செவ்வாய், 15 ஜூன், 2010

இராவணன்

PM 6:12 - By ம.தி.சுதா 1

விமர்சனம்
இராவணன்


பாடல் என்றால் பிடிக்காதவர் யாருமே இருக்க முடியாது. அதுவும் இப்போது வரும் பாடல்களில் கவிநயத்தை ரசிக்கக் கூடியவாறு ஓரு சில பாடல்களே வருகிறது.
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை (அங்ககாடித்தெரு) என்ற பாடலுக்குப்பிறகு கேட்டவுடனேயே பிடித்த பாடல் என்றால் இதுதான்.
வைரமுத்துவின் இன்னுமொரு சித்திரம் என்றே சொல்லலாம். இராவணன் திரைப்படத்தில் முழுப்பாடலையும் அவரே ஒரே நாளில் எழுதிக்கொடுத்ததாக நண்பர் ஒருவர் சொன்னார். நம்பக்கூடிய விசயம் தான். இனிபடலுக்கு வருவோம்.



பாடியவர்- கார்த்திக், இர்பான்
இசை - A.R. ரகுமான்
படம் - இராவணன்

அடி தேக்கு மரக்காடு பெரிசுதான்
சின்ன தீக்குச்சி உயரம் சிறிசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி
கடும் தேக்கு மரக்காடு வெடிக்குதடி
உசிரே போகுதே உசிரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
மாமன் தவிக்கிறன் மடிப்பிச்சை கேட்கிறன்
மனசை தாடி என் மணிக்குயிலே
அக்கரைச் சீமையில் நீயிருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழமென்று தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைச்சு ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய உடம்பு கேட்கல
தனியா தவிச்சு உசிர் தடம் கெட்டு திரியுதடி
தனியா குறுகி என்னை தள்ளிவிட்டு சிரிக்குதடி
இந்த மன்மத கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என்மயக்கத்தை தீர்த்து வச்சு மன்னிச்சிடும்மா
சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கொட்டி வருகுதே
சத்தியமோ பத்தியமோ
இப்ப தலை சுத்திக்கிடக்குதே
(உசிரே போகுது)

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதிசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பிப் போகும் ஒழக்கத்தில
விதி சொல்லி வழி போட்ட மனசுக்குள்ள
விதி விலக்கில்லாத விதியுமில்ல
எட்ட இருக்கும் சூரியன் பார்த்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமோ போகல
பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலயே
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே
என் கட்டையும் ஒருநாள் சாயலாம்
என் கண்ணில உன்முகம் போகுமா
நாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணிருந்து மனசுக்குள்ள
சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கொட்டி வருகுதே
சத்தியமோ பத்தியமோ
இப்ப தலை சுத்திக்கிடக்குதே
(உசிரே போகுது)

இப்பாடலிலும் வைரமுத்த தானனது விசேட சொற்களுக்கு பஞ்சம் வைக்கல. கவி ஆர்வலரை கவரக் கூடிய இந்த சொற்பிரயோகம் வைர வரியோனுக்கு கை வந்த கலை மன்மத கிறுக்கு, மந்திரிச்சு விட்ட கோழி, அக்கினி பழம் என ஒரு ரவுண்டு அடித்திருக்கிறார்.
இப்பாடலில் வைரமுத்து பல விசயத்தை ஆணித்தரமாக மீள ஞாபகப்படுத்தியுள்ளார். உதாரணமாக ஐவிரல் தீண்டிட நினைக்குதடி என்ற வரியில் தீண்டல் சுகத்தை மீள ஞாபகப்படுத்தியிருக்கிறார். முதல் முறை கிள்ளிப்பார்த்தேன் என்று சித்திராவைப்பாட வைத்து விருது பெற்றது ஞாபகமிருக்கா ?
உவமைகள் சில முன்னர் அறிந்தது போல் இருந்தாலும் அதற்கான எடுகோள்கள் புதிதாய் கவர்ந்திளுக்கிறது. அதிலும்
எட்ட இருக்கும் சூரியன் பார்த்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமோ போகல
என்ற இந்த வரியே பாடலின் ஆழத்தையும் திரைப்படத்தின் கதையையும் உணர வைக்கிறதல்லவா.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

1 கருத்துகள்:

Unknown சொன்னது…

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே... எந்த காலத்திலயும் பொருந்க் கூடிய வரிகள்...

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top