வியாழன், 21 ஏப்ரல், 2011

பதிவர்களுக்கு லட்ச ரூபாய் போட்டி (அவசர பதிவு)

AM 11:34 - By ம.தி.சுதா 30

             எமக்குத் தெரிந்த ஒரு விடயத்தை பத்து நபர்களிடம் பகிருவதில் வரும் சந்தோசமே ஒரு தனி ரகமாக இருக்கிறது. என்னடா இவனை ஒரு புளொக்கிலயும் காணக்கிடைக்கலியே ஊட்டுக்குள்ளால் வந்து பதிவு மட்டும் போடுறானே என நினைக்கிறீங்களா ? சில சந்தோசங்கள் பல வலிகளை பறக்கச் செய்யும். அதே போலத் தான் இதுவும். எனது சுடு சோறை பெற இன்னும் ஓரிரு வாரங்கள் பொறுத்திருங்களேன்.
         
             சென்ற வருடம் டிசம்பர் 6 ம் திகதி பதிவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசுப் போட்டி... என்ற பதிவின் மூலம் இத்தகவலை பகிர்ந்திருந்தேன். இத்தனை காலத்தின் பின் இப்போது தான் இந்த தள நிரல் கிடைத்துள்ளது. தமிழ் நிருபர் என்ற தளத்தின் மூலம் இடம் பெறும் இப்போட்டியில் நீங்களும் சென்று கலந்து கொள்ளுங்கள். இதனை எந்தளவுக்கு உறுதிப்படுத்தலாம் என தெரியவில்லை அனால் என்னை பொறுத்தவரை ஏதோ செய்யப் போகும் நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன என்று சொல்வார்களே அந்த நிலமை தான்.
           இது வரை 100 பதிவுகள் கூட சமர்ப்பிக்கப்படவில்லை. ஒரு முயற்சி தானே செய்து பாருங்கள் அதற்கு முன் அவர்களது நிபந்தனைகளையும் பாருங்கள். இதில் ஒரு நிபந்தனையில் எனக்கு எள்ளளவும் உடன்பாடில்லை அது சகல பதிவர்களுக்கும் இருக்கும் என்பது எனக்கு வெளிச்சமாகவே தெரிகிறது அதை சிவப்பு எழுத்திட்டுள்ளேன்.

அவர்களின் அறிவிப்பு வரிகள்..

தமிழ் நிருபர், வலைஞர் ஒருவருக்கு ரூபாய் ஒரு லட்சம் (இந்திய பண மதிப்பு) வழங்கவிருக்கிறோம்.
தமிழ் வலைஞர்களை ஊக்கப்படுத்தவும் தமிழ் இணைய வாசர்களை வலைஞர்களாக மாற்றவுமே இப்பரிசு திட்டம்!

தமிழ் நிருபரின் இந்த பரிசு திட்டத்தில் வலைஞர்கள் தங்களை சேர்த்துக்கொள்ள சில நிபந்தனைகளை ஏற்க வேண்டும்.

1) பயன்பாட்டில் இருக்கும் தங்கள் வலைப்பூ மற்றும் வலைத்தளத்தில் தமிழ்நிருபர் வாக்களிப்பு பட்டையையும் இணைப்பு நிரலியையும் ஒரு லட்சம் பரிசு நிரலியையும் கண்டிப்பாக நிறுவிருக்க வேண்டும்.

2) அந்த பயனர் சொந்த பதிவுகள் மட்டுமின்றி வேறு தளத்தில் இருக்கும் தரமான பதிவுகளையும் சேர்க்கலாம்.

3) பயனர் அதிக அளவில் பதிவுகளை சேர்த்திருக்கவேண்டும்.
4) தமிழ் பதிவுகளை மட்டுமே சேர்க்கவேண்டும். பிற மொழி பதிவுகள், தரமற்ற பதிகளை கண்டிப்பக தவிற்கவேண்டும்.

5) தமிழ் நிருபரின் தமிழ் பக்கங்களுக்கு மட்டுமே இந்த பரிசு திட்டங்கள் செல்லுபடியாகும். ஆங்கில பக்கங்களுக்கு இல்லை!

வாசக பயனர்களுக்கு மதிப்பு மிக்க நூறு பரிசுகள்

பதிவர்களை ஊக்கப்படுத்துவது போலவே, வாசர்களையும் தமிழ் நிருபர் ஊக்கப்படுத்த விரும்புகிறது. ஏனவே, வாசக பயனர்களுக்கு மதிப்பு மிக்க நூறு பரிசுகளை வழங்கவிருக்கிறோம். இந்த பரிசு திட்டத்தின் நிபந்தனைகளாக மேலே சொன்ன 3,4,5 உள்ளிட்டவைகளை ஏற்க வேண்டும். அத்துடன் ஒருவர் ஒரு பயனர் பெயரில் மட்டுமே பதிகளை சேர்க்கவேண்டும்.

காலமும் இடமும்

தமிழ் நிருபரின் பரிசு திட்டத்தில் சேர்ந்துக்கொள்ள 2011 செப்டம்பர் 16 அன்று கடைசி நாளாகும். 2012-ம் வருட செப்டம்பர் 16 அன்று பரிசுகள் அறிவிக்கப்பட்டு, 2012-ம் வருட டிசம்பர் 31-ம் தேதிக்குள்ளாக வழங்கப்படும்.

இந்திய ரூபாய் ஒரு லட்சம் பரிசு தொகை தேர்வு செய்யப்பட்ட பயனர் எந்த நாட்டில் இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்ட நிலையில் அனுப்பி வைக்கப்படும். ஆனால், வாசக பயனர்களுக்கான மதிப்பு மிக்க நூறு பரிசுகள் இந்தியா,இலங்கை முகவரியில் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.இதில் இந்தியா,இலங்கை அல்லாத வேறு நாட்டில் இருப்பவர்கள் கலந்து கொண்டு,வெற்றி பெற்று அவர்கள் இந்தியா,இலங்கை முகவரி தந்தால் அனுப்பி வைக்கப்படும்.

            அங்கே சென்றிணைய இங்கே சொடுக்குங்கள் அதுக்கு முன்னாடி சில வழமையான விடயங்கள் இருக்கல்லவா அதையும் செய்திவிட்டு போங்களேன்...

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

30 கருத்துகள்:

சுடுசோறு எனக்குத்தான்..........

Ram சொன்னது…

வழக்கமான விசயத்தை பண்ணிட்டேன்.. ஆனா நீங்க சொன்னது எனக்கு பிடிக்கல.. நான் கலந்துகிடல..

நான் கலந்துக்கிறதா இல்லை...

Unknown சொன்னது…

நன்றி மாப்ள எனக்கு விருப்பம் இல்ல!

கவி அழகன் சொன்னது…

பதிவை இணைத்தவருக்க பதிவை எழுதினவருக்க பரிசு கிடைக்கும் நிபந்தனை இரண்டாம் நிபந்தனை படி இணைத்தவருக்கு கிடைக்கும் என்றால் ஒதுகொள்ளமட்டேன்

பாட்டு ரசிகன் சொன்னது…

இணைந்து விடுவோம்..
தவலுக்கு நன்றி...

ADMIN சொன்னது…

தகவலுக்கு மிக்க நன்றி மதி..!

Unknown சொன்னது…

நன்றி சுதா! யாராவது பரிசு பெற்றால் வாழ்த்த தயாராக இருக்கிறேன் ஹி ஹி!

Mohamed Faaique சொன்னது…

http://faaique.blogspot.com/2011/04/equal-3.html

நிரூபன் சொன்னது…

இன்னைக்கு ஏப்ரல் பூலா என்று திகதியைப் பார்த்தா... லிங் எல்லாம் கொடுத்து நிஜமான செய்தி என்று வேறை சொல்லியிருக்கீங்க;-))

அவ்...


சகோ, பதிவெழுதிப் பரிசு வாங்கிவதில் எனக்கு உடன்பாடு இல்லை.. ஆனாலும் இவ் வலைத் திரட்டி பற்றிய தகவலுக்கு நன்றிகள் சகோ

ஓக்கே ட்ரை பண்ணிடுவோம்

செல்வா சொன்னது…

கண்டிப்பப் போய் பாக்கிறேங்க :-)) தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி .. ஹி ஹி

செல்வா சொன்னது…

உங்களுக்கு ஒரு போட்டியாளர் குறைஞ்சிட்டார் .. ஹி ஹி .. எங்க ஆபீசுல அந்த சைட் ப்ளாக் பண்ணி வச்சிருக்காங்க :-))

Chitra சொன்னது…

Present Sir.. :-)

//கோமாளி செல்வா said...
கண்டிப்பப் போய் பாக்கிறேங்க :-)) தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி .. ஹி ஹி///


நீ உருப்பட போவதில்லை போ.....

தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி... எனக்கு விருப்பம் இல்ல.

நான் வரலப்பா இந்த ஆட்டைக்கு....

பெயரில்லா சொன்னது…

mikka nanry for the info mathy.
vetha.

தனிமரம் சொன்னது…

இப்படியான மயக்கம் தரும் பரிசு எனக்கு வேண்டாம் எனக்கெள்ளாம் அனுபவம் இல்லை வலையில் போட்டியிட!

vanathy சொன்னது…

ஒரு முறை சூடு வாங்கியாச்சு நான் இந்த விளையாட்டு வரலை.

தகவலுக்கு நன்றி சுதா

Unknown சொன்னது…

தகவலுக்கு நன்றி

தகவலுக்கு மிக்க நன்றி

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

USEFUL INFO

ஹேமா சொன்னது…

ஆர்வமுள்ளவர்களுக்கு நல்ல தகவல் சுதா !

பெயரில்லா சொன்னது…

தமிழ்நிருபர் குறித்து ஏற்கனவே அறிந்தேன். செய்தி தளமாக வந்து தற்போது திரட்டியாக மாற்றியுள்ளார்கள்.

இது போன்ற போட்டிகளில் எனக்கு விருப்பம் இல்லை. வேண்டுமாயின் அந்த ஒரு லட்சம் ரூபாயை எதாவது சமூக சேவை அமைப்புக்கு வழங்கலாம்.

எல்லாமும் மார்க்கெட்டிங்க் தந்திரம் தான். இருந்தாலும் தமிழ்நிருபர் தளம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.

உணவு உலகம் சொன்னது…

//MANO நாஞ்சில் மனோ said...

//கோமாளி செல்வா said...
கண்டிப்பப் போய் பாக்கிறேங்க :-)) தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி .. ஹி ஹி///


நீ உருப்பட போவதில்லை போ..... //
வாயில நல்ல வார்தையே வரப்படாதா?

கார்த்தி சொன்னது…

தகவலுக்கு நன்றி!!

Geetha6 சொன்னது…

நன்றி

VINO BROWSING சொன்னது…

நான் இப்பதான் வலையே எழுத ஆரம்பிச்சு 5 போஸ்ட் தான் போட்டு இருக்கேன்.... அதனால இப்ப வேணாம்.......

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top