்போருக்குத் தான் பெரிய விசயங்க கிடைக்கும் அவர்களின் தயவால் ஏற்படும் குழப்பத்தால் சலனப்படும் சில மீன்கள் சில சிறியவரின் தூண்டிலிலும் விழுகிறது. அப்படி ஒன்று தான் இக்கதை. என்னைப் பொறுத்த வரை என்னை மிகவும் கவர்ந்த இல்லை.. இல்லை மிகவும் பாதித்த நட்பு இது தான். 
          சென்றவாரம் ஒரு சகோதரி ஒருவர் நட்புப் பற்றி எழுதுங்களேன் எனக் கேட்டிருந்தார். எனக்கு உடனே இக்கதை தான் நினைவுக்கு வந்தது காரணம் இதுவும் ஒரு வதனப்பத்தகத்தி (FACE BOOK)  ற்கு பொருத்தமான கதை தான். வாருங்கள் பார்ப்போம்.

         அன்று காலையே தனது நண்பனான கோப்பெரும் சோழனை பார்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்த பிரசிந்தையார் கிளம்பத் தயாரானார். இத்தனைக்கும் புலவர் மன்னனின் முகத்தைப் பார்த்த்து கூட இல்லை. கோப்பெரும் சோழனின் கொடைக் குணத்தை கேள்விப்பட்ட புலவர் ஒரு கவி புனைந்த அனுப்பினார் அதானால் ஈர்க்கப்பட்ட மன்னன் அன்று முதல் இவருக்கு நட்பாகி விட்டான். 

 ~^~ புலவர் தனது பயணத்தை ஆரம்பித்தார்  ~^~ 

      சோழ நாட்டில் ஏற்பட்ட பெரும் கலகம் மன்ன்னின் மனதை பெரிதும் பாதித்தது மனமுடைந்த போன மன்னன் தன்மானம் காப்பதற்காக வடக்கிருக்க முடிவு செய்தான் (வட திசை நோக்கி உண்ணாவிரதம் போல் இருப்பது). 

அதன் போல் வடக்கிருந்து உயிரும் நீத்தார்.

 ~^~ புலவர் சோழ நாட்டிற்குள் நுழைகிறார் ~^~ 


          நாடே பெரும் கலக்கத்தில் இருந்தது. மக்களிடம் விசாரித்தார். மன்னன் இறந்த்தைக் கேள்வியுற்ற புலவர் பெரும் கலக்கத்தடன் அவன் முகம் காண ஓடி வருகிறார். ஓடி வந்து பார்த்த போது அவனுக்கு முழு கடமையும் முடிந்துவிட்டது. ஓடிப் போய் அவன் சமாதியருகில் விழுகிறார். புலவர் உயிரும் பிரிகிறது. 

         அனால் கதையின் அழுத்தமான பகுதி இதுவல்ல. மன்னனிற்கு அருகில் ஒரு இடம் ஏற்கனவெ தயாராக வைக்கப்பட்டிருந்த்து. காரணம் மன்னன் தான் உயிர் பிரியும் தருவாயில் கூறினானாம். என் நண்பன் ஒரு நாள் எனைப்பார்க்க வருவான் வந்தால் இதைக் கேள்வியுற்று என்னைச் சேருவான். அதற்காக அவனுக்கும் ஒரு இடம் தயாராக வைத்திருங்கள் என்றானாம்.

சொல்லி முடிக்கையிலேயே மனது கனக்கிறது. இப்படி ஒரு நட்பா...??? 

        இருவரும் முகம் கூடப் பார்த்ததில்லை புலவனுக்க மன்னின் கொடைக் குணத்தில் காதல் மன்ன்னுக்கோ புலவனின் புலமையில் காதல் இருவருக்குள்ளும் இருந்து ஒரே எதிர் பார்ப்பு இது தான் அது தான் அவர்களின் நட்பின் உறுதிக்கு பாத்திரமானது. 

          சகோதரர்களே ஒரு நட்பு களங்கப்படுகிறது என்றால் அங்கே பல எதிர்பார்ப்புகள் ஒருமித்து கலக்கிறது என்பது தான் என் எண்ணமாகும். தங்களின் கருத்தை எதிர் பார்க்கிறேன். 

         இங்குள்ள தவறை சுட்டிக் காட்டுவதற்கு எல்லோருக்கும் அனுமதியளிக்கப்படுகிறது. (நான் எல்லாம் தெரிந்தவனுமல்ல ஒன்றும் தெரியாதவனும் அல்ல) 

      பிடித்திருந்தால் இந்த நட்பின் இலக்கணம் பலரைச சேர ஒரு வாக்குப் போட்டுப் போகுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

28 கருத்துகள்:

ஜிஎஸ்ஆர் சொன்னது…

நட்பை பற்றி சொல்வதானல் நிறைய சொல்லலாம் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாதை நண்பனிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும் இதை பற்றி என்ன சொல்ல நட்பு ஒரு சரியான புரிதல் அதனால் தான் உன் நண்பனை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்கின்றனர்

இது என் நண்பர்கள் என நான் எழுதிய பதிவு
http://gsr-gentle.blogspot.com/2010/04/blog-post_1084.html

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

ம.தி.சுதா சொன்னது…

/////நட்பை பற்றி சொல்வதானல் நிறைய சொல்லலாம் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாதை நண்பனிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும் இதை பற்றி என்ன சொல்ல நட்பு ஒரு சரியான புரிதல் அதனால் தான் உன் நண்பனை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்கின்றனர்////
மிக்க நன்றி சகோதரா.. நட்பென்பது ஒவ்வொரு உயிர், பொருள் எதுவானலும் சரி அத்தனைக்கும் இன்றியமையாதது...

புதிய மனிதா. சொன்னது…

அருமையான தகவல் ..

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

இந்த நட்பை பார்த்துத்தான் காதல் கோட்டை படமெடுத்ததாக ஒரு பேச்சு உண்டு.

தினேஷ்குமார் சொன்னது…

நினைவுகள் பல
நிழலாய் ஆட
குடைபிடித்து நின்ற
ஆலமரம்.........

Unknown சொன்னது…

நானும் படித்தேன் நண்பா.. நான் வந்துபோனதிற்கான தடமாக இதனை விட்டுச் செல்கிறேன்

anuthinan சொன்னது…

உன்மையிலேயே எனக்கு இந்த உயரிய நட்பு பற்றி இன்றுதான் தெரியும் அண்ணா!!!

தெரிய வைத்தமைக்கு நன்றிகள்!!!

நல்ல நட்புக்கட்டுரை..!

ரொம்ப நல்லாயிருக்கு.

கவி அழகன் சொன்னது…

நல்ல பதிவு நட்பை பற்றிய பதிவு

மோகன்ஜி சொன்னது…

நட்பு தாய்மைக்கு இணையானது.. அழகான பதிவு!

இவர்களின் நட்பின் பெருமையை மீண்டும் அசை போட வைத்தமைக்கு நன்றி!

அன்பரசன் சொன்னது…

நல்ல கட்டுரை..

nimmie சொன்னது…

miga nalla pathivu.vazhthukkal.Amal

Chitra சொன்னது…

அருமையான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

விஷாலி சொன்னது…

இப்பொழுதும் இப்படிப்பட்ட நட்பு இருக்கிறது.

நன்றி

டிலீப் சொன்னது…

என் நண்பன் ஒரு நாள் எனைப்பார்க்க வருவான் வந்தால் இதைக் கேள்வியுற்று என்னைச் சேருவான். அதற்காக அவனுக்கும் ஒரு இடம் தயாராக வைத்திருங்கள்” என்றானாம்.

நண்பா என்னை மிகவும் பாதித்த வரி....

பேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் சண்டை தான் நானும் என் நண்பர்களும் எதற்காக இந்த நட்புக்காக....

மனதை பார்த்து காதல் வரும் என்று சொல்லுகிறார்கள் எனது கருத்தின் படி மனதை பார்த்து வருவது தான் நட்பு காதல் அல்ல..

வாழ்த்துக்கள் மதி

மிகவும் நல்லதோர் இலக்கியப் பதிவு... வாழ்த்துக்கள்...

இருப்பினும் தலைப்பு தான் இடிக்கிறது..
//இலக்கியத்தில் பிரபலமில்லாத சிறந்த நட்பு // எனத் தலைப்பிட்டிருகிறீர்கள்... கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பும்,

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

எனும் குறளும் நட்பைப் பற்றி பேசுமிடங்களிலெல்லாம் முதன்மை வகிக்கிறது என்பது என் பணிவான கருத்து... இவற்றை நீக்கி விட்டு எவரும் நட்பப் பற்றிய இலக்கிய உரைகள் ஆற்றுவதில்லை.. எனவே கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார், ஒளவை-அதியமான் போன்றவர்கள் நட்புக்கு இலக்கணம் வகுத்தவர்களில் பிரபலமானவர்கள்.

நன்றி

ARV Loshan சொன்னது…

அருமையான பகிர்வு சகோதரா..

Unknown சொன்னது…

Nice bro!
friendship has no expectations, conditions, rules & regulations..
:)

சசிகுமார் சொன்னது…

Nice Post

roshaniee சொன்னது…

நட்பை பற்றிய பதிவு மிகவும் அருமை

ம.தி.சுதா சொன்னது…

சகோதரர்களே என் இணைய இணைப்பில் ஏதோ சிக்கல் இருப்பதால் பதிலிட முடியவில்லை... ஓரிரு நாளில் பதிலளிக்கிறேன்...
மன்னிக்கணும்.. தங்களது தளத்திற்கும் என்னால் உடனே வர முடியாது...

"முத்துக் குளிப்போருக்குத் தான் பெரிய விசயங்க கிடைக்கும்"
ஒரு நட்பு களங்கப்படுகிறது என்றால் அங்கே பல எதிர்பார்ப்புகள் ஒருமித்து கலக்கிறது

மிக அரும‌ை நன்றி சுதா

Muruganandan M.K. சொன்னது…

எதிர்பார்ப்புகள் அற்ற நட்பு இங்கும் இல்லை. எங்கும் இருக்காது போலிருக்கிறதே?

ராஜவம்சம் சொன்னது…

வாசித்ததின் அடையாளம்.

Sivatharisan சொன்னது…

அருமையான பதிவு

santhilal சொன்னது…

kopperunsozhan pisiraanthaiyar natpu ilakkiyaththil miga pugazh petrathu .athiyamaan avvai,kumanan avvai natpum pugazh petrathu.sariththiraththil akbar beerbaal,kirushna devarayar thenaali raman natpu paadappuththagaththileye irukkum.NANRI.

மகேந்திரன் சொன்னது…

நல்லதொரு இலக்கிய திறனாய்வுடன்
அழகிய நட்பு பதிவு சகோதரரே...

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top