ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

நா.முத்துக்குமாரின் பாடல் உருவான கதை - 2

8:34 PM - By ம.தி.சுதா 3

வணக்கம் உறவுகளே?


சில பதிவுகளை பதிய எண்ணிப் பதியாமல் போனாலும் பதிய எண்ணும் காலம் அவர்கள் கொடுத்த அழுத்தமான காலமாகவே இருக்கிறது.

இப்பாடல் உருவான கதை என எப்போதோ எழுத என நினைத்து விட்டு எழுத தவற விட்டிருந்த என்னை அக்கவிஞரின் மரணமே எழுத நினைவூட்டியுள்ளது.

தமிழ் கவிஞன் என்றால் எம் மனக்கண் முன் நிற்கும் முன்னணி கவிஞரில் ஒருவராகவும் முத்து அண்ணா என உரிமையோடு எல்லோராலும் அழைக்கக் கூடியதுமாக இருந்த நா. முத்துக்குமார் அண்ணன் தன் தமிழுக்கு உயிர் கொடுத்து விட்டு தன்னுயிரை முடித்துக் கொண்டு விட்டார்.

அவரது அத்தனை பாடல்களும் மனதுக்குள் நிற்பவை தான் அதில் அங்காடித் தெரு திரைப்படத்தில் அவரால் எழுதப்பட்ட அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடலை எப்படி உருவாக்கினார் என நான் அறிந்ததை சுருக்கமாகவே தருகிறேன்.

ஒரு ஆணின் மேல் பெண்ணுக்கோ பெண்ணின் மேல் ஆணுக்கு காதல் வயப்பட்டால் எதிர்ப் பாலினத்தவர்களது நல்லது கெட்டதை ஒரு தராசில் போட்டு நிறை பார்த்துக் கொள்வார்கள். அதில் நல்ல பக்கம் தாழ்ந்திருந்தாலே காதல் என்பது உணர்வுபூர்வமாய் பரிணமிக்கும்.
இத்திரைப்படத்தில் நாயகனானவன் நாயகியின் அழகை ஒரு தராசில் போடுகிறான் அதை அழகாக வரியாக்கி இசைக்குள் நுழைத்து அத்தனை பேர் மனதையும் வருட வைத்ததில் பெரு வெற்றி கண்டவர் அமரர் நா. முத்துக்குமார் அவர்களாவார்.

சரி வரியை எப்படிக் கோர்த்தார் என்றால் அது கற்பனை வரியல்ல என அவரே ஒரு செவ்வியில் கூறியிருந்தார் எப்படியென்றால் தனது திருமண அழைப்பிதழில் தன் வாழக்கைத் துணை பற்றி வரைந்து வைத்திருந்த வரிகளைத் தான் அங்கடித் தெருவில் இசையால் உயிர் கொடுக்க வைத்து எம்மையும் உணர்வூட்டியிருக்கிறார் பாடலாசிரியர்.

அவ் வரிகள்.......

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் எப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் பெரிதாய் எதுவும் படித்ததில்லை
அவளை படித்தேன். முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிப்பதில்லை
இருந்தும் கவனிக்க மறப்பதில்லை

அவள் அப்படி…

அவள் நாய் குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவல் இருந்தால் தடுப்பதில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்குவதில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்த காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கை விரல் மோதிரம் தங்கமில்லை
அவள் கைபிடித்திடும் ஆசை தூங்கவில்லை

அவள் சொந்தமன்றி வேறு எதுவும் இல்லை
வேறு எதுவும் இல்லை

அவள் அப்படி…

அவள் பட்டு புடவை என்றும் அணிந்ததில்லை
அவர் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை
அந்த அக்கறை போல வேறு இல்லை

அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமில்லை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் அன்றி வேறு எதுவும் இல்லை
சொந்தம் அன்றி எதுவும் இல்லை
எனக்கு எதுவும் இல்லை

அவள் அப்படி…

எமக்கு தமிழால் உணர்வளித்த அச் செம்மல் எம் மனதில் உயிராய் என்று வாழ அவர் வரிகளே போதும்

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

3 கருத்துகள்:

Seeni சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

Yarlpavanan சொன்னது…

'அழகே அழகே'

'ஆனந்தயாழை மீட்டுகிறாய்'

ஆகிய பாடல்களைக் கேட்கக் கேட்க

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள்

நம்மோடு வாழ்வதை நாம் உணருவோமே!

ஆதலால்,

ஒரு பாவலன் / கவிஞன்

சாவடைந்ததாக வரலாறு இல்லையே!

ஆயினும்

நாமும்

துயர் பகிருகிறோம்!

தனிமரம் சொன்னது…

எதிர்பாராத இழப்பு .அன்னாரின் ஆத்மா சாந்தியடைட்டும்!

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top